மேலும் அறிய

புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க ONGC மேற்கொள்ளும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் மட்டுமின்றி தமிழக அரசின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இடத்திலும் புதிய கிணறுகள் அமைப்பதற்கு விண்ணப்பம் செய்வதற்கு அனுமதி வழங்கக்கூடாது.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் சுப்பையன் தலைமையில் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஓஎன்ஜிசி நிறுவனம் காவிரி டெல்டாவில் 36க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்கனவே கிணறுகள் அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்தப்பின் மூடப்பட்டுள்ளது. அக்கிணறுகளின் அருகே மீண்டும் புதிய கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கேட்டு முயற்சித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம் தொழிற்சங்கங்கள் என்கிற பெயரில் பேரழிவு திட்டங்களை சுயநலத்திற்காக காவிரி டெல்டாவில் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அரசியல் கட்சித்  அழைத்து வலியுறுத்துவது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். ஒருசில குடும்பங்களுக்காக ஒட்டுமொத்த காவிரி டெல்டாவை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு அரசியல் கட்சிகள் துணை போகக்கூடாது.


புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க ONGC மேற்கொள்ளும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

ஏற்கனவே காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்ததோடு, மட்டுமன்றி 2016 முதல் புதிய கிணறுகள் அமைப்பதற்கு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தடை விதித்துள்ளார். இந்த நிலையில் புதிய கிணறுகளை அமைப்பதற்கு ஓஎன்ஜிசி நிர்வாகம் மேற்கொள்ளும் மறைமுக சூழ்ச்சிகளை முறியடிக்க அரசியல் கட்சிகள், விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டக் களத்திற்கு முன்வர வேண்டும் முன்னால் முதலமைச்ச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு காவிரி டெல்டாவை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அரசாணைகள் வெளியிடப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதனை தற்போது பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உறுதியோடும், துணிவோடும் நடைமுறைப்படுத்திக் காட்ட  முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம். 


புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க ONGC மேற்கொள்ளும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அனுமதி கேட்டு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தெரியவருகிறது. தமிழகத்தில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்த பிறகு அதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் மட்டுமின்றி தமிழக அரசின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இடத்திலும் புதிய கிணறுகள் அமைப்பதற்கு விண்ணப்பம் செய்வதற்கு அனுமதி வழங்கக்கூடாது. மாநில அரசின் அனுமதியின்றி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மத்திய அரசு நிராகரித்திட முன்வர வேண்டும். மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டம் குறித்து எங்கள் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் தமிழகத்தில் விவசாயிகள், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இச்சட்டம் குறித்து விரிவான விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் தமிழக அரசு தமிழகத்தின் சாதக பாதகங்களை கருத்தில்கொண்டு அணைகள் பாதுகாப்பு சட்டம் தமிழக நலனுக்கெதிராக உள்ளதாக தெரியவரும் நிலை நம் அணைகளின் பாசன உரிமைகளை பாதுகாத்திடும் வகையில் கொள்கை முடிவை எடுப்பதற்கு முதலமைச்சர் முன்வந்து  தமிழக விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என பி. ஆர். பாண்டியன் தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget