மேலும் அறிய

“முடிவெடுக்க வேண்டியது இபிஎஸ், ஓபிஎஸ் அல்ல; அவர்கள்தான்...” - முத்தரசன்

”எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் சுயமாக சிந்தித்து அதிமுக செயல்பட்டது, அவர்களது மறைவுக்குப் பின்னர் அதிமுக சுயமாக செயல்படவில்லை”

நெல்லையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,  "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாடு வரும் 6 முதல் 9 வரை திருப்பூரில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் டி.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். மாநட்டில் தேசிய மாநில சமூக பிரச்சினை, குறித்து விவாதம் செய்யப்பட்டு பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இறுதி நாள் நிகழ்ச்சி செந்துண்டர் அணிவகுப்பு மற்றும் சீருடை அணிந்த மகளிர், இளம்பெண்கள் கலந்து கொள்ளும் பேரணி நடைபெறுகிறது.

இறுதி நாளான ஆகஸ்ட் 9 ல் வெள்ளையனே வெளியேறு முழக்கம் எழுந்த நாள். அன்றைய தினத்தில்  மக்கள் விரோத , பாசிச மோடி அரசே  வெளியேறு  என்ற முழக்கங்களை முன்வைத்து மாநாடு நடக்கிறது. மத்திய அரசு 8 ஆண்டுகாலத்தில் சொன்ன வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. மாறாக மக்கள், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களையே கொண்டு வந்துள்ளனர். அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததில் இருந்து நாடே தீப்பற்றி எரிந்து வருகிறது. 17 வயதில் பணியில் சேரலாம் என்ற அக்னிபாத் திட்டம் இளைஞர்களை ஏமாற்றும் திட்டம். இந்த திட்டத்தை கைவிட வேண்டும் இது நல்ல திட்டமில்லை. இளைஞர்களை எந்த அரசியல் கட்சிகளும் தூண்டவில்லை. தானாக அவர்கள் போராடுகிறார்கள்.


       
“முடிவெடுக்க வேண்டியது இபிஎஸ், ஓபிஎஸ் அல்ல; அவர்கள்தான்...” - முத்தரசன்

 

இளைஞர்களின் வேலை நெருக்கடியை மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தின் மூலம் பயன்படுத்தி கொள்கிறது. 4 ஆண்டுகள் பணி முடித்து வெளிவந்த இளைஞர்களின் நிலை கேள்விகுறியாகும் சூழல் நிலவிவருகிறது. ராணுவத்தில் ஆள் சேர்க்க பின்பற்றபட்டு வந்த பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். அக்னிபாத் திட்ட பிரச்சனை குறித்து ராணுவ தளபதிகள் தலையிட்டு கருத்துகள் சொல்வது தவறாகும். எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து குடியரசு தலைவர் தேர்தலில் செயல்பட்டால் பாஜக அரசின் வேட்பாளரை தோற்கடிக்க முடியும். இது 2024 ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மிகப்பெரிய பயனளிக்கும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்துள்ளது. இந்த விசயத்தில் நிதி அமைச்சர் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை. குடும்ப தலைவிகளுக்கு ₹1000 மாதம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என தொடர்ந்து இந்திய கம்யூ கட்சி அதனை வலியுறுத்தும்

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் சுயமாக சிந்தித்து அதிமுக செயல்பட்டது. அவர்களது மறைவுக்குப் பின்னர் அதிமுக சுயமாக செயல்படவில்லை. குறிப்பாக ஓபிஎஸ் இரண்டு நாட்களுக்கு முன் சொல்லும் போது கூட நான் துணை முதலமைச்சராக பதவியேற்க மாட்டேன் என உறுதியாக இருந்தேன். மோடி சொல்லி தான் ஏற்றுக் கொண்டேன் என அவரே சொல்லியுள்ளார். அதிமுகவின் ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என முடிவெடுக்க வேண்டியது ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.,அல்ல. அவர்களை யார் இயக்குகிறார்களோ அவர்கள் முடிவெடுப்பார்கள்” என தெரிவித்தார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Embed widget