மேலும் அறிய

"உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியுள்ளது குடும்ப வாரிசு அரசியல் அல்ல" - கொளத்தூர் மணி

தோற்று போய், வாய்ப்பு மறுத்தவர்களே உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவி வழங்கியது குறித்து விமர்சிக்கிறார்கள் எனவும் சாடினார்.

சேலத்தில் வருமானவரித்துறை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என சேலத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இதையடுத்து பெட்ரோல் குண்டு வீசிய டேவிட், அருள், கிருஷ்ணன், அம்பிகாபதி ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வருமானவரித்துறை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசத் தூண்டியதாக திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணியும் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக கொளத்தூர் மணி உட்பட 5 பேரும் இன்று சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

பின்னர், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "திமுகவின் கொள்கைகளை அழுத்தமாக பேசி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியுள்ளது குடும்ப வாரிசு அரசியல் அல்ல. கொள்கை வாரிசு அரசியல் என்றார். மேலும் தோற்று போய், வாய்ப்பு மறுத்தவர்களே உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவி வழங்கியது குறித்து விமர்சிக்கிறார்கள் என சாடினார். 

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டபோது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பை உருவாக்கவே பாஜக மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்த பிரச்சனையை பெரிதாக்கியது. ஆனால் தலைநகர் டெல்லியில் மருத்துவர் கொல்லப்பட்டது குறித்து யாரும் குரல் கொடுக்காமல் வாயை மூடிக் கொண்டு உள்ளதாக தெரிவித்த கொளத்தூர் மணி, தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு திடீரென வெளியே வந்துள்ள எச்.ராஜா, அர்ஜுன் சம்பத் மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை
ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை
'கார் பந்தயம் நடத்த காசு இருக்கு; கற்பிக்கும் ஆசிரியர்களுக்குக் கொடுக்க இல்லையா?'- திமுக அரசிடம் ஈபிஎஸ் கேள்வி
'கார் பந்தயம் நடத்த காசு இருக்கு; கற்பிக்கும் ஆசிரியர்களுக்குக் கொடுக்க இல்லையா?'- திமுக அரசிடம் ஈபிஎஸ் கேள்வி
கிட்டத்தட்ட 1 கோடி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.. ஒரே ஆண்டில் இந்தியாவுக்கு இத்தனை பேர் விசிட்டா?
கிட்டத்தட்ட 1 கோடி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.. ஒரே ஆண்டில் இந்தியாவுக்கு இத்தனை பேர் விசிட்டா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!Samantha Divorce Controversy : ‘’சமந்தாவை வைத்து டீல் !’’காங். அமைச்சர் சர்ச்சை பேச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை
ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை
'கார் பந்தயம் நடத்த காசு இருக்கு; கற்பிக்கும் ஆசிரியர்களுக்குக் கொடுக்க இல்லையா?'- திமுக அரசிடம் ஈபிஎஸ் கேள்வி
'கார் பந்தயம் நடத்த காசு இருக்கு; கற்பிக்கும் ஆசிரியர்களுக்குக் கொடுக்க இல்லையா?'- திமுக அரசிடம் ஈபிஎஸ் கேள்வி
கிட்டத்தட்ட 1 கோடி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.. ஒரே ஆண்டில் இந்தியாவுக்கு இத்தனை பேர் விசிட்டா?
கிட்டத்தட்ட 1 கோடி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.. ஒரே ஆண்டில் இந்தியாவுக்கு இத்தனை பேர் விசிட்டா?
Vettaiyan Movie: 'வேட்டையன்' படத்திற்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு  !
Vettaiyan Movie: 'வேட்டையன்' படத்திற்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு  !
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: தமிழ்நாட்டுச் சிறைகளில் சாதிய பாகுபாடுகளை அகற்றுக- ரவிக்குமார் எம்.பி.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: தமிழ்நாட்டுச் சிறைகளில் சாதிய பாகுபாடுகளை அகற்றுக- ரவிக்குமார் எம்.பி.
Isha Row: ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான காவல் விசாரணை: முறையிட்ட சத்குரு- தடைவிதித்த உச்ச நீதிமன்றம்!
ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான காவல் விசாரணை: முறையிட்ட சத்குரு- தடைவிதித்த உச்ச நீதிமன்றம்!
Mahavishnu: சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்: கைதாகி ஒரு மாதம் கழித்து நீதிமன்றம் உத்தரவு
Mahavishnu: சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்: கைதாகி ஒரு மாதம் கழித்து நீதிமன்றம் உத்தரவு
Embed widget