மேலும் அறிய

RB Udhayakumar : ஓ.பி.எஸ்-க்கு தகுதி இல்லை! அம்மாவால் ஒதுக்கப்பட்டவர்.. ஆர்.பி உதயகுமார் பதிலடி

அதிகாரம் வேண்டுமென்றால் அமைதியாக இருப்பார், அதிகாரம் இல்லை என்றால் எந்த எல்லைக்கும் பன்னீர்செல்வம் போவார் என்று ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார்.

பன்னீர்செல்வத்தின் மீது நம்பிக்கையை குறைபாட்டில் தான்  அம்மா இருந்தார் என்னிடமே அதை தெரிவித்தார் அதை நான் வெளியே பகிர்ந்தால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்று ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். 

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். இதில் பல்வேறு தகவல்களை வெளியிட்டார். இந்நிலையில் இது குறித்து சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்...,” ஓ.பி.எஸ்க்கு நான் நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன் ஏன் என்று சொன்னால், அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று மக்களிடத்திலே அந்த செய்தி சென்று விடக்கூடாது  அம்மா அவர்கள் எனக்கு நற்சான்று கொடுத்தார் என்று அடிக்கடி தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.
 
அம்மா அவர்கள் நம்மோடு இருந்த போது இதே தேனி மாவட்டத்தில் இவர் தான் அதிகாரம் மையம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, 2010 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்திற்கு இவரை தள்ளி வைத்துவிட்டு  அம்மா அவர்கள் இந்த சாமானிய  தொண்டரான இந்த உதயகுமாரை தான் தேனி மாவட்டத்தில் தலைமை தாங்க உத்தரவிட்டார்கள். அன்று முதல் அவர் என்னென்ன நடவடிக்கைகளை தன் அதிகாரத்திற்கு போட்டியாகவோ, இணையாகவோ, துணையாகவோ, அல்லது பின்னாலோ, முன்னாலோ எந்த வடிவத்திலும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் எடுத்து வைத்த முயற்சிகள் எல்லாம் அவருடைய மனசாட்சிக்கு தெய்வ சாட்சியாக விட்டுவிடுகிறேன்.

தேனியில் தேர்தல் பணி

நாடாளுமன்றத்தில் வெற்றிக்காக எனக்கு பணியாற்றுகிற வாய்ப்பு கிடைக்கிற போது தலைமைக்கும், இரட்டை இலை விசுவாசமாக நான் பணியாற்றி, தமிழக முழுவதும் வெற்றி வாய்ப்பு நலிவு போகிற போது தேனி மாவட்டத்தில் இரட்டை இலை மலர்ந்தது அதற்கு இந்த சாமானிய தொண்டனுடைய அந்த விசுவாசமான உழைப்பு எப்படி என்பதை நீங்கள் வேண்டுமானால் உங்கள் வசதிக்காக மறந்து இருக்கலாம் அல்லது மறைக்க முயற்சிக்கலாம் உங்களுக்கு நேரம் கிடைத்தால் மனசாட்சி இருந்தால் எளிய தொண்டனிடம் விசாரித்து பாருங்கள் நான் விசுவாசத்தோடு இரட்டை இலை சின்னத்திற்காக  எப்படி உழைத்தேன் என்பதையும், எப்படி பாடுபட்டேன் என்பதையும் அந்த தொண்டர்கள் சான்றாக சொல்வார்கள்.
 
அம்மா அவர்கள் தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை குறைபாட்டில் தான் அப்போது அம்மா அவர்கள் தங்கள் மீது வைத்திருந்த அபிமானத்தை பற்றி இந்த சாமானிய தொண்டான என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள் என்பதை நான் வெளியே சொன்னால் அது அரசியல் நாகரிகமாக இருக்காது. அனைத்திந்திய அதிமுக அந்த வெற்றியை வரலாறுக்காக நான் என்னை தியாகம் செய்துவிட்டு ஒரு நாளும் தயங்கவில்லை இந்த நிமிடமே அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்வதற்கும் நான் தயங்குவது அல்ல? ஏன் இதை சொல்லுகிறேன் என்று சொன்னால் நான் பதவிற்காகவோ அதிகாரத்திற்காகவோ ஒரு நாளும் ஒருபோதும் ஆசைப்பட்டவன் அல்ல நான் வைக்கின்ற இந்த பொறுப்புகள் எல்லாம் விசுவாசத்தோடு நான் பணியாற்றவைக்காக தலைமை என்னை தேடிக் கொடுத்த பதவிகள் தானே தவிர அங்கீகாரம் தவிர, நான் தேடிப்போய் பெற்ற பதவிகள் அல்ல என்பதை இந்த தமிழ்நாட்டு மக்களுக்கும் கழக தொண்டர்களுக்கும் நான் விளக்கம் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆண்டவனுக்கே பொறுக்காது

அன்றைக்கு அம்மா அவர்கள் இருந்தபோது டாக்டர் வெங்கடேஷ் அவர்கள் சோபாவில் அமர்ந்திருந்த போது இந்த உதயகுமார் எந்த இடத்தில் அமர்ந்திருந்தார் என்று சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்று நீங்கள் சொல்லி உள்ளீர்கள் தயவு செய்து  அதை சொல்லுங்கள் ,உங்களுடன் நான் எந்த நிலையில் அமர்ந்திருந்தேன் என்பதை நீங்கள் சொல்லுங்கள்,நீங்கள் உட்கார்ந்து இருந்த இடத்திலே தான் நானும் உட்கார்ந்திருந்தேன்.
 
எங்களை ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று  பிரச்சனையை திசை திருப்புகிற பாணியில்  நீங்கள் பேசி வருவது ஆண்டவனுக்கே பொருந்தாது, இந்த கோடான கோடி அனைத்து கழகத்தினுடைய அப்பாவி தொண்டர்களையும், தமிழக மக்களையும் இனியும் நீங்கள் ஏமாற்றக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிலை கூட நான் சொல்கிறேன்.
 
வாய்க்கு வந்ததை பழி சுமத்தி  சொல்லி வருகிறீர்கள் ஏதோ ஒற்றுமைக்கு எதிராக பிரச்சனையை திசை தர்ப்ப வகையில் நீங்கள் பேசுவது ஆண்டவனுக்கு கூட பொறுக்காது அப்பாவி தொண்டர்களை ஏமாற்றக்கூடாது நீங்கள் நிர்பந்தம் இல்லை என்று கூறுகிறீர்கள். இந்த நிமிடமே எடப்பாடியார் உத்தரவிட்டால் ஆணையிட்டால் இந்த நிமிடமே எனது பொறுப்புகள் அனைத்து நான் இந்த நிமிடமே துறக்க தயாராக இருக்கிறேன் ஆனால் நீங்கள் அவ்வாறு இல்லையே? 

வேஷ்டி கட்ட கூட முடியாத ஒரு நிலைமை

பலாப்பழத்தில் நிற்பதற்கு யார் காரணம்? நீங்கள் பதவி ஆசையினாலே மத்திய அமைச்சராகி விடலாமா என்று கூட அந்த ஆசை என்ன என்பது எனக்கு தெரியும் என்ன விபரங்கள் எல்லாம் பேசப்பட்டது எல்லா விவரங்களும் எனக்கு அரசியல் நாகரிகம் கருதி நான் அதை சொல்லவில்லை. தேனி மாவட்டத்தில் அதிகாரம் தங்கள் பிள்ளைக்கு வேண்டும் என்று தான் நினைத்தீர்களே யாராவது உருவாக்கி உள்ளீர்களா இரட்டை இலை என்பது வாழ்வுக்கு சமம் அதை எதிர்ப்பு நிற்பது இறப்புக்கு சமம். உங்களுடைய சுயநலத்திற்காக அதிகாரத்திற்காக நீங்கள் உண்மையை மறைத்து செயல்பட்டீர்கள் அது  தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கி நைனார் நாகேந்திரன் தொடங்கி வரை உங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.
 
இதுதான் நீங்கள் கடைபிடித்த பாதை தர்மம் ஆகவே எனக்கு எச்சரிக்கை விடுகிற தகுதி உங்களுக்கு இல்லை நான் எந்த எச்சரிக்கையும் எதிர்கொள்வதற்கு தயாராகத்தான் இருக்கிறேன். இன்னும் விவாதிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்பப்பட்டால் நான் தயாராக இருக்கிறேன். இன்றைக்கு உங்களுக்கு வேஷ்டி கட்ட கூட முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது இதற்கு என்ன காரணம் என்ன காரணம்?  அதற்கு என்ன காரணம் இதையெல்லாம் நீங்கள் ஒரு நிமிடம் இதற்கு உண்மையான விடை கிடைக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Elon Musk Net Worth: சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Elon Musk Net Worth: சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
Tata Punch vs Hyundai Exter: டாடா பஞ்ச் சிஎன்ஜி-யா.? ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி-யா.? குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் சிறந்தது.?
டாடா பஞ்ச் சிஎன்ஜி-யா.? ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி-யா.? குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் சிறந்தது.?
Life Insurance Tips: மக்களே கவனம்.! ஆயுள் காப்பீடு வாங்கும்போது இந்த தவறுகள செய்யாதீங்க.. இல்லைன்னா இழப்பு தான்.!
மக்களே கவனம்.! ஆயுள் காப்பீடு வாங்கும்போது இந்த தவறுகள செய்யாதீங்க.. இல்லைன்னா இழப்பு தான்.!
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Maruti Swift Without Tax: வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
Embed widget