மேலும் அறிய

OPS Family: ஓபிஎஸ் குடும்பத்தில் சோகம்; யாரும் அறியாத ஓபிஎஸ் சகோதரர்களின் பின்னணி!

பெரும்பாலானோருக்கு பாலமுருகன் எப்படி இருப்பார் என்பது கூடதெரியாது. அவர் மறைந்த பிறகு தான் ஓபிஎஸ்க்கு இப்படி ஒரு தம்பி இருப்பதே பலருக்கு தெரியவந்துள்ளது. தனது அண்ணன் உயரிய பொறுப்பில் இருந்தாலும் அதில் தலையிடாத தம்பியாகத் தான் பாலமுருகன் இருந்துள்ளார்.


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வரும் தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை தமிழகம் நன்கு அறியும். ஆவின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் வந்ததால் அவரது சகோதரர் ஓ.ராஜாவை பலருக்கு தெரியும். தேனி எம்.பி., ஆனதால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை சமீபமாக தெரியும். ஆனால் ஓபிஎஸ் குடும்பத்தில் அவருடன் பிறந்த சகோதரர்கள் பற்றியோ, அவர்களின் குடும்ப விபரங்களை பற்றியோ பலருக்கு தெரியாது. இன்னும் சொல்ல வேண்டுமானால், தேனியை சேர்ந்த பலருக்கே அது தெரியாது. இதோ அவர்களுக்கான தகவல் இது...


OPS Family: ஓபிஎஸ் குடும்பத்தில் சோகம்; யாரும் அறியாத ஓபிஎஸ் சகோதரர்களின் பின்னணி!

ஓபிஎஸ் உடன் பிறந்த சகோதரர்கள் நான்கு பேர். ஓ.சுசீந்திரன், ஓ.ராஜா , ஓ.பாலமுருகன், ஓ.சண்முகசுந்தரம் என நான்கு தம்பிகளை கொண்டவர் ஓபிஎஸ். இதில் இரண்டாவது தம்பியான சுசீந்திரன் பல வருடங்களுக்கு முன்பு இயற்கை எய்து விட்டார். இந்நிலையில்  ஒ.ராஜா, பாலமுருகன், சண்முகசுந்தரம் ஆகிய மூவரும் ஓபிஎஸ் சொந்த ஊரான பெரியகுளத்தில் வசித்து வருகின்றனர். இந்த சகோதரர்களில் மிகப் பிரியமானவரும், ஓபிஎஸ்க்கு மிக பிடித்தவருமான பாலமுருகன் தான் இன்று இயற்கை எய்தியுள்ளார். 


OPS Family: ஓபிஎஸ் குடும்பத்தில் சோகம்; யாரும் அறியாத ஓபிஎஸ் சகோதரர்களின் பின்னணி!

 1966 வது வருடம் பிறந்து தற்போது 61 வயது ஆன நிலையில் , நீண்ட நாட்களாக கல்லீரல் மற்றும் கேன்சரால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் பாலமுருகன். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி இவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில், அப்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளின்படி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக ஒப்புதல் அளித்து பெங்களூரிலிருந்து ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை மதுரைக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து பாலமுருகனை ராணுவ ஆம்புலன்ஸ் மூலம் ஹெலிகாப்டரில் கொண்டு சென்று சென்னையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதில் குணமடைந்த பின்பு பெரியகுளத்தில் உள்ள தனது சொந்த வீட்டில் தனது மனைவி மற்றும் 14 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார் பாலமுருகன். பெரியகுளம் அருகே உள்ள கல்லுப்பட்டி எனும் ஊரில் பால் பண்ணை வைத்துள்ளார் பாலமுருகன். அது தான் அவரது பிரதான தொழில், அது தவிர கால்நடை பராமரிப்பு மற்றும் விவசாயமும் செய்து வந்தார்.


OPS Family: ஓபிஎஸ் குடும்பத்தில் சோகம்; யாரும் அறியாத ஓபிஎஸ் சகோதரர்களின் பின்னணி!

இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு,  திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சென்ற போது, அங்கு மூன்று நாட்கள் கவனித்த டாக்டர்கள், இதற்கு மேல் பலனளிக்காது என்று கூறியதால், நேற்று இரவு பெரியகுளத்திற்கு பாலமுருகனை அழைத்து வந்துள்ளனர் இன்று காலை அவரது உயிர் பெரியகுளம் வீட்டில் பிரிந்தது.  

பெரும்பாலானோருக்கு பாலமுருகன் எப்படி இருப்பார் என்பது கூடதெரியாது. அவர் மறைந்த பிறகு தான் ஓபிஎஸ்க்கு இப்படி ஒரு தம்பி இருப்பதே பலருக்கு தெரியவந்துள்ளது. தனது அண்ணன் உயரிய பொறுப்பில் இருந்தாலும் அதில் தலையிடாத தம்பியாகத் தான் பாலமுருகன் இருந்துள்ளார்.


OPS Family: ஓபிஎஸ் குடும்பத்தில் சோகம்; யாரும் அறியாத ஓபிஎஸ் சகோதரர்களின் பின்னணி!

அதனால் தான் அவரது இழப்பு ஓபிஎஸ் குடும்பத்திற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் அரசியலில், கட்சியில் எந்த மாதிரி செயல்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது குடும்ப நெருக்கத்தை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மையில், ஓபிஎஸ் குடும்பத்தை அதிகம் நேசிப்பவர். நெருக்கம் கொண்டவர். தனது இரு தம்பிகளை இழந்த நிலையில், அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கிடைக்கட்டும். 

 

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget