மேலும் அறிய

திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட டி.டி.வி.தினகரன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அ.ம.மு.க சார்பில்  நடைபெற்ற அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்நாள் விழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமமுக சார்பாக அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்நாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசுகையில், "ஆட்சி பொருப்பில் ஏற்றி விட்டவர்களையே எந்த ஊர் என கேள்வி கேட்டவர்கள், நமக்கு துரோகம் செய்த புல்லுருவிகளை மக்கள் தூக்கி எறிந்து வருகிறார்கள். 


திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட டி.டி.வி.தினகரன்

மக்களுக்காக கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என ஒவ்வொரு வீட்டிலும் கல்விக் கண்ணை திறந்து வைத்தவர் தான் அறிஞர் அண்ணா, ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்கிற அண்ணாவின் வழியில் ஏழைகளுக்கான பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர்கள் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களும், அம்மா அவர்களும். அண்ணா அவர்கள் உடல் நலக்குறைவால் நம்மை விட்டு பிரிந்த போது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தயவால் முதல்வரானவர் கருணாநிதி.


திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட டி.டி.வி.தினகரன்

ஆனால், அவர் நமது கோட்பாடுகளை கைவிட்டு, பட்டி தொட்டி எல்லாம் ஊழலை பெருக்கெடுத்து ஓட வைத்தார். முதல்வரான கருணாநிதி கோபாலபுரத்தையே தனது கட்சி ஆக்கிக் கொண்டார். அடிப்படை தொண்டர்களால் தான் கட்சியின் தலைமை பொறுப்புகள் தேர்ந்தெடுக்க வேண்டும், இப்படி உருவாக்கப்பட்ட கட்சி இன்று வியாபார நிறுவனமாக மாறிவிட்டது. அப்படி தொண்டர்களுக்கான கட்சியில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்த பதவியில் தற்போது பழனிச்சாமி இருந்து கொண்டு கட்சியை கபலிகரம் செய்து விட்டார்.


திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட டி.டி.வி.தினகரன்

பழனிசாமி கட்சியின் தலைவராக இருக்கும் வரை அதிமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது, அன்று ஆர்கே நகர் தொகுதியில் பழனிசாமி எதிர்த்து குக்கர் சின்னத்தில் நின்று மாபெரும் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு கூட்டணி கட்சிகளை வைத்துக்கொண்டு பண பலத்தை பணத்தை வைத்துக் கொண்டும் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை.  2021 -ம் ஆண்டு  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்னை பார்த்து பழனிசாமி பயப்படுகிறார் என்பதால் நான் தேர்தலில் கூட போட்டியிடவில்லை, வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தீய சக்தி திமுகவையும், துரோக சக்திகளையும் மக்கள் தோற்கடிப்பார்கள்.


திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட டி.டி.வி.தினகரன்

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு கூட நமக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா தர மறுக்கிறது. வரும் காலங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும், நம்மை வறுமையில் தள்ளுவதற்கு கர்நாடக அரசு முயல்கிறது, அதற்கு திமுக அரசு துணை போகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாயிகளைப் பற்றியோ, ஏழை எளிய மக்களை பற்றியோ கவலை இல்லை, பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியை பற்றி மட்டுமே அவர் சிந்தித்து வருகிறார். அதனால் தான் இதுவரை தண்ணீர் பெறுவதற்கான எந்த முயற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை என்றார்.


திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட டி.டி.வி.தினகரன்

மேலும் தொடர்ந்து பேசியவர், “தமிழகத்தில் இரண்டு கோடி குடும்பங்கள் இருக்கும் பொழுது, தேர்தல் வருகிறது என்ற அவசரத்தில் ஒரு கோடி குடும்பத்திற்கு அவசர கதியில் பணத்தை வழங்கியுள்ளார். அனைத்து குடும்பங்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் தெரிவித்துவிட்டு, பெயர் அளவில் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். திமுகவின் 505 தேர்தல் வாக்குகளில்  எதையும் நிறைவேற்றாமல் 99 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக ஸ்டாலின் கூறி வருகிறார். நீட் தேர்வை நீக்குவோம் என சொன்னார்கள் அதற்கான நடவடிக்கை என்ன என்பதை தெரியவில்லை, சிலிண்டர் மானியம் 100 ரூபாய் வழங்குவதாக தெரிவித்தார்கள் அதையும் இதுவரை செய்யவில்லை.


திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட டி.டி.வி.தினகரன்

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்றார்கள், கொரோனா காலகட்டத்தில் பணியாற்றி செவிலியர்கள் பணி நிரந்தரம் என்றார்கள் இதுபோன்று பல வாக்குறுதிகளை  நிறைவேற்றமால், சொல்லாததையும் செய்வோம் என்று கூறியது போல், சொத்து வரியை உயர்த்தி உள்ளனர், மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர், முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர், ஆவின் பால் பொருட்களை உயர்த்தி உள்ளனர். இதில் தான் முதல்வர் ஸ்டாலின் சாதனை செய்துள்ளார். பாஜகவை வைத்து தமிழகத்தில் மிரட்டியே திமுக ஆட்சிக்கு வந்தது. மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை காட்டிய மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர துடிக்கிறது,  பழனிச்சாமி கம்பெனிக்கும் திமுகவிற்கும் மாற்று சக்தியாக வரும்  நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெரும்” என்றார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget