மேலும் அறிய

மோடிக்கு இணையாக கரகோஷம்.. மத்திய அமைச்சராக பதவியேற்று கொண்ட சிவராஜ் சிங் சவுகான்!

Shivraj Singh Chouhan: பிரதமரின் பதவியேற்பு விழாவில் மோடிக்கு இணையாக மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கரகோஷம் எழுப்பப்பட்டது.

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் மோடியின் புதிய அரசு இன்று பதவியேற்று கொண்டது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்று கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

மோடிக்கு இணையாக கிடைத்த கரகோஷம்: பதவியேற்பு விழாவுக்கு வந்த உலக தலைவர்கள், இந்திய தலைவர்கள், உயர்மட்ட அரசு அதிகாரிகள், பிரபலங்களுக்கு மத்தியில் பலத்த கரகோஷத்துடன் மோடி பதவியேற்று கொண்டார். அவருக்கு இணையாக மற்றொருவருக்கும் பலத்த கரகோஷம் எழுப்பப்பட்டது.

அவர் வேறு யாரும் அல்ல, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவராஜ் சிங் சவுகான். மோடிக்கு இணையாக சிவராஜ் சிங் சவுகானுக்கு கரகோஷம் எழுப்பப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மத்திய பிரதேச முதலமைச்சராக கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக பதவி வகித்தவர் சிவராஜ் சிங் சவுகான். மொத்தம் 4 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதில் மோகன் யாதவுக்கு முதலமைசச்சர் பதவி வழங்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய அமைச்சரவையில் இடம் தரலாம் என தகவல்கள் வெளியாகின. வெளியான தகவல்கள் உண்மையாகும் விதமாக இன்று மத்திய அமைச்சராக பதவியேற்று கொண்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விதிஷா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார்.

 

யார் இந்த சிவராஜ் சிங் சவுகான்? நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் இவரும் ஒருவர். பாஜகவின் தாய் அமைப்பாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்-இல் தனது பொது வாழ்க்கையை தொடங்கிய சிவராஜ் சிங் சவுகான், 1970-80களில் மாணவர் அரசியலில் நுழைந்தார்.

எமர்ஜென்சியின்போது சிறிது காலம் தலைமறைவாக இருந்து பின்னர் கைது செய்யப்பட்டார். கடந்த 1990ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் நுழைந்த இவர், புத்னி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு அடுத்த ஆண்டே, மக்களவை தேர்தலில் விதிஷா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 2005ஆம் ஆண்டு, மத்திய பிரதேச பாஜக தலைவராக பதவி வகித்த போது, அம்மாநில முதலமைச்சர் பதவி சிவராஜ் சிங் சவுகானுக்கு வழங்கப்பட்டது. இப்படி படிப்படியாக அரசியலில் வளர்ந்து தற்போது மத்திய அமைச்சராக உயர்ந்துள்ளார்.

மோடி, சிவராஜ் சிங் சவுகானை தவிர பாஜகவின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அமித் ஷா உள்ளிட்டோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget