பிரதமர் வருகை ; தமிழ்நாட்டுக்கு விரோத அறிவிப்பு தான் வருகிறது - தயாநிதி மாறன்
பிரதமர் தமிழ்நாட்டின் வருகையால் நல்ல அறிவிப்பு வருவதில்லை, தமிழ்நாட்டுக்கு விரோத அறிவிப்பு தான் வருகிறது - தயாநிதி மாறன்

அழகுபடுத்தும் பணி - அடிக்கல் நாட்டு பணி
சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட மண்டலம் 5 , பகுதி - 14 சிவானந்தா சாலையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் 4.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உகந்த முறையில் அழகுபடுத்தும் பணியை அமைச்சர் சேகர்பாபு மேயர் பிரியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டில் பணியினை துவங்கி வைத்தார்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ;
துறைமுகத்தில் இன்று மட்டும் பத்து கோடி ரூபாய் அளவிற்கு திட்டங்களை இன்று அடிக்கல் நாட்டில் இருக்கிறோம். சென்னை மாநகராட்சி மண்டலம் 5 - க்குட்பட்ட வார்டு 54, 55, 56,57 ,59 மற்றும் 60 வார்டுகளில் மின்மாற்றிகளை அழகுப்படுத்தும் வகையில் வியூ கட்டர் 3 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
சிவானந்தா சாலை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பகுதியை 4 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் அழகுப்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மினி தியேட்டர் ஸ்கேட்டிங் பண்ணுவதற்கான பொதுமக்கள் அமர்ந்து இருக்கக் கூடிய வகையில் அழகான பகுதியாக மாற்ற இருக்கிறோம். இந்த பகுதிக்கு ஏற்கனவே யாரும் வராமல் இருந்தார்கள் இருட்டாக இருந்தது அதை வெளிச்சப்படுத்தி மக்கள் வரும் வழியில் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்.
எஸ்.ஐ.ஆர் பணி தொடர்பாக திமுகவை கண்டித்து அதிமுக போராட்டம் நடத்துவது தொடர்பான கேள்விக்கு ?
மோடி தமிழ்நாட்டிற்கு வந்தார் அதற்காகத் தான் போராட்டம் நடத்துகிறார்கள்.
மதுரை , கோயம்புத்தூர் மெட்ரோ பணிகள் தொடர்பான கேள்விக்கு ?
பொதுவாக பிரதமர் வருகிறார் என்றால், நல்ல அறிவிப்பு வரும் என்று சொல்வார்கள். ஆனால் பிரதமர் தமிழ்நாட்டின் வருகையால் நல்ல அறிவிப்பு வருவதில்லை, தமிழ்நாட்டுக்கு விரோத அறிவிப்பு தான் வருகிறது.
நையினார் நாகேந்திரன் குறித்த கேள்விக்கு ;
நைனார் நாகேந்திரன் பேச வேண்டும் என்று பேசி வருகிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றச் சம்பவம் பற்றி பேச வேண்டியது தானே டெல்லியில் தினமும் நடக்கின்ற குற்றச் சம்பவங்கள் உண்மையில் பயமாக இருக்கிறது. அவ்வளவு குற்ற சம்பவம் நடக்கிறது. குறை சொல்ல வேண்டும் தேர்தல் நேரத்தில் தங்களை பெரிதுபடுத்த வேண்டும் என்று சொல்லுகிறார்.
தமிழ்நாட்டுக்கு விரோதமாக மத்திய அரசு எதை செய்தாலும் அதை எதிர்க்கின்ற ஒரே துணிவு உள்ள கட்சி திமுக தான். தமிழ்நாட்டு மக்களுக்காக தலைகுனியவே விடமாட்டோம் என்று உறுதி எடுத்து செயல்படுகிறோம்.





















