மேலும் அறிய

EPS Speech: தொழிலாளர்களின் கடும் உழைப்பால்தான் நாடு முன்னேறி வருகிறது - எடப்பாடி பழனிசாமி

விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில் தமிழ்நாடு தொழிற்சங்க உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு இணையும் விழாவில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியது, "நாட்டின் முதுகெலும்பாக தொழிலாளர்கள் திகழ்கின்றனர். தொழிலாளர்களின் கடும் உழைப்பால்தான் நாடு முன்னேறி வருகிறது. மற்றவர்களை சார்ந்து வாழாமல் உழைப்பு ஒன்றையே முழுமூச்சாக தொழிலாளர்கள் உள்ளனர். இன்றைய தினம் கட்டுமானத் தொழில் முழுமையாக நலிவடைந்துள்ளது. அதற்கு காரணம் இன்றைய ஆட்சியாளர்கள்தான். இரட்டை வேடம் போடுவது திமுகவினருக்கு கைவந்த கலையாக மாறிவிட்டது. கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வருவோம் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து விட்டு, அதை நிறைவேற்றாத காரணத்தால் இன்றைக்கு கட்டுமானப் பொருட்களின் விலை பெருமளவு அதிகரித்து தொழில் பாதிப்படைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கட்டுமானப் பொருட்களைச் சேர்த்து விலையைக் குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில், கட்டிட வேலைகள் பாதியில் நிற்கின்றன. புதிய கட்டடங்கள் கட்டுமானம் நின்று விட்டது. இதைக் கண்டுகொள்ளாமல் கும்பகர்ணன் போல விடியா திமுக அரசு தூங்கிக் கொண்டுள்ளது" என்று கூறினார்.

 EPS Speech: தொழிலாளர்களின் கடும் உழைப்பால்தான் நாடு முன்னேறி வருகிறது - எடப்பாடி பழனிசாமி

மேலும், “அதிமுக ஆட்சியில் 5 லட்சம் முதியோருக்கு புதிதாக உதவித் தொகை வழங்கப்பட்டது. 90 சதவீதம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் முதியோர் உதவித் தொகை பல இடங்களில் நிறுத்தப்பட்டுவிட்டது. அந்த முதியவர்கள் திமுக ஆட்சிக்கு எதிரானவர்கள் இல்லை. மக்கள் விரோத அரசாக இருக்கும் திமுக அரசு மீண்டும், முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். புதிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டால் தான் கட்டுமானத் தொழில் வளம்பெறும். அதிமுக ஆட்சியில் தொழில்முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு பல லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தப்பட்டன. திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டது. அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை அளித்து அடித்தட்டு மக்கள் உயர வழிவகை செய்யப்பட்டது. கல்விக்கு அதிக நிதி அளித்ததால் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் உயர்ந்திருக்கிறது. 33 ஆண்டுகால அதிமுக ஆட்சியே இதற்கு காரணம். சேலத்தில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களால் தான் போக்குவரத்து நெருக்கடி முற்றிலும் குறைந்திருக்கிறது. அதிமுக ஆட்சியின் போது ஒரு குடும்பத்திற்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும் பொருட்களை வாங்கும் நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை 50 சதவீதம் உயர்ந்து விட்டது. இதனால் மாதம் 9 ஆயிரம் ரூபாய் இருந்தால்தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. இதனால் அடித்தட்டு மக்கள் கஷ்டப்படுவதை ஆளும் திமுக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது” என்றார்.

 EPS Speech: தொழிலாளர்களின் கடும் உழைப்பால்தான் நாடு முன்னேறி வருகிறது - எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தால் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று அந்த பொருட்களை வாங்கி குறைந்த விலையில் அரசின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் உணவுப் பொருட்களின் விலை கட்டுக்கள் இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம்தோறும் ரூ.ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். இதுவரை வழங்கப்படவில்லை. அடுத்த செப்டம்பர் மாதம் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இன்னும் கணக்கு முழுமையாக எடுக்கப்படவில்லை. தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து விட்டு தற்போது பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறார்கள். பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே இதுபோன்ற நிபந்தனைகளை விதிக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்னது வேறு. ஆனால் இப்போது செய்வது வேறு. இதுதான் திமுக அரசின் லட்சணம் என்றார். தேர்தல் நேரத்தில் மக்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமாக பேசுவதில் திமுகவினர் வல்லவர்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அப்படியே அந்தர்பல்டி அடித்து நிபந்தனைகளை விதித்து வருகிறார்கள். இதனால் மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி இருக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் வெறும் 9 பேர் மட்டுமே மருத்துவக் கல்வி வாய்ப்பை பெற்று வந்த நிலையில், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாகவே நூற்றுக்கணக்கானோர் மருத்துவக் கல்வி பயில முடிகிறது. அவர்களுக்கு அரசின் சார்பில் முழுமையாக கட்டணம் செலுத்துவதற்கும் அதிமுக ஆட்சியே காரணம்” என்று பேசினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget