மேலும் அறிய

பாஜகவை பொறுத்தவரை அகில இந்திய தலைமையின் முடிவுதான் இறுதி முடிவு - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் யாரும் தனியாக போட்டியிட்டதில்லை. யாராவது ஒரு கட்சியுடன் கூட்டணி குறிப்பாக காங்கிரஸ் - திமுக,  பாரதிய ஜனதா கட்சி- திமுக, பாரதிய ஜனதா கட்சி - அதிமுக இப்படி தான் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜக, அதிமுகவுடன் இணைந்து பயணித்து வருகின்றனர்.. குறிப்பாக கடந்த 2022 சட்டமன்ற தேர்தல் மற்றும் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு நான்கு தொகுதியில் வெற்றி பெற்றது. அதேசமயம் கடந்த சில நாட்களாகவே பாஜக அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் வகையில் பல்வேறு சம்பவம் நடைபெற்றது.

குறிப்பாக தற்போது இரு கட்சி நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் மாறி மாறி எதிர் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், கூட்டணி வைத்தால் பதவி விலகுவதாக அண்ணாமலை கூறிய கருத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..

இதுகுறித்து அதிமுகவினர் கருத்து தெரிவிக்கும்போது அண்ணாமலை கூறியது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பதவி விலகுவதாக அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என நெல்லையில்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற குழு தலைவரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறும்பொழுது, ”எந்த பிரச்சினையாக இருந்தாலும் பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை அகில இந்திய தலைமை எந்த முடிவு எடுக்கிறதோ அதன்படி தான் நடக்கும்.  அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவி விலகுவதாக அண்ணாமலை தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.

இதுவரை தமிழகத்தில் யாரும் தனியாக போட்டியிட்டதில்லை. யாராவது ஒரு கட்சியுடன் கூட்டணி குறிப்பாக காங்கிரஸ் - திமுக,  பாரதிய ஜனதா கட்சி- திமுக, பாரதிய ஜனதா கட்சி - அதிமுக இப்படி தான் கூட்டணி அமைத்து தான் போட்டியிடுகிறது. தனியாக யாராவது போட்டியிருகிறார்களா? அல்லது தனியாக போட்டியிடுவதாக அறிவிக்க  முடியுமா? இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் கூட்டணி இன்றி போட்டியிட்டதில்லை. அண்ணாமலையின் கருத்தை வரவேற்று பேசுகிறார்கள் என்றால் கருத்து சொல்வதற்கு அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. கேள்வி கேட்க உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது பதில் சொல்வதற்கு எனக்கு சுதந்திரம் இருக்கிறது.  அதே போல தான் அதிமுகவில் உள்ள ஆதிராஜாராம் அவரது கருத்தை வரவேற்று சொல்வது அவரது கருத்து. அவரது சுதந்திரம். ஒரு கட்சிக்கு எப்படியும் ஒரு பொதுச்செயலாளர் வந்து தான் ஆக வேண்டும். அவர்களுடைய கட்சி உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்கள் இடைக்கால பொதுச்செயலாளராக வர வேண்டும்.

அதன்பின் கட்சி தேர்தலில் தொண்டர்கள் முதல் அனைவரும் சேர்ந்து ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். திமுகவின் உட்கட்சி பூசல் குறித்து கேட்டதற்கு, அதிமுக, திமுக, காங்கிரஸ் என எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களது உட்கட்சி பிரச்சனைக்கு நாம் கருத்து எதுவும் சொல்ல முடியாது. ஆனால் அதே நேரத்தில் மாநகராட்சியை பொறுத்தவரை எல்லா பணிகளும் நடைபெற வேண்டும். அதுதான் என்னுடைய வேண்டுகோள்” என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget