மேலும் அறிய

TN Assembly: இன்று கூடுகிறது சட்டப்பேரவை கூட்டத் தொடர் - கரூர் To கோல்ட்ரிஃப் மருந்து - முக்கிய பிரச்னைகள்

TN Assembly 2025: பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது.

TN Assembly 2025: கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடங்கி கோல்ட்ரிஃப் மருந்து உள்ளிட்ட, பல்வேறு விவகாரங்களை விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்:

தமிழ்நாடு சட்டப்பேரவை ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று கூட உள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நேற்று அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதன் முடிவில் இன்று தொடங்கி வரும் 17ம் தேதி வரை, தொடர்ந்து நான்கு நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என சட்டப்பேரவை தலைவர் அறிவித்தார். அதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு வழக்கம்போல் சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது மறைந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ந்த 41 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்ட திட்டம்:

  • கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான நாளை (அக். 15) நடைபெறும் பேரவைக் கூட்டத்தில்,  2025-2026 நிதியாண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும்.
  • மூன்றாம் நாளான வரும் அக். 16-ம் தேதி அன்று கூட்டத்தில் 2025-2026 நிதியாண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.
  • கடைசி நாளான வரும் அக். 17-ம் தேதியன்று, கூட்டத் தொடரில் 2025-2026 நிதியாண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதிலுரை நடைபெறும்.

கேள்வி நேரமும்.. முக்கிய பிரச்னைகளும்..

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நாளை முதல் 3 நாட்களுக்கும் கேள்வி நேரமும்நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய பிரச்னைகளை மையப்படுத்தி அரசை நோக்கி கேள்வி எழுப்ப, பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக உள்ளிட்டவை திட்டமிட்டுள்ளன. குறிப்பாக கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான விவகாரம், எதிர்க்கட்சிகளின் அரசியல் கூட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது இல்லை, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானது, சட்ட-ஒழுங்கு போன்ற பல்வேறு விவகாரங்களை கையிலெடுக்க திட்டமிட்டுள்ளன.

சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்று தொடங்கவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசியலில் இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Embed widget