மேலும் அறிய

‛அரசு கருவூலத்திற்கு வருமா கல்குவாரி வருவாய்...?’ -இபிஎஸ் கண்டன அறிக்கை!

50 சதவீதத்திற்கு மேல் காலாவதியான கல் குவாரிகள், எவ்வித பர்மிட்டும் பெறாமல், கவனிக்க வேண்டிய ஆளும் கட்சியினரை கவனித்துவிட்டு, ஜல்லி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பதாக இச்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை இதோ அப்படியே...


‛அரசு கருவூலத்திற்கு வருமா கல்குவாரி வருவாய்...?’ -இபிஎஸ் கண்டன அறிக்கை!

கல் குவாரிகளில் பர்மிட் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை களைந்திடுக! மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களும், தொடர்ந்து அம்மாவின் அரசும், கல் குவாரிகள் மூலம் அரசின் கருவூலத்திற்கு வரவேண்டிய பணம் தனியார் கையில் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, குவாரிகளின் செயல்பாட்டினை முறைப்படுத்தினர்.

பொதுவாக, ஒரு கல் குவாரி நடத்துவதற்கு அரசுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொரு வருடமும் எவ்வளவு யூனிட் ஜல்லி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று விரிவாக திட்ட அனுமதியில் தெரிவிக்க வேண்டும். மழைக் காலம் மற்றும் பண்டிகைக் காலங்களில் ஜல்லியின் தேவை குறைவு. எனவே, குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக விடுமுறையில் செல்வது வழக்கம். கோடை மற்றும் இதர மாதங்களில் கட்டுமானப் பணிகள் அதிகமாக நடைபெறும்; ஜல்லியின் தேவையும் அதிகம். அப்போது, அதன் விலை அதிகரிக்காத வண்ணம் குவாரி உரிமையாளர்கள் ஜல்லி உற்பத்தியை அதிகரிப்பார்கள். எனவே, ஜல்லியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, தேவைக்கேற்ப ஜல்லி உற்பத்தி அதிகரிக்கப்படும். இதனால் விலை நிலையாக இருக்கும்.

உதாரணமாக, அம்மா ஆட்சியிலும், தொடர்ந்து அம்மாவின் அரசு ஆட்சி செய்தபோதும், முதல் வருடம் சுமார் 12000 யூனிட் ஜல்லி தயாரிக்கப்படும் என்று கூறி கல்குவாரி நடத்துவதற்கு அனுமதி பெற்றவர்கள், ஒவ்வொரு மாதமும் பருவ நிலைக்கு ஏற்றவாறு, அதாவது மழைக் காலம் மற்றும் பண்டிகைக் காலங்களில் ஜல்லி உற்பத்தியினை குறைத்தும், மற்ற மாதங்களில் ஜல்லி உற்பத்தியினை அதிகரித்தும், ஒரு மாதத்திற்கு இத்தனை யூனிட் ஜல்லி உற்பத்தி செய்கிறோம் என்று பர்மிட் கோரி விண்ணப்பித்தனர். உதவி இயக்குநர்களும் அதற்கேற்ப நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது மாதம் ஒருமுறையோ பர்மிட் வழங்கி வந்தனர். இதனால் சந்தையில் கட்டுமான தேவைக்கேற்றவாறு ஜல்லி கிடைப்பதில் எந்தவிதமான சிக்கல் இல்லாமலும், ஜல்லிக்கு செயற்கையான விலையேற்றம் இல்லாமலும் விலை நிலையாக இருந்து வந்தது.


‛அரசு கருவூலத்திற்கு வருமா கல்குவாரி வருவாய்...?’ -இபிஎஸ் கண்டன அறிக்கை!

ஆனால், இந்த விடியா அரசு பொறுப்பேற்றதில் இருந்து கல் குவாரிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளில் ஒருசிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த ஆட்சியில், கடந்த இரண்டு மாதங்களாக கல் குவாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பர்மிட் முறையில் மாற்றம் செய்யப்பட்டது. உதாரணமாக, ஆண்டுக்கு சுமார் 12000 யூனிட் ஜல்லி உற்பத்தி செய்யப்படும் என்று கூறி குவாரி நடத்த அனுமதி பெற்றவர்கள், அந்த வருடத்திற்கான மொத்த உற்பத்தியை 12 மாதங்களுக்கு சமமாகப் பிரித்து, மாதத்திற்கு 1000 யூனிட் ஜல்லி வீதம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற புதிய விதியினை, உதவி இயக்குநர் மூலமாக தமிழக அரசு தங்கள் மீது திணிப்பதாசு கல் குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால், மழைக் காலங்கள், பண்டிகைக் காலங்களில் கட்டுமானப் பொருட்களின் தேவை குறைவாக இருந்தாலும் அல்லது மற்ற மாதங்களில் அதிகமாக இருந்தாலும், அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், மொத்த ஆண்டு உற்பத்தியில், ஒரு மாதத்திற்கான சராசரி 1000 யூனிட் ஜல்லியை உற்பத்தி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் புதிய நிபந்தனையை விதிப்பதாக, கல் குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த பர்மிட் முறை தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை என்று மாற்றப்பட்டு உள்ளதாகவும் கல்குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் 3 நாட்களுக்கு ஒருமுறை ஜல்லி உற்பத்தியாளர்கள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. தேவையான அனுமதியைப் பெற ஒருநாள் முழுமையாக செலவாகிறது என்று ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

இதனால், மூன்று நாட்களுக்கு பர்மிட் வாங்கினாலும், மீதமுள்ள இரண்டு நாட்களுக்கு மட்டுமே கட்டுமானப் பணிகளுக்கு ஜல்லியை உற்பத்தி செய்யவும், வாகனங்களில் கொண்டு செல்லவும் இயலும். இவ்வாறு முறைப்படி கல் குவாரி நடத்துவதற்கு அனுமதி வாங்கி, ஜல்லி உற்பத்தி செய்பவர்களை இந்த அரசு இவ்வாறு கெடுபிடிகள் செய்கிறது.


‛அரசு கருவூலத்திற்கு வருமா கல்குவாரி வருவாய்...?’ -இபிஎஸ் கண்டன அறிக்கை!

ஆனால், 50 சதவீதத்திற்கு மேல் காலாவதியான கல் குவாரிகள், எந்தவிதமான பர்மிட்டும் பெறாமல், கவனிக்க வேண்டிய ஆளும் கட்சியினரை கவனித்துவிட்டு, ஜல்லி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பதாக இச்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதனால், அரசுக்கு வரவேண்டிய வருவாய் முழுவதும் எங்கே போகிறதென்று நாள் மக்களுக்கு விளக்க வேண்டியதில்லை. சுரூர், புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் போன்ற ஒரு சில மாவட்டங்களில் இது போன்ற நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுகிறது என்று கல்குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், இது போன்று விதிகளுக்குப் புறம்பாக கல்குவாரிகள் நடத்துபவர்கள், விதிகளின்படி செயல்படும் குவாரிகள், விதிகளை மீறி செயல்படுகிறார்கள் என்று அரசுக்கு மொட்டை பெட்டிஷன் போட்டு, தேவையின்றி மூடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று கல்குவாரி உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த அரசு, உடனடியாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை பர்மிட் வழங்கப்படும் என்ற புதிய நடைமுறையினை மாற்றி, பழையபடி 15 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது மாதத்திற்கு ஒருமுறையோ பர்மிட் வழங்க வேண்டும் என்றும், காலாவதியான கல் குவாரிகளில் எந்தவிதமான பர்மிட்டும் பெறாமல் ஜல்லியை உற்பத்தி செய்து விற்பனை செய்வதை அனுமதிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாண்புமிகு அம்மாவின் அரசில், எப்படி கல் குவாரிகளின் வருவாய் முழுமையாக அரசின் கருவூலத்திற்கு சென்றடைந்ததோ, அதன்படி இப்போதும் கல் குவாரிகள் மூலம் வரவேண்டிய வருவாய் முழுவதும் அரசின் கருவூலத்தைச் சென்றடைவதை, இந்த விடியா அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Thaipusam 2025 Modi Wishes: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”Illaiyaraja Deva Controversy | “நான் காசு வெறி புடிச்சவனா” இளையராஜா மீது தேவா ATTACK அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Thaipusam 2025 Modi Wishes: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
Embed widget