மேலும் அறிய

P.Wilson MP : ‘வரவேற்கிறோம் – அதே நேரத்தில்…’ நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய திமுக எம்.பி. வில்சன்..

’மசோதாவை கூட்டு குழுவிற்கு அனுப்பியதோடு, அதை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பதே கோரிக்கை’

 

வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை திருத்த மசோதாவை விரிவான ஆய்விற்காக கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு  அனுப்ப மத்திய அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்கும் அதே வேளையில் இந்த மசோதா முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பதே முதன்மையான கோரிக்கை என  சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றத்தின் தலைவர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.

FCRA திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றம் தொடர்ந்து போராடி வருகிறது.இந்தநிலையில் இந்த மசோதா விரிவான ஆய்விற்கு கூட்டு நாடளுமன்றக்குழுவிற்கு அனுப்ப மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது குறித்து அந்த அமைப்பின் தலைவரும்,மாநிலங்கவை உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் விடுத்துள்ள அறிக்கையில், FCRA திருத்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற  கோரிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பியிருப்பது ஒரு நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை என கருதுவதாகவும்,

சிறுபான்மை பிரதிநிதிகளின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் - வில்சன்

இந்த பரிந்துரை, மசோதாவை நாடாளுமன்றத்தில் விரிவாக ஆய்வு செய்வதற்கும், அனைத்து தரப்பினரிடமும் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்வதற்கும், நாடு முழுவதும் உள்ள தேவாலயங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், சட்ட வல்லுநர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சிறுபான்மை பிரதிநிதிகள் எழுப்பியுள்ள கவலைகளை முழுமையாகப் பரிசீலிப்பதற்கும் முக்கியமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வில்சன் சொன்னது என்ன ?

தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது, முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொண்டு, கல்வி, சுகாதாரம், மனிதநேய சேவை, சமூக சேவை மற்றும் மதப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஆரம்பம் முதலே  மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரியதாகவும், மாற்று வழியாக தங்களுடைய கருத்துகள், கவலைகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தின் முன் வைக்க வாய்ப்பு ஏற்படும் வகையில், மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக பி.வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பல மாதங்களாக தங்களது அமைப்பு  மேற்கொண்ட பிரச்சாரம் அமைதியானதாகவும், ஜனநாயக ரீதியானதாகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகவும், தொடர்ச்சியானதாகவும் இருந்து வந்துள்ளதாக கூறியுள்ள அவர்,கடந்த ஏப்ரல் மாதம்,  அப்போதைய தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், மசோதவை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு  பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும்,  ஏப்ரல் 16ம்தேதி  தனது தலைமையில் டெல்லி அரசியலமைப்பு கிளப்பில் முக்கியமான தேசிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தின் முடிவு

தொடர்ந்து கூட்டு நடவடிக்கை மன்றம், தேசிய இணையவழி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதில்,  நாடு முழுவதிலுமிருந்து 150-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சபைத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றதை குறிப்பிட்டுள்ளார்..தொடர்ந்து ஜூன்  17 ம்தேதி முக்கியமான தேசியத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதில், சுமார் 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றதையும் தெரிவித்துள்ள அமைப்பின் தலைவர் பி.வில்சன், சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றத்தின் அழைப்பை ஏற்று, ஜூன் 28 ம்தேதி இந்தியா முழுவதும் உள்ள தேவாலயங்கள், கிறிஸ்தவ குடும்பங்கள், மிஷன் அமைப்புகள் தேசிய பிரார்த்தனை மற்றும் உண்ணாநோன்பை கடைபிடித்தாகவும்,

ஜூலை3 அன்று JAFM நாடு தழுவிய தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்தியதாகவும், நாடு முழுவதும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள், கையெழுத்து சேகரிப்பு இயக்கங்கள் மற்றும் மனுக்கள் சமர்ப்பிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று பிரதமருக்கு அனுப்புவதற்காக மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 20ம்தேதி  அன்று, புதுடெல்லியில் உள்ள இந்தியா சர்வதேச மையத்தில் ஒரு முக்கியமான தேசிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதில் 100-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சபைத் தலைவர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றதாக பட்டியலிட்டுள்ளார்.

 தொடர்ந்து ஆகஸ்ட்  6ம் தேதி தனது தலைமையில் இந்தியாவில் உள்ள பல்வேறு கிறிஸ்தவப் பிரிவுகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள், அரசு சாரா நிறுவனங்கள், சுகாதார மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழு மத்திய உள்துறை அமைச்சரை அமித்ஷாவை சந்தித்து, திருத்த சட்டத்தால், பாதிக்கப்படும் கிறிஸ்தவ சமூகத்தினர் மற்றும் நிறுவனங்களின் கவலைகளை இக்குழு உள்துறை அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தாகவும்,மத்திய உள்துறை அமைச்சருடனான சந்திப்பைத் தொடர்ந்து,., கிறிஸ்தவ சமூகத் தலைவர்களுடன் இணைந்து திமுக தலைவர் .மு.க. ஸ்டாலினைச் சந்தித்து,உள்துறை அமைச்சருடனான சந்திப்பு.கிறிஸ்தவ சமூகத்தினருக்கும் சிறுபான்மையினருக்கும் தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து வருவதற்கும், தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கும் மு.க. ஸ்டாலினுக்கு குழு நன்றி தெரிவித்தாக கூறியுள்ளார்.

மசோதாவை திரும்ப பெற வேண்டும் - வில்சன்

மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற தங்களது பிரதான கோரிக்கையில் கூட்டு நடவடிக்கை மன்றம் உறுதியாக உள்ளது. அதேவேளையில், மசோதா நாடளுமன்ற கூட்டு நடவடிக்கைக்குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பதை ஒரு நேர்மறையான நடவடிக்கையாக  கருதுவதாகவும்,இந்த கடினமான மாதங்களில் தங்களுடன் நின்ற ஒவ்வொரு தலைவருக்கும்,  அரசியல் கட்சிகளுக்கும் ,நிறுவனத்திற்கும், தனிநபருக்கும் என அனைவருக்கும் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்தவாக மாநிலக்களவை உறுப்பினரும்,கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவருமான பி.வில்சன் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
P.Wilson MP : ‘வரவேற்கிறோம் – அதே நேரத்தில்…’ நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய திமுக எம்.பி. வில்சன்..
‘வரவேற்கிறோம் – அதே நேரத்தில்…’ நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய திமுக எம்.பி. வில்சன்..
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget