நான் பயப்படமாட்டேன்.! நாளைக்கும் ஆஜராக மாட்டேன்.! நோட்டீஸ் கிழிப்பு விவகாரத்தில் சீமான்....
NTK Seeman: சீமான் வீட்டில் நோட்டீஸ் கிழிப்பு விவகரத்தில், நாளைக்கும் ஆஜராக மாட்டேன், என்ன செய்வீர்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை அளித்த பாலியல் புகாரில், வளசரவாக்கத்தில் இன்று ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று ஆஜாரகவில்லை. இந்நிலையில், அவர் வீட்டில் இன்று நோட்டீஸ் ஒட்டபட்டது. அதில், நாளை காலை 11 மணிக்கு ஆஜராகுமாறும் வளசரவாக்கம் காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.
நோட்டீஸ் கிழிப்பு:
ஆனால், நோட்டீசை சீமானின் வீட்டில் இருந்தவர் கிழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், காவல்துறையினரை, சீமானின் பாதுகாவலருக்கும் காவல்துறையினருக்கு இடையே மோதல் ஏற்படட்து. மேலும், சீமானின் பாதுகாவலவர் துப்பாக்கி காட்டி மிரட்டியதால் , பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, நோட்டீசை கிழித்தவரையும், பாதுகாவலைரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டிற்கு, காவல்துறையினர் விரைந்து, அசாம்பாவிதம் ஏற்படாதவண்ணம் குவிந்துள்ளனர்.
”நாளையும் ஆஜராக மாட்டேன்”
இந்நிலையில், இதுகுறித்து சீமான் தெரிவிக்கையில்,” நான் கிருஷ்ணகிரியில் இருக்கும்போது, என் வீட்டில் எதற்காக சம்மன் ஒட்டுகிறீர்கள். ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுப்பயணம் காரணமாக, இன்று ஆஜராக முடியவில்லை. நான் திட்டமிட்ட நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். யாருக்கும் பயந்து ஓடி ஒளிய வேண்டிய அவசியமில்லை. நாளைக்கும் எனக்கு நிகழ்ச்சி இருக்கிறது, ஆஜராக மாட்டேன், என்ன செய்வீர்கள். வளசரவாக்கம் காவல் நிலையம் எங்கே போய்விடும், காவல்துறைக்கு என்ன, அவசரம். காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டு அஞ்சமாட்டேன் என சீமான் தெரிவித்தார்.
சீமான் - வழக்கு பின்னணி:
கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பிரபல நடிகை பாலியல் புகார் அளித்தார். இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மீது விஜயலட்சுமி புகாரை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் சில நாட்களுக்கு வழக்கை வாபஸ் பெறுவதால் வீடியோ வெளியிட்டிருந்தார் , அந்த நடிகை
இந்த வழக்கானது சில தினங்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது, நீதிமன்றத்தின் உத்தரவானது, சீமானுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
பல்வேறு பிரச்சனைகள் காரணமாகத்தான் நடிகையின் குடும்பத்தினர் சீமானை அணுகி உள்ளனர். சீமான், திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் உறவு வைத்துள்ளார். அதேபோல் சட்டப்படி திருமணம் செய்து கொள்வோம் என்றும் கூறியிருக்கிறார். சீமானின் வற்புறுத்தலால் ஏழு முறை கரு கலைப்பும் நடிகை செய்திருக்கிறார். அதேபோல் அவரிடம் இருந்து பெரும் பண தொகையையும் சீமான் பெற்றுள்ளார் என்றும் சீமானுக்கு எதிராக நடிகை புகாரளித்தார்.
இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி விஜயலட்சுமி ஏன் புகாரை திரும்ப பெற்றார் என்று கேள்வி எழுப்பினர், அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மன உளைச்சல் காராணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பியதாக நடிகை கூறியுள்ளார்” என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறைக்கு பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது. இதிலிருந்து மிரட்டல் காரணமாக தான்,புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து, வழக்கை 12 வாரங்களுக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டார். இந்நிலையில், சீமானுக்கு சம்மன் அனுப்பியது காவல்துறை.





















