மேலும் அறிய

இதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்... போட்டுடைத்த முன்னாள் எம்எல்ஏ குமரகுரு

கட்சியை அழித்து விடுவாய் இரட்டை இலையை முடித்து விடுவாய் அண்ணா திமுக கட்சியை அழித்து சின்னாபனம் ஆக்கி விடுவாய் அதனால் தான் உன்னுடன் இருந்தேன்

விழுப்புரம் : கட்சி, ஆட்சியை கலைத்துவிடுவார்கள் என்பதால் தான் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன்  கூட்டணி வைத்தார் என அரகண்டநல்லூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு பரபரப்பு பேச்சு.
 
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அறிஞர் அண்ணாவின் 114ஆது பிறந்தநாள் விழா முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளரும், உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு அவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
 
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பாரதிய ஜனதாவுடன் ஏன் கூட்டணி வர வைத்தது என்றால், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதா கட்சியுடன் எந்த காலத்திலும் உறவு வைக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தார். ஆனால் அன்றைய தினம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  இறந்த போது கட்சியை துரோகிகள் இரண்டாகப் பிரிந்தார்கள். ஒருவர் மோடியிடம் சென்று நீங்கள் அண்ணா திமுகவின் ஆட்சியை கலைக்க வேண்டும்.
 
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரில் இருந்து நீக்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் அதற்கு நான் உங்களுக்கு துணையாக நிற்கிறேன் என்று சொல்லி ஓ பன்னீர்செல்வம் என்கின்ற துரோகி அன்று மோடியிடம் சென்ற காரணத்தினால், அப்போது மத்தியில் இருந்த அரசாங்கம் இங்கு ஆட்சியை கலைக்கப் பார்த்தார்கள் இரட்டை இலை சின்னத்தை முடக்கினார்கள். நான் உங்களுக்கு துணையாக நிற்கிறேன் என்று சொல்லி மத்திய அரசு தனியாக இருந்த காரணத்தினால் அன்றைய தினம்  ஓ.பன்னீர்செல்வத்தை  கூப்பிட்டு கட்சியில் இணைய கூறிய போது, அவர் நான் கட்சியில் சேருகிறேன் மோடி சொன்னால்தான் சேர்வேன் என கூறினார். 
 
கட்சியில் இணைவதற்கு மோடி ஆதரவோடு சேர்ந்து துணை முதல்வராகி, அப்போது சசிகலாவின் தினகரனையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் இறப்பில் மர்மம் இருக்கிறது அவர் எப்படி இருந்தார் என்பது எனக்கு தெரியும் என்று ஓபிஎஸ் கூறினார். இதற்கு தமிழக அரசாங்கம் தனி ஆணையம் அமைக்க வேண்டும், அந்த ஆணையம் அமைத்தால் அம்மாவின் இறப்பு தெரிந்து விடும்.
 
கட்சி, இரட்டை இலை, எம்ஜிஆர் மாளிகையை காப்பாற்ற வேண்டும் என பாஜகவுடன் உறவு வைத்துக் கொண்டு சட்ட போராட்டம் நடத்தி இரட்டை இலை, கட்சியைப் பெற்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பெற்று வெற்றி பெற்றது. பாரதிய ஜனதாவுடன் என் வேலை முடிந்து விட்டது.
 
எந்த காரணத்துக்காக உன்னோடு இருந்தேன் கட்சியை அழித்து விடுவாய் இரட்டை இலையை முடித்து விடுவாய் அண்ணா திமுக கட்சியை அழித்து சின்னாபனம் ஆக்கி விடுவாய் அதனால் தான் உன்னுடன் இருந்தேன். இதன் பிறகு அதற்கு வேலை இல்லை ஒட்டுமில்லை உறவில்லை வேற துணிச்சலாக முடிவெடுத்து வெளியே வந்தவர் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 
 
அதன் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் யாரோ நாங்க யாரோ என்று போனோம் ஆனால் எங்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் மிரட்டல்கள் வந்தது எதுவும் பொறுப்பெடுத்தாமல் கடந்து சென்றோம். ஆனால் இஸ்லாமியர்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு  என தெரிவித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் சுமார் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: ஒரு வழியாக உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: ஒரு வழியாக உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 24:  திரௌபதி பட இயக்குநர் மோகன்ஜி போலீசாரால் கைது? 
Breaking News LIVE, Sep 24: திரௌபதி பட இயக்குநர் மோகன்ஜி போலீசாரால் கைது? 
Pudukottai Leopard: புதுக்கோட்டை மக்கள் கவனத்திற்கு..! சிறுத்தை நடமாட்டமா? வனத்துறை தந்த விளக்கம்
Pudukottai Leopard: புதுக்கோட்டை மக்கள் கவனத்திற்கு..! சிறுத்தை நடமாட்டமா? வனத்துறை தந்த விளக்கம்
Gold Silver Price: ஜெட் வேகத்தில் உயர்வு! தங்கம் விலை ரூ.56 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்!
Gold Silver Price: ஜெட் வேகத்தில் உயர்வு! தங்கம் விலை ரூ.56 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tobacco in Tirupati Laddu | ”திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட், சிக்ரெட்” மீண்டும் வெடித்த சர்ச்சைTirupati Devasthanams | புனிதத்தை மீட்க  திருப்பதி தேவஸ்தானம் செய்த செயல்Rahul Gandhi : ”நான் தப்பா பேசுனேனா..என்னை தடுக்க முடியாது” ராகுல் ஆவேசம்Aadhav Arjuna on deputy cm : ”உதய் துணை முதல்வரா? திருமா-வ போடுங்க” கொளுத்திப்போட்ட ஆதவ் அர்ஜூனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: ஒரு வழியாக உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: ஒரு வழியாக உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 24:  திரௌபதி பட இயக்குநர் மோகன்ஜி போலீசாரால் கைது? 
Breaking News LIVE, Sep 24: திரௌபதி பட இயக்குநர் மோகன்ஜி போலீசாரால் கைது? 
Pudukottai Leopard: புதுக்கோட்டை மக்கள் கவனத்திற்கு..! சிறுத்தை நடமாட்டமா? வனத்துறை தந்த விளக்கம்
Pudukottai Leopard: புதுக்கோட்டை மக்கள் கவனத்திற்கு..! சிறுத்தை நடமாட்டமா? வனத்துறை தந்த விளக்கம்
Gold Silver Price: ஜெட் வேகத்தில் உயர்வு! தங்கம் விலை ரூ.56 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்!
Gold Silver Price: ஜெட் வேகத்தில் உயர்வு! தங்கம் விலை ரூ.56 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்!
Israel Attacks Lebanon: கொத்து கொத்தாக பிணங்கள்..! 492 பேர் உயிரிழப்பு, 1600 பேர் காயம் - இஸ்ரேல் தாக்குதலால் கலங்கிய லெபனான்
Israel Attacks Lebanon: கொத்து கொத்தாக பிணங்கள்..! 492 பேர் உயிரிழப்பு, 1600 பேர் காயம் - இஸ்ரேல் தாக்குதலால் கலங்கிய லெபனான்
Encounter Death: இந்தியா முழுவதும் 7 ஆண்டுகளில் இத்தனை என்கவுன்டர்களா? மாநில வாரியாக லிஸ்ட் இதோ!
Encounter Death: இந்தியா முழுவதும் 7 ஆண்டுகளில் இத்தனை என்கவுன்டர்களா? மாநில வாரியாக லிஸ்ட் இதோ!
Skoda Kylaq vs Kushaq: ஸ்கோடா கைலாக் Vs  குஷாக் - என்ன வித்தியாசம்? எந்த கார் சிறந்தது? ஒப்பீடு இதோ..!
Skoda Kylaq vs Kushaq: ஸ்கோடா கைலாக் Vs குஷாக் - என்ன வித்தியாசம்? எந்த கார் சிறந்தது? ஒப்பீடு இதோ..!
மாமல்லபுரம் கடலில் தோன்றிய பல்லவர் கால அதிசயம்... வெளிப்பட்ட மகிஷாசூரமர்த்தினி குடைவரை கோயில்...
மாமல்லபுரம் கடலில் தோன்றிய பல்லவர் கால அதிசயம்... வெளிப்பட்ட மகிஷாசூரமர்த்தினி குடைவரை கோயில்...
Embed widget