மேலும் அறிய

நூற்றுக்கணக்கான மில்லியன்களை தாண்டிய செலவு பட்டியல்? தாய்லாந்தில் திணறும் கோத்தபாய ராஜபக்ச?

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்ச தாய்லாந்தில் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவதால் விரைவில் நாடு திரும்ப உள்ளதாக தகவல்.

தாய்லாந்தில் உள்ள  இலங்கை முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்ச அதிக செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அவர்  கூடிய விரைவில் நாடு திரும்ப காத்திருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோத்தபாய ராஜபக்ச 24 ஆம் தேதி இலங்கை வருவதாக கூறியிருந்த நிலையில் அவரது பயணம் தள்ளிப்போடப்பட்டிருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு குறைபாடுகள்  இருப்பதாக கூறி அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

கோத்தபாய ராஜபக்ச இலங்கை வருவதற்கு விருப்பத்துடன் இருப்பதாகவும் ,ஆனால் அவரின் பாதுகாப்பே முக்கிய பிரச்சினை எனவும், அவர் நாடு திரும்பும் திட்டத்தை சற்று தள்ளி வைக்குமாறு உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளதாக இலங்கை அரசு அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு கூறியுள்ளார்.

இலங்கையில் கோத்தபாய ராஜபக்சவுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டால் அவர் மிக விரைவில் நாடு திரும்புவார் என அதிகாரி தெரிவித்திருக்கிறார். அதேபோல் தாய்லாந்தில் செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்வதால் நாடு திரும்புவதை விரைவுப்படுத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது தாய்லாந்தில் கோத்தபாய ராஜபக்சவின் செலவு பட்டியல் நூற்றுக்கணக்கான மில்லியன்களை கடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 தனியார் ஜெட், அதிபர் தங்குவதற்கான சகல வசதிகளும் உடைய அறை, எந்த நேரத்திலும் பாதுகாப்பு என அனைத்திற்கும் அதிக செலவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இந்த செலவுகள் அவரது தனிப்பட்ட செலவா அல்லது இலங்கை அரசாங்கத்தின் செலவா அல்லது அவரது உறவினர்கள் செலவு செய்கிறார்களா என தகவல் ஏதும் வெளியாகவில்லை.

 இந்நிலையில் கோத்தபாயவின் நெருக்கமான அவரது சில ஆதரவாளர்களால் இந்த செலவுகள் ஏற்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் சென்று வந்த பின்னரே கோத்தபாய ராஜபக்ச நாடு திரும்ப  தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 90 நாள் விசாவில் தாய்லாந்தில் தங்கி இருக்கும் கோத்தபாய ராஜபக்ச வரும் செப்டம்பர் மாதம் இலங்கை வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருந்த போதிலும் அவர் 90 நாள் விசாவில் இருப்பதால் 90 நாட்கள் முடியும் தருவாயில் இலங்கை திரும்பலாம் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக கோத்தாபய ராஜபக்சவின் வருகையினை ஒட்டியே அவரது மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தாய்லாந்து தங்கியுள்ள கோத்தபாய  ராஜபக்சவுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கியிருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டாம் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள், அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் சிறப்பு பாதுகாப்புடன் தேவையான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வழியாக உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க ,கோத்தபாய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கா செல்லும் நடவடிக்கைகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். அவருக்கு அங்கு கிரீன் கார்ட் விசா வாங்குவது தொடர்பாக வழக்கறிஞர்கள்  ஈடுபட்டிருப்பதாகவே தகவல் வெளியாகியிருக்கிறது.
 கோத்தாபய ராஜபக்ச மீண்டும் இலங்கை வருவாரா அல்லது தாய்லாந்தில் இருந்து நேரடியாக அமெரிக்க செல்வாரா என்பதை  பொறுத்திருந்து  தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar Election 2025 Result: பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
US New H-1B Visa Policy: “வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
“வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Govt pongal gift | பொங்கல் பரிசு ரூ.5000 மக்களுக்கு HAPPY NEWS! தமிழக அரசு திட்டம்?
”வர முடியுமா? முடியாதா?” விடாமல் துரத்தும் அமித்ஷா! விஜய்க்கு காத்திருக்கும் ஆப்பு
Bihar Exit Poll 2025 | ’’அரியணை பாஜகவுக்கு தான்! ஆனால் CM யாரு தெரியுமா?’’ EXIT POLL MEGA TWIST
CM இருக்கையில் தேஜஸ்வி? பாஜக கூட்டணிக்கு சிக்கல்.. பீகார் வரலாறு சுவாரஸ்யம் | Bihar Election 2025
Cuddalore Accident | பேருந்து மீது மோதிய வேன்தூக்கி வீசப்பட்ட பெண் பகீர் சிசிடிவி காட்சிக்ள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar Election 2025 Result: பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
US New H-1B Visa Policy: “வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
“வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
எந்திரன் கதை உண்மை ஆயிடுச்சே.!! ChatGPT-ஐ பயன்படுத்தி உருவாக்கிய AI துணையை மணந்த ஜப்பானிய பெண்
எந்திரன் கதை உண்மை ஆயிடுச்சே.!! ChatGPT-ஐ பயன்படுத்தி உருவாக்கிய AI துணையை மணந்த ஜப்பானிய பெண்
TN Rain Alert: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Chennai Power Shutdown: சென்னை மக்களே.! நவம்பர் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
சென்னை மக்களே.! நவம்பர் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
நான் முதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.50,000 ஊக்கத்தொகை! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
நான் முதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.50,000 ஊக்கத்தொகை! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Embed widget