திமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியாது தமிழக மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள் - செல்லூர் ராஜூ பேட்டி !
திருமாவளவன் போர் குரல் கொடுத்துவிட்டு அமுங்கிவிட்டார் - செல்லூர் ராஜூ விமர்சனம்.

திமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியாது தமிழக மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்
செல்லூர் ராஜூசெய்தியாளர் சந்திப்பு
திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல உள்ளது. காங்கிரஸ் இப்போது போர்க்குரல் எழுப்பி உள்ளார்கள். திருமாவளவன் போர்க் குரல் எழுப்பி எழுப்பி அமுங்கிவிட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி அளித்தார். முன்னாள் அமைச்சரும் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செல்லூர் ராஜு கோரிப்பாளையத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...," விடியா ஆட்சி வீட்டுப் பில்" சாட்சி என்ற செயலி இப்போதுதான் மதுரை மண்டலத்திற்கு வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி இன்னும் ஏன் பணிகள் தொடங்கவில்லை என்று கேட்டார். கடவுச்சொல் நேற்றுதான் வந்துள்ளது என பதிலளித்தேன். நான் ஏற்கனவே இது போன்ற ஒரு செயலியை தொடங்கி வைத்தது அது வெறும் ட்ரயல். இப்போது தான் முழு திரைப்படத்தை மக்களிடத்தில் காண்பிக்கப் போகிறோம்.
விலைவாசி உயர்வு
திமுக ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஒரிரு சதவீதம் ஜி.எஸ்.டி வரி போடுகிறது. இதனை தமிழகத்தின் விலைவாசி உயர்வுடன் ஒப்பிட வேண்டாம். அதிமுக ஆட்சியில் வெங்காயம் உள்ளிட்ட உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மக்களுடைய ஓட்டுகள் சிதறக் கூடாது என்பதற்காக தான் தேர்தல் கூட்டணி அமைப்பார்கள்.
எதிர்கட்சி கூட வராது
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பவ்வியமாக உள்ளார்கள். 2026 ல் திமுக எதிர்க்கட்சியாக கூட அமர முடியாது. திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல உள்ளது. காங்கிரஸ் இப்போது போர்க்குரல் எழுப்பி உள்ளார்கள். திருமாவளவன் போர்க் குரல் எழுப்பி எழுப்பி அமுங்கிவிட்டார். எதனால் அமுங்கினார் என்று தெரியவில்லை. கட்சிகளை பிரிப்பது திமுக தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை இரண்டாக பிரித்துவிட்டார்கள். ஒருவேளை போர்க்குரல் எழுப்பினால் விசிக கட்சியை திமுக இரண்டாக உடைத்துவிடுவார்களோ என திருமாவளவன் பேசாமல் உள்ளார். இந்திய அளவில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் படி தலித்கள் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. ஆனால் கூட்டணியில் உள்ள திருமாவளவன் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை. பூரண மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவெடுப்பார்.திமுக ஹூரோவா ஜூரோவா என தெரியாது. மக்கள் கொதித்து போய் உள்ளனர். 2026 ல் தேர்தலில் உண்மையான ஹூரோ எடப்பாடி பழனிசாமி தான். எழுதி வைத்து கொள்ளுங்கள். கூட்டம் தானாக சேர வேண்டும். கூட்டப்படும் கூட்டத்தில் மாநாட்டில் முதல்வர் பேசுகிறார். ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்பதை முதல்வர் யாரிடம் கேட்டார். சாதாரண மக்களை சந்தித்து பேசினால் மட்டுமே மக்கள் பிரச்சினை தெரியவரும்.
தவெக குறித்தும், விஜய் குறித்தும் செல்லூர் ராஜுவை சுற்றி சுற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு கையேடுத்து கும்பிட்டு மற்றோரு நாள் பேசலாம், என்றார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















