மேலும் அறிய

Poonch terror attack: ”வீரர்களுக்காக ஒன்றிணைவோம்” - பூஞ்ச் தீவிரவாத தாக்குதலுக்கு ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

Poonch terror attack: பூஞ்சில் விமானப்படை வீரர்கள் மீது நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Poonch terror attack: தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ராணுவ வீரர்களுக்காக ஒன்றிணவோம் என அரசியல் கட்சி தலைவர்கள் பேசியுள்ளனர்.

ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில், விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் காயமடைந்தனர்.  இந்த சம்பவத்திற்கு கட்சி வேறுபாடுகளை கடந்து அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இராணுவ ஆதாரங்களின்படி, விமானப்படை வீரர்களை ஏற்றிச் சென்ற இரண்டு வாகனங்கள் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ஷாசிதார் அருகே சென்றபோது, தீவிரவாதிகளால் துப்பாக்கிச் சூடு தாக்குதலை எதிர்கொண்டன.  காயமடைந்த வீரர்கள் IAF ஹெலிகாப்டர்களில் சிகிச்சைக்காக உதம்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தலைவர்கள் கண்டனம்:

இந்த தாக்குதல் வெட்கக்கேடானது மற்றும் கோழைத்தனமானது என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “ ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​பகுதியில் எங்கள் ராணுவ வாகனத்தின் மீது நடந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதல் மிகவும் வெட்கக்கேடானது மற்றும் வருத்தமளிக்கிறது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது பணிவான அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் காயம் அடைந்த வீரர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ ஜம்மு & காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​என்ற இடத்தில் இந்திய விமானப்படை வாகனம் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலால் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் வன்மையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து நிற்க தேசத்துடன் இணைகிறோம். மிக உயர்ந்த தியாகம் செய்த துணிச்சலான விமானப் போராளியின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள், ”என தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார், இது "பயங்கரவாதிகளின் இழிவான, வெட்கக்கேடான மற்றும் கோழைத்தனமான செயல்" என்றும், காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார். இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவ்த்து வருகின்றனர்.

இதனிடையே, விமானப்படை வாகனங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில்,  தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
ஓணம் ஸ்பெஷல்: கேரளாவுக்கு 100 சிறப்பு ரயில்கள்! மத்திய அமைச்சர் அறிவிப்பு.
ஓணம் ஸ்பெஷல்: கேரளாவுக்கு 100 சிறப்பு ரயில்கள்! மத்திய அமைச்சர் அறிவிப்பு.
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Entry Level Cars: எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Embed widget