மேலும் அறிய

மதியம் டூ மாலை.. குடிக்க பச்சத்தண்ணிக் கூட கொடுக்கல.. புலம்பிய அதிமுக முன்னாள் அமைச்சர்.!

கரூரில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்வு, ஓய்வு பெற்ற நீதியரசர் முன்னிலையில் நடத்த நீதிமன்றத்தை நாடுவோம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி.

கரூரில் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ரகசிய தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலர் சென்ற காரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வாக்குவாதம், தள்ளுமுள்ளு, தகராறு ஏற்பட்டதை அடுத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோரை கைது செய்து வெங்கக்கல்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்தனர்.


மதியம் டூ மாலை.. குடிக்க பச்சத்தண்ணிக் கூட கொடுக்கல.. புலம்பிய அதிமுக முன்னாள் அமைச்சர்.!

இதனை அறிந்த அதிமுகவினர் கரூர் - திண்டுக்கல் சாலையில் திருமண மண்டபம் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார்  கலைந்து செல்ல அறிவுத்தினர். அவர்கள் கலைந்து செல்லாததால் சாலையில் அமர்ந்து இருந்த 3 பெண்களை மட்டும் கைது செய்து  போலீசார் வாகனத்தில் ஏற்றி அழைத்த சென்றனர்.


மதியம் டூ மாலை.. குடிக்க பச்சத்தண்ணிக் கூட கொடுக்கல.. புலம்பிய அதிமுக முன்னாள் அமைச்சர்.!

இதனை தொடர்ந்து சாலையில் நின்று கொண்டிருந்தவர்களிடம் கைது ஆகிறவர்கள் மண்டபத்திற்குள் செல்லுமாறும், மற்றவர்கள் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். இதனை தொடர்ந்து மண்டப வளாகத்தில் இருந்த அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. தற்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் தனியார் திருமண மண்டப வளாகத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.



மதியம் டூ மாலை.. குடிக்க பச்சத்தண்ணிக் கூட கொடுக்கல.. புலம்பிய அதிமுக முன்னாள் அமைச்சர்.!

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், போலீசார் திமுகவின் ஏவள் துறையாக இருந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை வலுக்கட்டாயமாக கைது செய்து திருமண மண்டபத்தின் வெளிப் பகுதியில் தரையில் அமர வைத்துள்ளதாகவும், குடிக்க தண்ணீர் கூட தரவில்லை என குற்றம் சாட்டினார். மேலும், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு நடத்த வேண்டும் என நீதிமன்றத்தை நாட உள்ளோம். எங்களை தாக்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், ஆய்வர்கள் மீது மனித உரிமைகள் ஆணையம் மீது புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்தார். 


மதியம் டூ மாலை.. குடிக்க பச்சத்தண்ணிக் கூட கொடுக்கல.. புலம்பிய அதிமுக முன்னாள் அமைச்சர்.!

பின்னர் வெங்கக்கல்பட்டி அருகே தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த முன்னாள் திமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்பட 50க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளை மாவட்ட காவல்துறையினர் வருகை பதிவேட்டில் அடையாளங்கள் பெற்றுக்கொண்டு பின்னர் அனைவரையும் விடுதலை செய்தனர். இன்று நடைபெறவிருந்த மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பதவிக்கான தேர்வு முறையாக நடைபெறுமா, அல்லது நடைபெறாமலே போய்விடுமா, அல்லது பல நாட்கள் கால தாமதம் ஆகுமா  என்ற பல்வேறு கேள்விகளுடன் (அதிமுக, திமுக) இரண்டு தரப்பு ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் குழப்பத்தில் புலம்பிக் கொண்டு இருக்கின்றனர்.

கரூர் அருகே காவல்துறையினரால் முன்னாள் அதிமுக அமைச்சர் கைது செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
Virat Kohli:
Virat Kohli: "நம்பவே முடியல.. எல்லாத்தையும் கொடுத்துருக்கேன்.." கண்கலங்கிய சாம்பியன் விராட் கோலி
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
Virat Kohli:
Virat Kohli: "நம்பவே முடியல.. எல்லாத்தையும் கொடுத்துருக்கேன்.." கண்கலங்கிய சாம்பியன் விராட் கோலி
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
Embed widget