மேலும் அறிய

தருமபுரியில் குற்றச் செயல்களை தடுக்க 3000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

தருமபுரி காவல் உட்கோட்ட பகுதியில் குற்றச் செயல்களை தடுக்க 3000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்.கஞ்சா கடத்தலை தடுக்க அதி நவீன கேமராக்கள் பொருத்த திட்டம்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 25 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக 1200க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற செயல் நடைபெறாமல் இருக்க கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக முக்கிய இடங்கள் இடங்களில், மக்கள் அதிகமாக வந்து செல்கின்ற பகுதிகளை கண்டறிந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய சாலைகள், முக்கிய வீதிகள், முக்கிய சந்திப்புகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி 25 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட எல்லைகளில் சுமார் 3,000 மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே குற்ற செயல்கள் குறைந்து காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது.
 

தருமபுரியில் குற்றச் செயல்களை தடுக்க 3000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
 
மேலும் ஒரு சில இடங்களில் நடைபெறும் திருட்டு வழிப்பறி, நகைப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் தருமபுரி நகரில் பேருந்துகளில் 10-க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் மற்றும் பெண்களிடம் நகை பறித்ததாக மூன்று பெண்களை காவல் துறையினர், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 22 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் தருமபுரி நகர பேருந்து நிலையம், கடைவீதி, மார்க்கெட், அரசு மருத்துவமனை, நகரின் முக்கிய சாலை சந்திப்புகள், முக்கிய தெருக்கள், திரையரங்குகள், வங்கி, நகை கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
 
குறிப்பாக தருமபுரி நகரில் 750 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 512 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும்  உள்ள கண்காணிப்பு கேமராக்களை பொருத்த காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு குடியிருப்பு சங்கங்கள், கிராமங்களில் உள்ள இளைஞர்கள் நற்பணி மன்றம், காவல் துறையினர் உடன் இணைந்து கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொப்பூர், தருமபுரி, மதிகக்கோன்பாளையம், காரிமங்கலம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் சுழற்சி முறையில் தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு பணிகளிலும், ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குற்றச் செயல்களை தடுக்க இந்த ஆறு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 1600 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய சாலை சந்திப்புகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
 

தருமபுரியில் குற்றச் செயல்களை தடுக்க 3000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
 
தருமபுரி நகரில் மட்டும் 28 லட்சம் மதிப்பிலான 512 கேமராக்கள் பதிவு செய்ய பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வழிப்பறி, திருட்டு, பிக்பாக்கெட் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட 89 பேரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 45 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதில் தங்க நகைகளை இழந்தவர்களிடம், அவர்களுடைய நகைகளை திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது கஞ்சா கடத்தலை தடுக்க அதிநவீன கேமராக்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வெல்லோட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கண்காணிப்பு கேமராக்களில் வாகனங்கள் அதிவேகமாக சென்றாலும் அதனுடைய நம்பர் பிளேட் தெளிவாக பதிவாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கண்காணிப்பு கேமராக்கள் மாவட்ட ஆட்சியரின் பொது நிதியிலிருந்து வாங்கப்பட உள்ளது. மேலும் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் நகரின் மூன்றாவது கண்ணாக கருதப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Denmark Warns America: ''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
US Venezuela China: சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Denmark Warns America: ''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
US Venezuela China: சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Embed widget