மேலும் அறிய

ADMK: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு; ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு வைத்த வாதங்கள் என்னென்ன?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பில் இருதரப்புகளும் வைத்த வாதங்களை காண்போம்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செலவம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில், தேர்தலை நடத்தலாம் என்றும் ஆனால் முடிவை அறிவிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசமி இருதரப்பினர் நீதிமன்றத்தில் வைத்த வாதங்களை காண்போம்.

ஓபிஎஸ் தரப்பு வாதம்:


ADMK: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு; ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு வைத்த வாதங்கள் என்னென்ன?

ஜெயலலிதாவே நிரந்தர பொதுச் செயலாளர் என்பதே தொண்டர்களின் விருப்பம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த பதவியை வேறு யாரும் வகிக்க முடியாது. இடைக்கால பொதுச்செயலாளர் என யாரையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. 

வெள்ளிக்கிழமை அட்டவணை வெளியிட்டு, ஞாயிறன்று  வேட்புமனுத்தாக்கல் நிறைவு என அவசரம் காட்டியுள்ளனர். பொதுச் செயலாளர் பதவிக்கு சாதாரண உறுப்பினர்கள் போட்டியிட முடியாத நிலையை உருவாக்கி உள்ளனர்.

மேலும்,  இன்றுடன் வேட்புமனுதாக்கல் நிறைவு என, இன்று மாலையே பொதுச்செயலாளர் அறிவிக்கப்படலாம். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியே வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்நிலையில், தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்  என ஒபிஎஸ் தரப்பினர் வாதம் வைத்தனர்.

இபிஎஸ் தரப்பு வாதம்:


ADMK: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு; ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு வைத்த வாதங்கள் என்னென்ன?

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 3 பேரும் வழக்கு தொடர உரிமையில்லை எனவும், ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக வழக்கை தொடரவில்லை. 1.5 கோடி தொண்டர்களில் 1 சதவீதம் கூட ஓபிஎஸ்-க்கு ஆதரவு இல்லை.

பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது. அ.தி.மு.க.வின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செயல்படுவதாகவும், அதிமுகவின் எதிர்காலத்தை கருதியே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.

அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கூறும் ஓபிஎஸ், தேர்தலை தடுக்க நினைப்பது ஏன்? கட்சிக்கு விதிராக நீதிமன்றங்கள் சென்றால் பதவி பறிக்கப்படும் என விதிகள் உள்ளன என உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது.

ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு மீண்டும் அப்பதவியை கொண்டு வருவதாக கூறுகின்றனர். ஏன் கொண்டு வரக்கூடாது என்ற காரணத்தை ஓ.பன்னீர்செல்வம்  தரப்பினர் தெரிவிக்கவில்லை. சூழ்நிலைகள் கருதி சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக இபிஎஸ் தரப்பினர் வாதங்களை வைத்தனர்.

நீதிமன்றம் தரப்பு:


ADMK: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு; ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு வைத்த வாதங்கள் என்னென்ன?

இவ்வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். அப்போது, பொதுக்குழு தீர்மான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவேண்டிய அவசியம் என்ன என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தலாம் என்றும், ஆனால் முடிவை அறிவிக்க வேண்டாம் எனவும் நீதிபதி தெரிவித்தார். 

மேலும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கை ஏப்ரல் 11-க்கு பதிலாக முன்கூட்டியே மார்ச் 22-ம் தேதியை விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாகவும், அதன் தீர்ப்பை அதையடுத்து மார்ச் 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில், இத்தீர்ப்பை இரு தரப்பினரும் தங்களுக்கு சாதகமாக வந்துள்ளதாக கூறி கொண்டாடி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.