மேலும் அறிய

தருமபுரியில் குற்றச் செயல்களை தடுக்க 3000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

தருமபுரி காவல் உட்கோட்ட பகுதியில் குற்றச் செயல்களை தடுக்க 3000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்.கஞ்சா கடத்தலை தடுக்க அதி நவீன கேமராக்கள் பொருத்த திட்டம்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 25 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக 1200க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற செயல் நடைபெறாமல் இருக்க கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக முக்கிய இடங்கள் இடங்களில், மக்கள் அதிகமாக வந்து செல்கின்ற பகுதிகளை கண்டறிந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய சாலைகள், முக்கிய வீதிகள், முக்கிய சந்திப்புகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி 25 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட எல்லைகளில் சுமார் 3,000 மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே குற்ற செயல்கள் குறைந்து காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது.
 

தருமபுரியில் குற்றச் செயல்களை தடுக்க 3000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
 
மேலும் ஒரு சில இடங்களில் நடைபெறும் திருட்டு வழிப்பறி, நகைப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் தருமபுரி நகரில் பேருந்துகளில் 10-க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் மற்றும் பெண்களிடம் நகை பறித்ததாக மூன்று பெண்களை காவல் துறையினர், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 22 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் தருமபுரி நகர பேருந்து நிலையம், கடைவீதி, மார்க்கெட், அரசு மருத்துவமனை, நகரின் முக்கிய சாலை சந்திப்புகள், முக்கிய தெருக்கள், திரையரங்குகள், வங்கி, நகை கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
 
குறிப்பாக தருமபுரி நகரில் 750 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 512 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும்  உள்ள கண்காணிப்பு கேமராக்களை பொருத்த காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு குடியிருப்பு சங்கங்கள், கிராமங்களில் உள்ள இளைஞர்கள் நற்பணி மன்றம், காவல் துறையினர் உடன் இணைந்து கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொப்பூர், தருமபுரி, மதிகக்கோன்பாளையம், காரிமங்கலம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் சுழற்சி முறையில் தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு பணிகளிலும், ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குற்றச் செயல்களை தடுக்க இந்த ஆறு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 1600 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய சாலை சந்திப்புகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
 

தருமபுரியில் குற்றச் செயல்களை தடுக்க 3000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
 
தருமபுரி நகரில் மட்டும் 28 லட்சம் மதிப்பிலான 512 கேமராக்கள் பதிவு செய்ய பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வழிப்பறி, திருட்டு, பிக்பாக்கெட் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட 89 பேரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 45 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதில் தங்க நகைகளை இழந்தவர்களிடம், அவர்களுடைய நகைகளை திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது கஞ்சா கடத்தலை தடுக்க அதிநவீன கேமராக்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வெல்லோட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கண்காணிப்பு கேமராக்களில் வாகனங்கள் அதிவேகமாக சென்றாலும் அதனுடைய நம்பர் பிளேட் தெளிவாக பதிவாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கண்காணிப்பு கேமராக்கள் மாவட்ட ஆட்சியரின் பொது நிதியிலிருந்து வாங்கப்பட உள்ளது. மேலும் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் நகரின் மூன்றாவது கண்ணாக கருதப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆட்டோமேட்டிக் லாக் உயிரைப் பறித்ததா? - சேலம் கார் விபத்தில் கணவன், மனைவி பலியான அதிர்ச்சிப் பின்னணி
ஆட்டோமேட்டிக் லாக் உயிரைப் பறித்ததா? - சேலம் கார் விபத்தில் கணவன், மனைவி பலியான அதிர்ச்சிப் பின்னணி
Salem power shutdown: சேலத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... லிஸ்டில உங்க பகுதியும் இருக்கா ?
Salem power shutdown: சேலத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... லிஸ்டில உங்க பகுதியும் இருக்கா ?
இந்தியாவின் 2-வது மிக ஆபத்தான சாலை: தொப்பூரில் நவீன விபத்து தடுப்பு நடவடிக்கைகள்!
இந்தியாவின் 2-வது மிக ஆபத்தான சாலை: தொப்பூரில் நவீன விபத்து தடுப்பு நடவடிக்கைகள்!
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

15 நாட்கள்.. 25 கொலைகள்! POLICE உடன் திடீர் மீட்டிங்! ORDER போட்ட CM விஜய்
சிறுவன் வெட்டிக்கொலை! 1 மாதமாக சதித்திட்டம்! மதுரை கொலை பகீர் பின்னணி!
”எல்லாம் கரெக்ட்டா போகுதா” நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு! அமைச்சர் பிரபு அதிரடி
MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ விமர்சனத்திற்குள்ளாகும் அமைச்சர்களின் செயல்பாடுகள்..!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ இங்குதான் உறுப்பினர் சேர்க்கையா!
ADMK MLA Resigned : ‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன், தட்டி தூக்கிய ஆதவ்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தது எப்படி ?
‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணி!
ADMK MLA Joins TVK: உடையும் அதிமுக... 3 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா.. அசுர வளர்ச்சி அடையும் தவெக
ADMK MLA Joins TVK: உடையும் அதிமுக... 3 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா.. அசுர வளர்ச்சி அடையும் தவெக
Ramya Bharathi IPS : ’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
Iran on Hormuz: நிம்மதிடா யப்பா.! ஹார்முஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்.? அது என்ன தெரியுமா.?
நிம்மதிடா யப்பா.! ஹார்முஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்.? அது என்ன தெரியுமா.?
Arun IPS : ’த.வெ.க ஆட்சியில் அருண் IPSக்கு முக்கிய பதவி?’ முதல்வரின் முடிவு என்ன ?
’த.வெ.க ஆட்சியில் அருண் IPSக்கு முக்கிய பதவி?’ முதல்வரின் முடிவு என்ன ?
School Reopening: பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா.? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்
பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா.? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்
Embed widget