பள்ளிகளிலும் கூட மதுக்கடைகளை திறந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை - விஜயபாஸ்கர்
கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட்டில் நகர அதிமுக சார்பில் பொது மக்களின் கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் மணிகண்டன் கோபால் தலைமையில் நடைபெற்றது.

தமிழக அரசு பள்ளிகளில் கூட மதுக்கடைகளை திறந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும், கொள்ளையடிப்பதை யே நோக்கமாகக் கொண்ட ஆளுங்கட்சி அரசு மீது திமுக கட்சியினரே அதிருப்தியில் உள்ளதாகவும் குளித்தலையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட்டில் நகர அதிமுக சார்பில் பொது மக்களின் கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் மணிகண்டன் கோபால் தலைமையில் நடைபெற்றது.
இதில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், நீர்மோர் ஆகியவற்றினை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
கரூர் நகர ஐடி விங்க் துணைத் தலைவர் கார்த்திக் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு தமிழக முதல்வர் குறித்தும், திருமண மண்டபங்கள் விளையாட்டு மைதானங்களில் மது விருந்து அளிப்பது குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி பரப்பியதாகவும், கூறி நகர காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
கைது செய்து 6 மணி நேரம் அவர் எங்கிருக்கிறார் என்பதை தகவல் தெரிவிக்க மறுத்த காவல்துறையினர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது நீதிபதி அவர் மீது பொய்யான வழக்கு தொடுத்ததன் காரணமாக அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கி உள்ளதாகவும், மணல் கடத்தல் கொள்ளையை தடுக்கும் என்றால் விஏஓ படுகொலை குறித்தும் சமூக வலைதளங்களில் செய்திகள் மீம்ஸ்கள் பரவிய போதும் அனைவரையும் தமிழக அரசு கைது செய்யுமா என்றும்,
தமிழக முதல்வர் பதவி ஏற்றதும் மணல் வண்டியில் ஆற்றில் மணல் அள்ளலாம் அதனை தடுக்கும் அதிகாரிகளை என்னிடம் கூறுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஒருமையில் பேசினார் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அதுபோல்தான் தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் இயன்ற விஏஓ மணல் மாஃபியா கும்பலால் அவரது அலுவலகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டத்தில் அதிமுகவினரின் மீது பொய்யான வழக்குகளில் காவல்துறையினர் மூலம் கைது செய்து வருவதாகவும் மேலும் பொதுக்கூட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் காவல்துறை அனுமதி அளிக்க விடாமல் தடுத்து வருவதாகவும், தமிழகத்தில் அனைவருக்கும் ஒரு சட்டம் என்றால் கரூர் மாவட்டத்தில் ஒரு சட்டம் என்றும்
இந்த ஆளுங்கட்சி திமுக அரசு பள்ளிகளில் கூட மது கடைகளை திறந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு இருப்பதாகவும் நேற்று கரூர் மாநகராட்சியில் நடந்த நகர் மன்ற கூட்டத்தில் ஆளுங்கட்சி திமுக உறுப்பினர்களே கோடை காலத்தில் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்காமல் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து திமுக அரசை எதிர்த்து திமுகவினரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இந்த அரசு மீது அதிருப்தி அடைந்த திமுக கவுன்சிலர்களே தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும்

எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிவுரையின்படி கரூர் மாவட்டத்தில் தீவிர உறுப்பினர்கள் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.




















