மேலும் அறிய

சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு குழப்பம்: நிரந்தர சேவைகளாக மாற்ற கோரிக்கை – பயணிகள் அவதி!

சிறப்பு ரயில் சேவைகளை நிரந்தரமாக்கப்படாமல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், பயணிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்திய ரயில்வே தொடர்ந்து பல்வேறு வழித்தடங்களில் "சிறப்பு ரயில்கள்" என்ற பெயரில் சேவைகளை இயக்கி வரும் நிலையில், இந்த ரயில்கள் நிரந்தரமாக்கப்படாமல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், பயணிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தாம்பரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் மெயின் லைன் வழியாக இயக்கப்படும் ரயில்கள் நல்ல வருவாய் ஈட்டித் தந்த போதிலும், அவை நிரந்தரமாக்கப்படாதது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நீட்டிப்பு முறையில் குழப்பமும், முன்பதிவில் சிக்கலும்

சமீபகாலமாக, பல ரயில் சேவைகள் சிறப்பு ரயில்கள் என அறிவிக்கப்பட்டு ஓரிரு மாதங்களுக்கு இயக்கப்படுகின்றன. பின்னர், இந்த சேவை நிறைவடைய ஒரு வாரமே இருக்கும் நிலையில், மீண்டும் ஓரிரு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்வதாக அறிவிக்கப்படுகிறது. இந்த தொடர்ச்சியான நீட்டிப்பு முறை, பயணிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. "இந்த ரயில்கள் எப்போது செயல்படுகின்றன, எப்போது சேவை முடிவடைகிறது என்ற தெளிவு இல்லாததால், திட்டமிட்டுப் பயணம் செய்ய முடியவில்லை" எனப் பயணிகள் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர். மேலும், நீட்டிப்பு அறிவிப்பு கடைசி நேரத்தில் வெளியாவதால், திட்டமிட்டுப் பயணம் செய்யக்கூடியவர்கள் முன்பதிவு செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் 

இதுகுறித்த மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகையில், "ரயில்வே நிர்வாகம் இந்த ரயில்கள் மூலம் நல்ல வருவாய் ஈட்டினாலும், பயணிகளின் வசதியை கருத்தில் கொள்வதில்லை. திடீரென நீட்டிப்பு செய்யப்படுவதால், வெளியூர்களில் வேலை பார்க்கும் பலர் விடுப்பு எடுக்கக்கூட முடியாமல் தவிக்கின்றனர்.

நின்றுபோன முக்கிய ரயில்கள்: பயணிகள் படும் அவதி

தற்போதைய நிலவரப்படி, திருச்சி – தாம்பரம் (06191) சிறப்பு ரயில் சேவை ஜூன் 29, 2025 அன்றுடன் முடிவடைகிறது. ஆனால், இன்று வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது குறித்துப் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இதேபோல், தாம்பரம் – கோயம்புத்தூர் (06185) சிறப்பு ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, இரவு நேரத்தில் மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல இது மிகவும் வசதியான ரயிலாக இருந்தது. ஆனால், இந்த ரயில் சேவை கடந்த வாரம் முடிவடைந்துவிட்ட நிலையில், இதுவரை நீட்டிக்கப்படவில்லை. இதனால் கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

"இந்த ரயில்கள் அனைத்தும் நல்ல வருவாயைத் தருகின்றன. அப்படியிருந்தும், ரயில்வே நிர்வாகம் ஏன் இவற்றை நிரந்தர ரயில்களாக அறிவிக்கத் தயங்குகிறது என்று புரியவில்லை. மக்களின் தேவைக்கு ஏற்ப, இந்த ரயில்களைத் தொடர்ச்சியாக இயக்க வேண்டும்" எனப் ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிரந்தர ரயில்களாக மாற்ற வேண்டிய அவசரத் தேவை:

மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம், தொடர்ச்சியாக நீட்டிப்பு செய்யப்பட்டு வரும் சில ரயில்களை உடனடியாக நிரந்தர ரயில்களாக அறிவிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கீழ்க்கண்ட ரயில்களை நிரந்தரமாக்குவதன் மூலம் பயணிகளின் சிரமங்களைக் குறைக்கலாம் என அச் சங்கம் வலியுறுத்தியுள்ளது

 

  • 06191 திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில்

 

  • 06185 தாம்பரம் – கோயம்புத்தூர் (போத்தனூர்) சிறப்பு ரயில்

 

  • 07695 சரளப்பள்ளி – ராமேஸ்வரம் சிறப்பு ரயில்

 

  • 09420 திருச்சி – அகமதாபாத் சிறப்பு ரயில்

குறிப்பாக, தாம்பரம் – கோயம்புத்தூர் ரயிலை தினசரி நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

 

மயிலாடுதுறைக்கு புதிய ரயில் சேவைகள் தேவை

மேற்கண்ட கோரிக்கைகளுடன் சேர்த்து, மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் புதிய ரயில் சேவைகளுக்கான தேவைகளையும் பட்டியலிட்டுள்ளது:

மயிலாடுதுறையிலிருந்து தூத்துக்குடிக்கு நிரந்தர ரயில் சேவை: 

திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களுக்குச் செல்ல நேரடி ரயில் சேவை இல்லாததால், பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மயிலாடுதுறை – தூத்துக்குடி இடையே ஒரு நிரந்தர ரயில் சேவையைத் தொடங்க வேண்டும். மயிலாடுதுறையிலிருந்து தேனி – போடி பகுதிகளுக்கு நிரந்தர ரயில் சேவை: தேனி, போடிநாயக்கனூர் போன்ற மேற்கு மாவட்டப் பகுதிகளுக்கும் மயிலாடுதுறையிலிருந்து நேரடி ரயில் சேவை இல்லை. எனவே, இந்த வழித்தடத்திலும் நிரந்தர ரயில்களை இயக்க வேண்டும்.

பேரளம் – காரைக்கால் புதிய ரயில் பாதையில் பயணிகள் சேவை: புதிதாக அமைக்கப்பட்ட பேரளம் – காரைக்கால் ரயில் பாதையில் பயணிகள் சேவையை விரைவாகத் தொடங்க வேண்டும். இது காரைக்கால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்கும், பயணிகளின் வசதிக்கும் பேருதவியாக இருக்கும்.

இந்தக் கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் விரைவாகப் பரிசீலித்து, பொதுமக்களின் சிரமங்களை நீக்கி, அவர்களுக்கு நிரந்தரமான மற்றும் நம்பகமான ரயில் சேவைகளை வழங்க வேண்டும் என்பதே மயிலாடுதுறை மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. காலைல கருப்புக்கொடி.. மாலைல மாலை மரியாதை! மயிலாடுதுறையில் நடந்த ட்விஸ்ட்!
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. காலைல கருப்புக்கொடி.. மாலைல மாலை மரியாதை! மயிலாடுதுறையில் நடந்த ட்விஸ்ட்!
எம்எல்ஏ சீட் விற்பனைக்கு..? மயிலாடுதுறை காங்கிரஸ் நிர்வாகிகள் எம்பி சுதாவிற்கு கருப்புக்கொடி காட்ட முடிவு?
எம்எல்ஏ சீட் விற்பனைக்கு..? மயிலாடுதுறை காங்கிரஸ் நிர்வாகிகள் எம்பி சுதாவிற்கு கருப்புக்கொடி காட்ட முடிவு?
மயிலாடுதுறையின் புதிய நம்பிக் 'கை'.. காந்தியடிகளுக்கே காசோலை வழங்கிய குடும்ப வாரிசு: யார் இந்த ஜமால் முகமது யூனுஸ்?
மயிலாடுதுறையின் புதிய நம்பிக் 'கை'.. காந்தியடிகளுக்கே காசோலை வழங்கிய குடும்ப வாரிசு: யார் இந்த ஜமால் முகமது யூனுஸ்?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!
IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!
TVK: இதுதான் எங்கள் மீதான Case! வேட்பாளர்கள் மீதான குற்றங்களை வெளியிட்ட தவெக! மற்ற கட்சியும் செய்யுமா?
TVK: இதுதான் எங்கள் மீதான Case! வேட்பாளர்கள் மீதான குற்றங்களை வெளியிட்ட தவெக! மற்ற கட்சியும் செய்யுமா?
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
TVK Vijay Campaign: நெருங்கும் தேர்தல்.. விஜய் நாளை மீண்டும் பரப்புரை! எங்கே தெரியுமா?
TVK Vijay Campaign: நெருங்கும் தேர்தல்.. விஜய் நாளை மீண்டும் பரப்புரை! எங்கே தெரியுமா?
Trump Dead: என்னது.. ட்ரம்ப் செத்துட்டாரா? கூகுளில் ட்ரெண்டாகும் Trump Dead- நடந்தது என்ன?
Trump Dead: என்னது.. ட்ரம்ப் செத்துட்டாரா? கூகுளில் ட்ரெண்டாகும் Trump Dead- நடந்தது என்ன?
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
Election 2026: இன்னும் 3 நாளில் 3 மாநில தேர்தல்! அனல் பறக்கும் இறுதிக்கட்ட பரப்புரை!
Election 2026: இன்னும் 3 நாளில் 3 மாநில தேர்தல்! அனல் பறக்கும் இறுதிக்கட்ட பரப்புரை!
Embed widget