மேலும் அறிய

நிகழ்ச்சியில் பேசாமல் சென்ற முன்னாள் அமைச்சர்; மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓரம் கட்டப்படுகிறாரா ஓ.எஸ்.மணியன்...? 

சீர்காழியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் மேடையில் அமராமல், பொதுமக்களுடன் அமர்ந்திருத்து நிகழ்ச்சியில் பேசாமல் சென்ற முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக கட்சி சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சீர்காழி  நகர் கழக செயலாளர் வினோத்  தலைமையில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் பேசாமல் சென்ற முன்னாள் அமைச்சர்; மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓரம் கட்டப்படுகிறாரா ஓ.எஸ்.மணியன்...? 

இந்த பொதுக்கூட்ட நிகழ்விற்கு கட்சியினர் பலரும் ஏராளமான பேனர்கள் வைத்திருந்தனர். அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி உள்ளிட்டோர் படங்கள் அனைத்தும் பேனர்களில் இடம்பெற்றன. ஆனால் முன்னாள் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் சக்தி சார்பில் பொதுக்கூட்டம் மேடை அருகில் வைக்கப்பட்ட பேனரில் மட்டும் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.வி.பாரதி புகைப்படம் இடம் பெறவில்லை.


நிகழ்ச்சியில் பேசாமல் சென்ற முன்னாள் அமைச்சர்; மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓரம் கட்டப்படுகிறாரா ஓ.எஸ்.மணியன்...? 

இதேபோன்று பொதுக்கூட்டத்திற்கு நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக கழக மாவட்ட செயலாளரும், தற்போதைய வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டார். அப்போது அவர் கூட்டத்திற்கு வருகையில், மேடை முழுவதும் கட்சி பொறுப்பாளர்கள் அமர்ந்திருந்தனர். இதனால் மேடையில் ஏறி அமராமல், பொதுமக்களுடன் மேடையின் எதிரே போடப்பட்ட சேரில் அமர்ந்தார். தொடர்ந்து  கட்சியினர் மேடையில் ஏறி அமர கூறியும் மறுத்து மேடைக்கு கீழ் அமர்ந்தார். பின்னர் 8 மணிக்கு மேடை அருகே வந்த ஓ.எஸ்.மணியன் வந்தார்.  தலைமை கழக பேச்சாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் பேசினார்கள். இரவு 10 மணியை கடந்து பலர் பேசியதால் கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் அங்கிருந்து நடையை கட்டினர்.


நிகழ்ச்சியில் பேசாமல் சென்ற முன்னாள் அமைச்சர்; மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓரம் கட்டப்படுகிறாரா ஓ.எஸ்.மணியன்...? 

பின்னர் இறுதியாக ஓ.எஸ்.மணியன் பேச அழைத்தார். இதனைத் தொடர்ந்து மேடையில் ஏறிய அவர், இனிவரும் காலங்களில் உங்களை காக்க வைக்காமல் முன்னதாகவே நான் பேசுகிறேன் என கூறி தொடர்ந்து பேசாமல் தனது பொதுக்கூட்ட நிகழ்வை முடித்துக்கொண்டார். பொதுவாக ஓ.எஸ்.மணியனின் பேச்சு தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், எதிர்கட்சியை கடுமையாக விமர்சித்தும் இருக்கும். இதனால் அவரது பேச்சை கேட்க பலம் எதிர்பார்த்த நிலையில் அவர் பேசாமல் சென்றது ஏமாற்றத்தை அளித்தது.


நிகழ்ச்சியில் பேசாமல் சென்ற முன்னாள் அமைச்சர்; மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓரம் கட்டப்படுகிறாரா ஓ.எஸ்.மணியன்...? 

மேலும், இதனை கண்ட தொண்டர்கள் சிலர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் குறிப்பாக சீர்காழி அதிமுக கட்சியினர் இடையே  உட்கட்சி பூசல் உள்ளதாகவும், அதன் காரணமாகவே முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்கப்படவில்லை என்றும், எம்எல்ஏ சீட்டு பெறுவது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏக்கள் ஆன பாரதி சக்தி இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், அதன் காரணமாகவே முன்னாள் எம்எல்ஏ சக்தி, பொதுக்கூட்டத்திற்கு வைத்த பேனரில் மயிலாடுதுறை மாவட்ட அவை தலைவர் பாரதியின் புகைப்படம் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் அதிமுக இடையே மேல்மட்டத்தில் வெளிப்படையான கட்சி பிரச்சனை நிலவி வரும் நிலையில் மாவட்டங்களிலும் இதுபோன்ற உட்கட்சி பிரச்சனை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!

வீடியோ

TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
Director Mohan G: தமிழகம் முழுக்க நாடக காதல்.. உடனே பெற்றோருக்கு உதவி பண்ணுங்க.. கொந்தளித்த மோகன் ஜி!
Director Mohan G: தமிழகம் முழுக்க நாடக காதல்.. உடனே பெற்றோருக்கு உதவி பண்ணுங்க.. கொந்தளித்த மோகன் ஜி!
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Best Mileage Cars: ஒரு கிலோமீட்டருக்கு வெறும் ரூ.2.68 தான்; உங்கள் செலவை குறைக்கும் சூப்பரான மைலேஜ் கார்களின் லிஸ்ட்
ஒரு கிலோமீட்டருக்கு வெறும் ரூ.2.68 தான்; உங்கள் செலவை குறைக்கும் சூப்பரான மைலேஜ் கார்களின் லிஸ்ட்
Embed widget