வருமான வரித்துறை சோதனையால் பிரசாரத்தை ரத்து செய்த எ.வ.வேலு
வருமான வரித்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடர்வதால் எ.வ.வேலு தனது பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார்.

திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் காரணமாக, தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் இணைந்து நேற்று சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு, திருவண்ணாமலையில் உள்ள அவரது கல்லூரி, அலுவலகங்கள் என மொத்தம் 18 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது

சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற சோதனை மட்டும் நிறைவு பெற்றுள்ள நிலையில், பிற இடங்களில் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை நகர பகுதியில் இன்று எ.வ.வேலு வாக்கு சேகரிப்பில் ஈடுபடலாம் என்று திட்டமிட்டிருந்தார். ஆனால், வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதால், எ.வ.வேலு இன்று திட்டமிட்டிருந்த தனது பிரச்சாரத்தை ரத்து செய்தார்.
Before You Go
"பதவி வேணுமா VIDEO CALL வா" அந்தரங்க வீடியோ வைத்து மிரட்டல் சிக்கிய தவெக மா.செ?
ட்ரெண்டிங் செய்திகள்






















