மேலும் அறிய

‛தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனி’ -சீமான் கடும் தாக்கு!

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆனது நடைபெற்று வருகிறது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஒரு நாள் சுற்றுப்பயணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரணிபுத்தூர், சுங்குவார்சத்திரம், எடயார்பாக்கம்,வாலாஜாபாத், படப்பை, வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் ஈடுபட்டு வந்த நிலையில்  காஞ்சிபுரம் மேட்டு தெருவில் உள்ள  திருமண மண்டபம் கலந்தாய்வு நடைபெற்றது.
 
‛தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனி’ -சீமான் கடும் தாக்கு!
அதில் கட்சி நிர்வாகிகளுடன் பேசிய சீமான், மாற்றத்தை அடிமட்டத்தில் இருந்து கொண்டு வரவேண்டும், மாற்றத்தை அடிமட்டத்தில் இருந்து கொண்டு வருவதற்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் உதவி செய்யும். இன்று உங்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுக்கும், வேட்பாளர்கள் உங்களிடம் பத்து மடங்கு அதிகமாக சம்பாதிப்பார்கள். நாளை உங்களுடைய அடிப்படை தேவைக்காக அவர்கள் கையெழுத்துப் போட உங்களிடம் பணத்தை எதிர்பார்ப்பார்கள்.
 
ஒரு தனி நபருக்காக பள்ளிக்கூடம், சாலை மருத்துவமனை ,கட்டிக் கொள்ள முடியாது அதற்காகத்தான் வரி என்ற பெயரில் பணம் கொடுத்து அதை நிர்வகிக்க அரசை கண்டிக்கிறோம். ஆனால் இங்கு அனைவருக்கும் சமமான கல்வி சமமான மருத்துவம் கிடைப்பதில்லை .2016 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து நின்றது. அதற்கடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்றது கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் எதிர்கொள்ளும் என தெரிவித்தார்.
‛தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனி’ -சீமான் கடும் தாக்கு!
 
 இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பேசுகையில், தேர்தல் ஆணையம் என்பது நாடக கம்பெனி. பறக்கும் படை அமைப்பார்கள், அப்பாவி மக்கள் இடம் பணம் பறிப்பார்கள். ஆகவே தேர்தல் ஆணையத்தையே சீர்திருத்த வேண்டும். தற்போது அரசியல் என்பது சாதி , மதம் , சாராயம், கவர்ச்சி, பணம் ஆகிய ஐந்து தூண்களை உங்களால் கட்டமைக்கப்படுகிறது. சாதி, மதம் , சாராயம் தாண்டினாலும் பணத்தை தாண்ட முடியவில்லை.

‛தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனி’ -சீமான் கடும் தாக்கு!
9 மாவட்ட தேர்தலில் மூக்குத்தி, அண்டா, குண்டா, பட்டு சேலைகளை மொத்தமாக அள்ளிச் சென்று உள்ளார்கள். எம்பி எம்எல்ஏக்கள் அதைவிட அதிக வருமானம் ஈட்டும்  தொழிலாக உள்ளாட்சி பதவி உள்ளது. குறுநில மன்னர்கள் போல உள்ளாட்சி பதவியில் உள்ளவர்கள் செயல்படுவார்கள். குறைந்த ஜனநாயகம் அதிகபட்சம் பணநாயகம் ஆக மாறியுள்ளது. இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட செயலாக மாறியுள்ளது. விவசாய கடன், தள்ளுபடி நகை கடன் தள்ளுபடி எனக் கூறி தொடர்ந்து கையேந்த வைக்கும் ஆட்சியாளர்களை நாம் தள்ளுபடி செய்ய வேண்டும். ஓரே நாடு,ஓரே ரேஷன்கார்டு, ஓரே ஜிஎஸ்டி, என கூறும் நீங்கள் உள்ளாட்சித் தேர்தலை கூட ஒரே நாளில் நடத்த முடிய வில்லை. என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். 
 
இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகதீஷ் பாண்டியன், அன்பு தென்னரசு, கதிர் ராஜேந்திரன், மாவட்ட  செயலாளர் சால்டின் சாமுவேல், மாவட்ட தலைவர் பிரகதீஸ்வரன், மாவட்ட பொருளாளர் குமரேசன் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget