மேலும் அறிய

"திருக்குறளை தீர்த்துக்கட்டவே தமிழ்நாடு வந்திருக்கிறார் போல ஆளுநர்" - முரசொலி கடும் விமர்சனம்

திருக்குறளை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டிற்கு ஆளுநர் வந்திருக்கிறார் என்று முரசொலி தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்குறள் பற்றி பேசிய கருத்தால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, அவரது பேச்சை கண்டித்து ஆளுங்கட்சியான தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் தலையங்கத்தில் எழுதியுள்ளனர்.

முரசொலி தலையங்கத்தில் எழுதியிருப்பதாவது, “ திருக்குறளை தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார் போல ஆளுநர். தினந்தோறும் திருக்குறளை வம்புக்கு இழுத்துக் கொண்டிருக்கிறார். ஜி.யு.போப் தவறான பொருள் எழுதிவிட்டார் என்று புதிய கண்டுபிடிப்பை சில மாதங்களுக்கு முன்பு செய்தார். கோடிக்கணக்கான மக்கள் பல்லாண்டு காலமாக திருக்குறளை தமிழில்தான் படிக்கிறார்கள் தவிர, போப்பின் மொழிபெயர்ப்பில் அல்ல என்பதை கூட அவர் அறியவில்லை.


தமிழில் எழுதப்பட்ட திருக்குறள் தமிழில்தான் தமிழர்களால் படிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் அல்ல என்பதை அவருக்கு யாராவது முதலில் சொல்ல வேண்டும். ஆன்மீகத்தின் ஆதாரமாக விளங்கும் திருக்குறள் வெறும் வாழ்க்கை நெறி நூலாக மட்டும் காட்சிப்படுத்தப்படுகிறது என்று வருத்தப்பட்டுள்ளார். அரசியலுக்காக உண்மையைச் சொல்ல சிலர் மறுக்கின்றனர் என்றும் சொல்லி இருக்கிறார்.

அந்த சிலர் யார்..? நாம்தான். அரசியலுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? திருக்குறள் என்ன தேர்தல் அறிக்கையா..? அதனை அரசியலுக்காக மாற்றிச் சொல்வதற்கு..? உலகப்பொதுமறையை உள்ளத்தால் ஒழுகி ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் என்பதே நமது நோக்கம். கள்ளத்தால் யாரும் களவாடி விடக்கூடாது என்பதே நமது நோக்கம்.

திருக்குறளுக்கு தவறான பொருள் உரைத்து ஆரிய சக்திகள் அழிக்க நினைத்தபோது, குறளாசானின் உண்மை மனதை உலகுக்கு உணர்த்த முற்பட்டது திராவிட இயக்கம். 1940ம் ஆண்டுகளில் பெரியார் நடத்திய குறள் மாநாடுகளுக்கு அதுவே அடிப்படை. உங்கள் மதம் குறள் மதம். உங்கள் நெறி குறள் நெறி என்று சொல்லுங்கள் என்றார் பெரியார். ஆரியப் பித்தலாட்டங்களுக்கு சரியான மருந்து. சரியான மறுப்பு திருக்குறள்தான் என்றார் பெரியார்.


குறளோவியம் தீட்டினார் தீந்தமிழ் கலைஞர். தலைநகர் சென்னையில் வள்ளுவப் பேராசானுக்கு கோட்டம் கண்டார் கலைஞர். கடல் நகராம் குமரியில் 133 அடி உயரச்சிலை அமைத்தார் தமிழ்ச்சிற்பி கலைஞர். நோக்கும் இடமெல்லாம் குறள் தீட்டி மக்கள் மனதில் ஈரடியை எழுதக்காரணம கலைஞர்.

தி.மு.க. என்பது தமிழ் முன்னேற்ற கழகமாக செயல்பட்ட காரணத்தால்தான் குறளும், தமிழும் இன்றைக்கு தலைநிமிர்ந்து நிற்கிறது. இல்லாவிட்டால் 1938 முதல் 1965 வரை தமிழ்நாட்டில் அடித்த ஆரிய இந்திச்சுனாமிகளால் குறளும், தமிழும் காணாமல் போயிருக்கும். அதனை காத்ததுதான் திராவிட அரசியல். இன்றைக்கு இவர்களுக்கு திருக்குறள் பாசம் பொங்குவதற்கு காரணம் குறளின் புகழொளிதான்.

வள்ளுவர் புதிதாக எதையும் சொல்லவில்லை. ஆரிய சரக்கைத்தான் தமிழ்ப்படுத்தினார் என்று சொல்லி இந்த புகழொளியை மட்டுப்படுத்தாதீர்கள். ஆரிய நெறி வேறு. குறள் நெறி வேறு என்பதை தமிழர்கள் உணர்ந்த காரணத்தால், இப்போது திருக்குறளை  கெடுக்கப்பார்க்கிறார்கள்.

ஆன்மீக குறள் என்று குரல் எழுப்ப காரணம், அதை ஆரியக்குறளாக மாற்றுவதற்கே. கீதை சொல்லும் அறம் வேறு. குறள் சொல்லும் அறம் வேறு. அர்த்தசாஸ்திரம் சொல்லும் அறம் வேறு. குறள் சொல்லும் பொருள் வேறு. வாத்சாயனரின் காம சாஸ்திரம் சொல்லும் இன்பம் வேறு. குறள் சொல்லும் இன்பம் வேறு.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயரிய கோட்பாடு உலகில் இடம்பெற்றால்தான் வெள்ளையர், கறுப்பர், தீண்டத்தக்காதவர் என்ற மனித குலத்தினை பிரித்து  ஆட்டிப்படைக்கும் தீமைகள் மறையும். எனவே, திருக்குறளை வெளிநாட்டவர் குறிப்புகளில் இருந்தல்லாமல் உள்நாட்டு தமிழர்களின் சொற்களின் வாயிலாக அறிந்து பேச ஆளுநர் முனைவாராக”

இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது,  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நடிகர் விஜய் இன்னும் நடித்துக் கொண்டிருக்க வேண்டாம் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று பேசவேண்டும் - ஆர்.பி.உதயகுமார் !
நடிகர் விஜய் இன்னும் நடித்துக் கொண்டிருக்க வேண்டாம் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று பேசவேண்டும் - ஆர்.பி.உதயகுமார் !
முதலமைச்சரான பிறகும் தேர்தல் பரப்புரையா? விஜய் பேச்சுக்கு அன்புமணி ராமதாஸ் நெத்தியடி அறிக்கை!
முதலமைச்சரான பிறகும் தேர்தல் பரப்புரையா? விஜய் பேச்சுக்கு அன்புமணி ராமதாஸ் நெத்தியடி அறிக்கை!
Stalin vs Vaiko : நான் அப்பவே சொன்னேன்.! வைகோவை சேர்க்காதீங்கனு.. இப்ப அனுபவியுங்க - குஷியில் கேஎஸ்ஆர்
நான் அப்பவே சொன்னேன்.! வைகோவை சேர்க்காதீங்கனு.. இப்ப அனுபவியுங்க - குஷியில் கேஎஸ்ஆர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
CM VIJAY CABINET LIST : விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
Annamalai Rajini: ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
CM Vijay: அதிமுக-வை ஒரு ஆளாய் கூட மதிக்காத விஜய்! ஆதங்கப்படும் இரட்டை இலை விசுவாசிகள்!
CM Vijay: அதிமுக-வை ஒரு ஆளாய் கூட மதிக்காத விஜய்! ஆதங்கப்படும் இரட்டை இலை விசுவாசிகள்!
Honda Livo பைக்கில் லாங் ட்ரிப் போலாமா? சென்னை டூ விருதுநகர் - ஓர் உண்மை அனுபவம்
Honda Livo பைக்கில் லாங் ட்ரிப் போலாமா? சென்னை டூ விருதுநகர் - ஓர் உண்மை அனுபவம்
Stalin vs Vaiko : நான் அப்பவே சொன்னேன்.! வைகோவை சேர்க்காதீங்கனு.. இப்ப அனுபவியுங்க - குஷியில் கேஎஸ்ஆர்
நான் அப்பவே சொன்னேன்.! வைகோவை சேர்க்காதீங்கனு.. இப்ப அனுபவியுங்க - குஷியில் கேஎஸ்ஆர்
Embed widget