மேலும் அறிய

மத்திய அரசில் தொடங்கி தமிழக அரசில் முடித்த ஜோதிமணி எம்.பி... மின்கட்டண எதிர்ப்பு குரல்!

”ஒன்றிய மோடி அரசின் கொடுமையான ஜிஎஸ்டி வரி மற்றும் மோசமான நிர்வாகத்தால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு மின்கட்டணத்தை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” - ஜோதிமணி

தமிழ்நாட்டில் நேற்று முன் தினம் (ஜூலை.18) மின் கட்டணம் உயர்வதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

அரசியல் தலைவர்கள் கண்டனம்

இதனையடுத்து தமிழ்நாட்டின்  அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் பொது மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மின் கட்டண உயர்வுக்கு வருத்தம் தெரிவித்து கரூர் எம்பி முன்னதாக ட்வீட் செய்துள்ளார்.

"ஒன்றிய மோடி அரசின் கொடுமையான ஜி.எஸ்.டி வரி மற்றும் மோசமான நிர்வாகத்தால் அத்யாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தொழில்கள் நசிவடைந்துள்ளன.

மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு மின்கட்டணத்தை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கோரியுள்ளார். ஒரே நேரத்தில் நேரடியாக தமிழக அரசை குற்றம்சாட்டக் கூடாது என்பதற்காக, மத்திய அரசை குறை கூறி, கூட்டணி தர்மத்தோடு தமிழக அரசையும் கண்டித்துள்ள ஜோதிமணி எம்.பி.,யின் பதிவை, பலர் விமர்சித்து வருகின்றனர். 

 

’தமிழ்நாட்டை ஆள்வது பாஜகவா, திமுகவா’

முன்னதாக நாம் கட்சித் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு மூலம் பலமுறை அழுத்தம் தந்ததாகக் கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மின் கட்டண உயர்வை அறிவித்த நிலையில்,  தமிழகத்தை ஆளுவது திமுகவா அல்லது பாஜகவா என்ற சந்தேகத்தை மக்களுக்கு எழுப்புவதாகவும், மக்களின் தலையில் வரிச்சுமையை ஏற்றி மானியம் பெற நினைப்பது திமுக அரசின் கையாலாகத்தனம் எனவும் சீமான் கடுமையாக சாடியிருந்தார்.

பாஜக போராட்டம்

அதேபோல், மின் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 23ஆம் தேதி தமிழ்நாடு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசின் மானியத்தை ஏற்று கொள்ளாமல் தனியாரிடம் அதிக விலையில் வாங்கி தற்போது நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறுவதாகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

மக்களுக்கு பாதிப்பில்லாத கட்டண உயர்வு

தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளார்.

200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 2 மாதங்களுக்கு 27.50 ரூபாய் கூடுதல் மின் கட்டணம், 301 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 147.50 ரூபாய் கட்டணம், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 298.50 கூடுதல் மின் கட்டணம் என அறிவிக்கப்பட்டது.

மேலும், நுகர்வோர் 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று நுகர்வோரே எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும்,ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்புத் திட்டம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார் 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
"தென் தமிழகத்தின் வளர்ச்சியில் இது திருப்புமுனை" எதை சொல்கிறார் பிரதமர் மோடி?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
IND vs ENG 4th Test: நெருக்கடியில் இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வி தர துடிக்கும் இங்கிலாந்து! போராடும் கில் - ராகுல்
IND vs ENG 4th Test: நெருக்கடியில் இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வி தர துடிக்கும் இங்கிலாந்து! போராடும் கில் - ராகுல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு
Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
"தென் தமிழகத்தின் வளர்ச்சியில் இது திருப்புமுனை" எதை சொல்கிறார் பிரதமர் மோடி?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
IND vs ENG 4th Test: நெருக்கடியில் இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வி தர துடிக்கும் இங்கிலாந்து! போராடும் கில் - ராகுல்
IND vs ENG 4th Test: நெருக்கடியில் இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வி தர துடிக்கும் இங்கிலாந்து! போராடும் கில் - ராகுல்
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
Embed widget