மேலும் அறிய

உதயநிதி பதவியேற்பில் முதல்வர் இதைச் செய்ய வேண்டும்: செல்லூர் ராஜூ !

உதயநிதி பதவியேற்பால் மக்களுக்கு இனிப்பான செய்தியை முதல்வர் வழங்க வேண்டும் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு.

தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்துவரும் தி.மு.க., அரசை கண்டித்து மதுரை முனிச்சாலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,வுக்கு எதிராகவும், முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்..,” தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறது. தொண்டர்கள் தான் கழகத்தை உயிரோட்டத்தோடு வைத்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை கூறி நிறைவேற்றாத அரசின் செவிகளுக்கு எட்டும் வகையில் தான் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடைபெறுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள அவலநிலையால் தான் மக்கள் அலை அலையாய் அ.தி.மு.க., போராட்டத்திற்கு வந்துள்ளனர்.

உதயநிதி பதவியேற்பில் முதல்வர் இதைச் செய்ய வேண்டும்: செல்லூர் ராஜூ !
 
தி.மு.க., அரசு மகளிர்க்கு ஆயிரம் ரூபாய், கேஸ் மானியம், கல்வி கடன் ரத்து, விலைவாசி உயர்வு எதையுமே செய்து தரவில்லை. கொத்தடிமைக்கு கொத்தடிமையாக முதல்வர் இருந்து கொண்டு நம்மையும் கொத்தடிமையாக வைத்துள்ளனர். சினிமாக்காரர்கள் தான் சோப்புக்கும், மற்றவைக்கும் மாடலாக வருகிறார்கள். முதல்வர் மாடல் எனக்கூறி அசிங்கப்படுத்துகிறார்கள். அ.தி.மு.க., ஆட்சியின் மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிப்பதாக கூறிய முதல்வர் தற்போது 54% உயர்த்தியுள்ளார். சொத்துவரிக்கு வீட்டையே விற்கும் நிலை உள்ளதாக பேசிய ஸ்டாலின் இன்று சொத்துவரியையும் உயர்த்தியுள்ளார்.

உதயநிதி பதவியேற்பில் முதல்வர் இதைச் செய்ய வேண்டும்: செல்லூர் ராஜூ !
தி.மு.க., ஆட்சியில் வீட்டு வரியை நினைத்தால் வீட்டையே விற்றுவிடலாமா என தோன்ற வைக்கிறது. முதல்வரோடு கூட்டணி வைத்துள்ளவர்கள் இன்றைக்கு பக்கவாத்தியம் வாசித்து கொண்டுள்ளனர். ஸ்டாலின் இருக்கும் வரை உதயசூரியன் தான் உதிக்கும் எனக்கூறுகிறார். உதயசூரியன் எரிக்கத்தான் செய்யும். மக்களுக்கு வெயிலை கொடுப்பதை போல ஆட்சியை கொடுத்து கொண்டுள்ளனர். தமிழக மக்கள் படும் துயரம் போதாதாம். புதுச்சேரியிலும் தி.மு.க., ஆட்சி என முதல்வர் கூறுகிறார். இங்கே நடக்கும் கொடுமைகள் போதாதா? கொடுமையிலும் கொடுமையாக புதுச்சேரி மக்களும் துன்பப்பட நினைக்கிறார். திருக்குவளை மு.கருணாநிதி குடும்பம் தான் தி.மு.க., தி.மு.க., ஸ்டாலினின் பிரைவேட் கம்பெனி போல மாறிவிட்டது. நாளை உதயநிதியின் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. மகனுக்கு பட்டாபிஷேகம் செய்வதால் ஸ்டாலின் அனைத்து வரிகளையும் ரத்து செய்ய வேண்டும். விலை வாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகளை உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பின் போது முதல்வர் சரி செய்வேன் என ஞான உதயம் வந்து அறிவிக்க வேண்டும் என மீனாட்சியம்மனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்” என்றார். 
 

உதயநிதி பதவியேற்பில் முதல்வர் இதைச் செய்ய வேண்டும்: செல்லூர் ராஜூ !
நாளைய தினம் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்ய உள்ளார்கள். முன்பு மன்னராட்சி காலத்தில் இளவரசருக்கு பட்டாபிஷேகம் செய்யும் போது குறுநில மன்னர்களுக்கு வரி விலக்கு அளிப்பார்கள். அது போல உதயநிதி அமைச்சராக பதவியேற்பதை முன்னிட்டு சொத்து வரி, மின்சார கட்டணம், பால் விலை உள்ளிட்ட உயர்வுகளை ரத்து செய்து மக்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். அதிகார தெம்பில், போதையில் இதையெல்லாம் ஸ்டாலின் செய்கிறார். சென்னை முதல் குடிமகளான மேயரை தொங்கவிட்டு முதல்வர் காரில் வசதியாக செல்கிறார். சர்வாதிகார ஆட்சி போல திமுக ஆட்சி உள்ளது. ஒரு நாள் இரவு பயணத்துக்கு லட்சக்கணக்கான தொகையை கொடுத்து ரயில் பயணம் செய்கின்றனர். மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர்.  மகனுக்கு முடிசூட்டும் நிகழ்வால் ஸ்டாலின் மக்களுக்கு இனிப்பான செய்தியை கொடுக்கட்டும். பொங்கலுக்கு தரமான பொருட்களை அ.தி.மு.க., கொடுத்தது. தி.மு.க., அல்வா தான் மக்களுக்கு கொடுத்தது. வாயிலேயே அல்வா கிண்டும் ஆட்சியாக திமுக உள்ளது. இவ்வளவு பிரிவினைகள் வந்தும் அ.தி.மு.கவினர் கட்சி மாற மாட்டார்கள். புடம்போட்ட தங்கங்கள் அதிமுக தொண்டர்கள். தலைவர்கள், நிர்வாகிகள் மாறுவார்கள். ஆனால் அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் கட்சி மாற மாட்டார்கள். அதனால் தான் எம்.ஜி.ஆரை பெரியப்பா என பேசி பார்க்கிறார் ஸ்டாலின்" என்றார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget