மேலும் அறிய

எடப்பாடி பழனிசாமியே தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் - முன்னாள் எம்.பி குமார்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும் என்று திருச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாலேயே முக்கியத்துவம் இல்லையென்றாலும் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வந்தார். அதேபோல மறுபுறம் எடப்பாடி பழனிசாமியும் முக்கிய நிர்வாகிகள் உடன் கடந்த 5 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். இதனால் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என பெரும் எதிர்பார்பார்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஓபிஎஸ் வெளிப்படையாகக் கருத்து கூறி உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இதுவரை கருத்து எதுவும் கூறவில்லை. இதனை தொடர்ந்து இருவரும் தொடர்ந்து தனது ஆதர்வாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் தங்களது கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். 


எடப்பாடி பழனிசாமியே தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் - முன்னாள் எம்.பி குமார்

இந்நிலையில், அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தங்கள் ஆதரவு யாருக்கு? என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதையே சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம். தற்போது அ.தி.மு.க.வில் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறார்கள். சட்டமன்றத்தில் ஒரு சிலர் தி.மு.க.வுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கிறார்கள். மற்றொரு பக்கம் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். ஒரு சிலர் தி.மு.க.வை சட்டமன்றத்துக்குள்ளேயே புகழ்வது, புத்தகம் பரிசளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றார். அ.தி.மு.க.வுக்காக உழைக்கக்கூடியவர்கள் ஒரு பக்கமும், ஒட்டு திண்ணையில் எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்து இருப்பவர்கள் ஒரு பக்கமும் உள்ளனர். குறுக்கு வழியில் பதவியை பெற்று வருகிறார்கள். இதை பார்க்கும் தொண்டர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்றார்.


எடப்பாடி பழனிசாமியே தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் - முன்னாள் எம்.பி குமார்

பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருகிறது. அடுத்து ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கையான தலைவர் இருந்தால் தான் முடியும். எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகளாக முதல்-அமைச்சர் பதவியில் துணிவோடும், தனித்தன்மையோடும் சிறப்பாக ஆட்சியை நடத்தினார். ஆகவே அ.தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமியே தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். இதுவே எங்களின் விருப்பம் என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget