மேலும் அறிய

சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு குழப்பம்: நிரந்தர சேவைகளாக மாற்ற கோரிக்கை – பயணிகள் அவதி!

சிறப்பு ரயில் சேவைகளை நிரந்தரமாக்கப்படாமல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், பயணிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்திய ரயில்வே தொடர்ந்து பல்வேறு வழித்தடங்களில் "சிறப்பு ரயில்கள்" என்ற பெயரில் சேவைகளை இயக்கி வரும் நிலையில், இந்த ரயில்கள் நிரந்தரமாக்கப்படாமல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், பயணிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தாம்பரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் மெயின் லைன் வழியாக இயக்கப்படும் ரயில்கள் நல்ல வருவாய் ஈட்டித் தந்த போதிலும், அவை நிரந்தரமாக்கப்படாதது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நீட்டிப்பு முறையில் குழப்பமும், முன்பதிவில் சிக்கலும்

சமீபகாலமாக, பல ரயில் சேவைகள் சிறப்பு ரயில்கள் என அறிவிக்கப்பட்டு ஓரிரு மாதங்களுக்கு இயக்கப்படுகின்றன. பின்னர், இந்த சேவை நிறைவடைய ஒரு வாரமே இருக்கும் நிலையில், மீண்டும் ஓரிரு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்வதாக அறிவிக்கப்படுகிறது. இந்த தொடர்ச்சியான நீட்டிப்பு முறை, பயணிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. "இந்த ரயில்கள் எப்போது செயல்படுகின்றன, எப்போது சேவை முடிவடைகிறது என்ற தெளிவு இல்லாததால், திட்டமிட்டுப் பயணம் செய்ய முடியவில்லை" எனப் பயணிகள் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர். மேலும், நீட்டிப்பு அறிவிப்பு கடைசி நேரத்தில் வெளியாவதால், திட்டமிட்டுப் பயணம் செய்யக்கூடியவர்கள் முன்பதிவு செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் 

இதுகுறித்த மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகையில், "ரயில்வே நிர்வாகம் இந்த ரயில்கள் மூலம் நல்ல வருவாய் ஈட்டினாலும், பயணிகளின் வசதியை கருத்தில் கொள்வதில்லை. திடீரென நீட்டிப்பு செய்யப்படுவதால், வெளியூர்களில் வேலை பார்க்கும் பலர் விடுப்பு எடுக்கக்கூட முடியாமல் தவிக்கின்றனர்.

நின்றுபோன முக்கிய ரயில்கள்: பயணிகள் படும் அவதி

தற்போதைய நிலவரப்படி, திருச்சி – தாம்பரம் (06191) சிறப்பு ரயில் சேவை ஜூன் 29, 2025 அன்றுடன் முடிவடைகிறது. ஆனால், இன்று வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது குறித்துப் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இதேபோல், தாம்பரம் – கோயம்புத்தூர் (06185) சிறப்பு ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, இரவு நேரத்தில் மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல இது மிகவும் வசதியான ரயிலாக இருந்தது. ஆனால், இந்த ரயில் சேவை கடந்த வாரம் முடிவடைந்துவிட்ட நிலையில், இதுவரை நீட்டிக்கப்படவில்லை. இதனால் கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

"இந்த ரயில்கள் அனைத்தும் நல்ல வருவாயைத் தருகின்றன. அப்படியிருந்தும், ரயில்வே நிர்வாகம் ஏன் இவற்றை நிரந்தர ரயில்களாக அறிவிக்கத் தயங்குகிறது என்று புரியவில்லை. மக்களின் தேவைக்கு ஏற்ப, இந்த ரயில்களைத் தொடர்ச்சியாக இயக்க வேண்டும்" எனப் ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிரந்தர ரயில்களாக மாற்ற வேண்டிய அவசரத் தேவை:

மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம், தொடர்ச்சியாக நீட்டிப்பு செய்யப்பட்டு வரும் சில ரயில்களை உடனடியாக நிரந்தர ரயில்களாக அறிவிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கீழ்க்கண்ட ரயில்களை நிரந்தரமாக்குவதன் மூலம் பயணிகளின் சிரமங்களைக் குறைக்கலாம் என அச் சங்கம் வலியுறுத்தியுள்ளது

 

  • 06191 திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில்

 

  • 06185 தாம்பரம் – கோயம்புத்தூர் (போத்தனூர்) சிறப்பு ரயில்

 

  • 07695 சரளப்பள்ளி – ராமேஸ்வரம் சிறப்பு ரயில்

 

  • 09420 திருச்சி – அகமதாபாத் சிறப்பு ரயில்

குறிப்பாக, தாம்பரம் – கோயம்புத்தூர் ரயிலை தினசரி நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

 

மயிலாடுதுறைக்கு புதிய ரயில் சேவைகள் தேவை

மேற்கண்ட கோரிக்கைகளுடன் சேர்த்து, மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் புதிய ரயில் சேவைகளுக்கான தேவைகளையும் பட்டியலிட்டுள்ளது:

மயிலாடுதுறையிலிருந்து தூத்துக்குடிக்கு நிரந்தர ரயில் சேவை: 

திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களுக்குச் செல்ல நேரடி ரயில் சேவை இல்லாததால், பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மயிலாடுதுறை – தூத்துக்குடி இடையே ஒரு நிரந்தர ரயில் சேவையைத் தொடங்க வேண்டும். மயிலாடுதுறையிலிருந்து தேனி – போடி பகுதிகளுக்கு நிரந்தர ரயில் சேவை: தேனி, போடிநாயக்கனூர் போன்ற மேற்கு மாவட்டப் பகுதிகளுக்கும் மயிலாடுதுறையிலிருந்து நேரடி ரயில் சேவை இல்லை. எனவே, இந்த வழித்தடத்திலும் நிரந்தர ரயில்களை இயக்க வேண்டும்.

பேரளம் – காரைக்கால் புதிய ரயில் பாதையில் பயணிகள் சேவை: புதிதாக அமைக்கப்பட்ட பேரளம் – காரைக்கால் ரயில் பாதையில் பயணிகள் சேவையை விரைவாகத் தொடங்க வேண்டும். இது காரைக்கால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்கும், பயணிகளின் வசதிக்கும் பேருதவியாக இருக்கும்.

இந்தக் கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் விரைவாகப் பரிசீலித்து, பொதுமக்களின் சிரமங்களை நீக்கி, அவர்களுக்கு நிரந்தரமான மற்றும் நம்பகமான ரயில் சேவைகளை வழங்க வேண்டும் என்பதே மயிலாடுதுறை மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget