மேலும் அறிய

OPS INTERVIEW : "சதி செய்தவர்களுக்கு மக்களே தண்டனை வழங்குவார்கள்" - ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

அ.தி.மு.க.வில் சதி செய்தவர்களுக்கு அம்மாவின் தொண்டர்கள் விரைவில் தண்டனை வழங்குவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் வலுத்துள்ளது. கடந்த 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் பாதியிலே வெளியேறினர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கட்சியின் ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமி என்று புகழாரம் சூடினர்.

இந்த நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் வேட்புமனுத்தாக்கல் நிகழ்வில் பங்கேற்ற பிறகு டெல்லியில் இருந்து சென்னை வழியாக மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசிதயாவது, “ அ.தி.மு.க. தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். தொண்டர்களுக்காகவே நான் இருப்பேன். இந்த அசாதாரண சூழல் யாரால் எப்படி ஏற்பட்டது? எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டது?


OPS INTERVIEW :

அவர்களுக்கு கூடிய விரைவில் அம்மாவின் தொண்டர்கள் உறுதியாக உரிய பாடத்தை, தண்டனையை வழங்குவார்கள் என்று கூறுகிறேன். ஓ.பன்னீர்செல்வம் போன்ற தொண்டன் கிடைத்தது என் பாக்கியம் என ஜெயலலிதா சான்றிதழ் அளித்துள்ளார். அனைத்து சிக்கலும் விரைவில் தீரும். சிக்கலுக்கு காரணம் யார் என்பதும் எனக்குத் தெரியும்”  இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, ஒற்றைத் தலைமை விவகாரத்தை தொடர்ந்து வலியுறுத்தி பொதுக்குழுவில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அவரது தேர்வுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், தீர்மானங்கள் நிராகரிப்பு செய்வதாக கூறியதுடன் கட்சியில் இரட்டைத் தலைமையால் பின்னடைவு ஏற்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.


OPS INTERVIEW :

மேலும், நேற்று முன்தினம் கட்சியில் இரட்டைத் தலைமை பதவி காலாவதியாகிவிட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இனி பொருளாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளராக செயல்படுவார் என்றும் கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பலரும் திட்டமிட்டபடி பொதுக்குழு வரும் ஜூலை 11-ந் தேதி நடக்கும் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையேற்பார் என்றும் கூறியுள்ளனர்.

இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வைப் பலப்படுத்த சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், சசிகலாவும் தனது ஆதரவாளர்களை தமிழ்நாடு முழுவதும் சந்திப்பதற்காக புரட்சிப்பயணம் என்ற பெயரில் அரசியல் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கியுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கூட்டணி பேசியாச்சா? அமைச்சரவையில் பாமக?
கூட்டணி பேசியாச்சா? அமைச்சரவையில் பாமக?" மேடையிலேயே அனல் பறக்கப் பதிலடி கொடுத்த அன்புமணி!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
காவலர் நியமனம் ஒத்திவைப்பு.. பதவி உயர்வு காத்திருப்பு; விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!
காவலர் நியமனம் ஒத்திவைப்பு.. பதவி உயர்வு காத்திருப்பு; விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget