தவெகவில் சேர கூவி கூவி அழைப்பதா.! கடும் விளைவுகள் நேரிடும்- ஆதவை எச்சரிக்கும் ஆர்.பி.உதயகுமார்
RB Udayakumar condemns Aadhav Arjuna : நாக்கை தொங்க போட்டு கொண்டு அதிமுக தொண்டர்களை கட்சியில் சேருங்கள் என்று பிச்சை எடுக்குமாறு கூவி கூவி அழைக்கிறீர்களே? என ஆதவ் அர்ஜூனாவை ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில், ஏற்கனவே 4 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்த நிலையில், மேலும் 2 பேர் இணைய தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அல்ல,அல்ல தினமும் குறையாத அட்சய பாத்திரம் அதிமுக இன்றைக்கு கோடிக்கணக்கான தொண்டர்கள் கருத்தை பதிவு செய்கிறேன் . 90% அதிமுக தொண்டர்களை த.வே.கவில் இணைவதாக இன்றைக்கு பல்வேறு கட்சிகளுக்கு தாவி இன்றைக்கு முதலீடு செய்த அமைச்சர், அதிகார மையத்தால் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தவெகவில் இணைய அதிமுகவினருக்கு அழைப்பு
உங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டீர்களா அல்லது உங்கள் தலைவர் மீது நம்பிக்கை இழந்து விட்டீர்களா ? நாக்கை தொங்க போட்டு கொண்டு புரட்சித்தலைவர் ,புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் வழிவந்த தொண்டர்களை கட்சியில் சேருங்கள் என்று பிச்சை எடுக்குமாறு கூவி கூவி அழைக்கிறீர்களே? இன்றைக்கு விஜய் மக்கள் செல்வாக்கு கேள்விக்குறி ஆகிவிட்டதா அல்லது அதை நிலை நிறுத்த அதிமுக தொண்டர்களே வாருங்கள் என்று விலை பேசி பிச்சை எடுக்கிறீர்களா? இது எந்த விதத்தில் நியாயம்! தர்மம்! விஜய் இதற்கு தடைபோடுவாரா அல்லது இந்த நாடகத்தை நடத்த அனுமதிப்பாரா என்பதுதான் அதிமுக தொண்டர்களின் கேள்வியாக உள்ளது.
அழிக்க நினைப்பவர்கள் தோற்றுப்போவார்கள்
இன்றைக்கு அதிமுக தொண்டர்களை விலை பேச முடியவில்லை என்பதற்கு பல்வேறு சான்றுகள் சாட்சிகள் இருக்கிறது. அதிமுக ஒரு சுயம்பு இயக்கம். அதிகாரம், பதவி, சுகம் ஆகியவற்றிக்காக உருவாக்கப்பட்டது அல்ல இது மனித புனிதர் புரட்சித்தலைவர் உருவாக்கப்பட்டது. அதிமுகவை குறைத்து மதிப்பீடாதர்கள் அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் எல்லாம் தோற்றுப் போய் தான் உள்ளார்கள். இது கடந்த கால வரலாறு அதிமுகவை அழிக்க தன் முழு பலத்தையும் செலவழித்து அதிகார ஆசை காட்டி வருகிற புதிய அதிகார மையத்தில் அமைச்சர் தொடர்ந்து கூவி கூவி வருகிறார்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா கூறினார் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி தான் எங்கள் உயிர் மூச்சு. புரட்சித்தலைவர் ,புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் எடப்பாடியார் தலைமையில் கழக பணி ஆற்றுவதால் எங்கள் கொள்கை. நடைபெற்ற தேர்தலில் த.வே.க.34 சதவீதம் வாக்குகளை பெற்றது மக்களின் நம்பிக்கை பெறாத கட்சி இன்றைக்கு தொண்டர்களை விலை பேசி வருகிறது அதிகார பலத்தை வைத்து முயற்சி செய்தாலும் தொண்டர்கள் உறுதியோடுதான் இருக்கிறார்கள் இன்றைக்கு உயிரோட்டத்துடன் எடப்பாடியார் தலைமையில் நாங்கள் மக்கள் பணியாற்றுவோம்
கடும் விளைவுகளை சந்தீப்பீர்கள்
இன்றைக்கு விடுமுறை நாட்களிலும் கட்சி இணைப்பு விழா என்று கூறுகிறீர்கள். இந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் எத்தனை கட்சிக்கு சென்று உள்ளீர்கள் திமுக, விசிக ,த.வெ.க. அதற்கு முன்பு அதிமுகவில் சேர முயற்சித்தீர்கள் இன்றைக்கு கடைசி புகலிடமாக விஜயிடம் நீங்கள் அடைக்கலம் ஆகி உள்ளீர்கள் உங்களால் அதிமுகவை அழிக்க முடியாது. யானை தன் தலையில் மண்ணை போட்டுகொண்டது போல நீங்கள் உங்கள் அழிவிற்கு முயற்சிக்கிறீர்கள். ஆள் பிடிக்கு வேலையை தொடர்ந்து நீங்கள் ஈடுபட்டால் கடும் விளைவுகளை நீங்கள் பின்தொடர நேரிடும் என கூறினார் என ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















