மேலும் அறிய

TN 10th Result 2024: மயிலாடுதுறையில் 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த 6 மாணவர்கள் - யார் இவர்கள்? விபரம் உள்ளே...!

10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 நரிக்குறவர் இன மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சாதிக்கும் நரிக்குறவர் (ஆதியன்) இன மக்கள்

பெரும்பாலும் நரிக்குறவர்கள் (ஆதியன்) மக்கள் கல்வியறிவு பெறாமல் நாடோடிகளாகவே தங்களின் வாழ்வை நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லாமல் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு வாழ்ந்து வரும் சூழல் நிலவுகிறது. ஒரு சிலர் கல்வி கற்க விரும்பினாலும், இவர்களுக்கு அரசு சான்றிதழ்கள் கிடைப்பதில்லை சிக்கல் உள்ளதால் கல்வி என்பது இவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இதுபோன்ற பல இன்னல்களை கடந்து ஒரு சில மாணவர்கள் மற்ற சமூகத்தினர் போன்று தங்களையும் கல்வி மூலம் வளர்த்துக் கொள்ள, பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். கல்வி பயில்வது மட்டுமல்லாமல் தங்களுக்குள்ளே உறைந்திருக்கும் மற்ற திறமைகளையும் வெளிக்கொண்டு வந்து பல சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.


TN 10th Result 2024: மயிலாடுதுறையில் 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த 6 மாணவர்கள் - யார் இவர்கள்? விபரம் உள்ளே...!

நரிக்குறவ சமுதாய மக்களுக்கான பிரத்தேக பள்ளி

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவ சமுதாய மக்கள் 100 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்குள்ள நரிக்குறவர் காலனியில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். நாடோடிகளாக சுற்றித்திரியும் இப்பகுதி நரிக்குறவர்கள் சமுதாய மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 2012 -ஆம் ஆண்டு உண்டு உறைவிடப் பள்ளி அங்கு தொடங்கப்பட்டது. 10 மாணவர்களுடன் மட்டும் தொடங்கிய இப்பள்ளியில் தற்போது 120 -க்கும் மேற்பட்ட நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் 2012- இல் படித்த மாணவர்கள் பலர் தற்போது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். மேலும் இவர்கள் குத்துச்சண்டை, யோகா என பல்வேறு துறைகளிலும் மாநில மற்றும் தேசிய அளவில் பங்கேற்று வெற்றி பெற்றும் வருகின்றனர்.


TN 10th Result 2024: மயிலாடுதுறையில் 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த 6 மாணவர்கள் - யார் இவர்கள்? விபரம் உள்ளே...!

பொதுத்தேர்வுகளில் வெற்றிபெறும் மாணவர்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு நரிக்குறவர் இன மாணவர் வீரசிவாஜி பன்னிரண்டு வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அப்பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மாணவ மாணவிகள் வெண்ணிலா, அர்ஜுன், சக்தி, தனலெட்சுமி, சஞ்சய், ஈஸ்வரன் உள்ளிட்ட 6 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை உண்டு உறைவிடப்பள்ளி மையத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர். மேலும் அந்த மாணவர்கள் கூறுகையில் எங்கள் இன மக்கள் இதுபோன்று படித்து உயர வேண்டும் கேட்டுக்கொண்டனர். இதன்மூலம் கல்வியறிவு இன்றி இருந்துவந்த நரிக்குறவர் இன (ஆதியன்) மக்கள் விழிப்புணர்வு அடைந்து, வருங்காலங்களில் அவர்கள் 100 சதவீதம் கல்வியறிவை பெற்று சமுதாயத்தில் நல்ல நிலைமைக்கு வரும் சூழலில் ஏற்பட்டுள்ளது.


TN 10th Result 2024: மயிலாடுதுறையில் 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த 6 மாணவர்கள் - யார் இவர்கள்? விபரம் உள்ளே...!

மயிலாடுதுறை மாவட்ட தேர்ச்சி விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 5744 மாணவர்கள், மாணவிகள் 5805 என 11,549 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 4975 மாணவர்களும், 5474 மாணவிகள் என மொத்தம் 10,449 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.61 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.30 ஆகும். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 90.48% ஆகும். இது கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 86.31 சதவீதம் பெற்ற நிலையில் இந்தாண்டு 90.48 சதவீதம் எடுத்து 4.17 சதவீதம் அதிகம் ஆகும். மாநில அளவில் 27 வது இடம் பெற்றுள்ளது. 497 மதிப்பெண்கள் எடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 7 பள்ளிகள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். மேலும், அரசு உயர்நிலைப் பள்ளி ஆத்தூர், மயிலாடுதுறை மாவட்ட அரசு மாதிரி பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி மேல நல்லூர், அரசு மேல்நிலைப்பள்ளி வில்லியநல்லூர், அரசு உயர்நிலைப்பள்ளி சந்தரபாடி, அரசு உயர்நிலைப்பள்ளி திருவாலி, அரசு உயர்நிலைப்பள்ளி வடகரை, அரசு உயர்நிலைப்பள்ளி திட்ட்படுகை, அரசு உயர்நிலைப்பள்ளி பெருமாள் பேட்டை உள்ளிட்ட 9 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

இயற்கையைச் சூறையாடிய விவகாரம்: மயிலாடுதுறையில் ரூ.49 லட்சம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை..
இயற்கையைச் சூறையாடிய விவகாரம்: மயிலாடுதுறையில் ரூ.49 லட்சம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை..
சீர்காழி அருகே கொடூரம்; முதியவரை ஈவு இரக்கமின்றித் தாக்கி செல்ஃபி எடுத்த தவெக நிர்வாகி: அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்..!
சீர்காழி அருகே கொடூரம்; முதியவரை ஈவு இரக்கமின்றித் தாக்கி செல்ஃபி எடுத்த தவெக நிர்வாகி: அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்..!
Mayiladuthurai Power Shutdown (21.07.2026) :மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மின்தடை : உங்கள் ஊரில் கரண்ட் இருக்கா? தெரிந்து கொள்ளுங்கள்!
Mayiladuthurai Power Shutdown (21.07.2026) :மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மின்தடை : உங்கள் ஊரில் கரண்ட் இருக்கா? தெரிந்து கொள்ளுங்கள்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இவ்வளவு குறைகளா..? மனுக்களால் மூழ்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இவ்வளவு குறைகளா..? மனுக்களால் மூழ்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தலைமைச்செயலகத்திற்கு புகுந்த பாடகர் அறிவு.! அதிரடியாக கைது செய்த போலீஸ்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்கு புகுந்த பாடகர் அறிவு.! அதிரடியாக கைது செய்த போலீஸ்- என்ன காரணம்.?
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Letter to MKS : ‘மு.க.ஸ்டாலின் இருட்டில் வைக்கப்பட்டார் – அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
'அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
Parandur Airport : ’பரந்தூர் விமான நிலைய இடம்’ திமுக எழுப்பிய கேள்வியால் வெளியான உண்மை..!
’பரந்தூர் விமான நிலைய இடம் மாற்றமா?’ மத்திய அரசு அதிரடி பதில்..!
மைலேஜை அள்ளித்தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன? விலை எப்படி?
மைலேஜை அள்ளித்தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன? விலை எப்படி?
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
DMK MLA: ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
Embed widget