மேலும் அறிய

"விஜய் சார் ஆட்சிக்கு வந்தா நடக்கும்னு நெனச்சோம்.." - குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகரித்த மனுக்கள்! பரபரக்கும் மயிலாடுதுறை!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட 328 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (29.06.2026) மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஏராளமான பொதுமக்கள், தங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்த மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளித்தனர்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதலே மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் திரளத் தொடங்கினர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவர்களின் மனுக்கள் கனிவுடன் பெற்றுக்கொள்ளப்பட்டன.

குவிந்த மனுக்கள்

இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 328 மனுக்களை சமர்ப்பித்தனர். பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் துறை வாரியாகப் பிரிக்கப்பட்டு புள்ளிவிவரங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

* கலைஞர் உரிமைத்தொகை: இந்த வாரக் கூட்டத்தில் அதிகபட்சமாக மகளிர் உரிமைத்தொகை கோரி 142 மனுக்கள் பெறப்பட்டன.

* அடிப்படை வசதிகள்: சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி 41 மனுக்கள் அளிக்கப்பட்டன.

* புகார் மனுக்கள்: பல்வேறு சமூக மற்றும் தனிநபர் புகார்கள் தொடர்பாக 38 மனுக்கள் பதிவாகின.

* பட்டா மற்றும் நில விவகாரங்கள்: இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 34 மனுக்களும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 26 மனுக்களும் பெறப்பட்டன.

* சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்: முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை வேண்டி 24 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

* மாற்றுத்திறனாளிகள் நலன்: மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக அடையாள அட்டை, உதவித்தொகை, வங்கிக்கடன் மற்றும் உபகரணங்கள் கோரி 08 மனுக்கள் பெறப்பட்டன.

* வேலைவாய்ப்பு மற்றும் நிலப் பிரச்சினைகள்: வேலைவாய்ப்பு வேண்டி 08 மனுக்களும், நில அபகரிப்பு மற்றும் நிலப் பிரச்சினை தொடர்பாக 07 மனுக்களும் வந்திருந்தன.

அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அதிரடி உத்தரவு

பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பூங்கொடி, அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். மேலும், அவர் பேசுகையில்:

"பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நம்பி இந்த அரங்கிடம் ஒப்படைக்கிறார்கள். எனவே, அதிகாரிகள் இந்த மனுக்களின் மீது எவ்விதத் தொய்வுமின்றி, உரிய காலக்கெடுவுக்குள் சட்டப்பூர்வமான தகுதியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறும் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விவரங்களை மனுதாரர்களுக்கு எழுத்துப்பூர்வமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தகுந்த முறையில் தெரிவிக்க வேண்டும்" என்று மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார்.

தவெக-வின் தாக்கமா?

அண்மைக்காலமாக மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் மனுக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது அரசியல் மற்றும் சமூக ஊடக வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் தொடர்ச்சியாக, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கையின் காரணமாகவே, தங்களது கோரிக்கைகளுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மனுக்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரிக்கிறதா? என்ற சுவாரசியமான கேள்வி அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது.

இருப்பினும், இன்றைய கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் பெரும்பகுதியை (142 மனுக்கள்) 'கலைஞர் உரிமைத்தொகை' கோரும் மனுக்களே ஆக்கிரமித்துள்ளன. இதனால், இக்கேள்வி ஒருபுறமிருக்க, முந்தைய திட்டங்களின் தொடர்ச்சியான பலன்களைப் பெறவும், விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகள் தங்களின் உரிமைகளைப் பெறவுமே மாவட்ட நிர்வாகத்தை நோக்கி மக்கள் அதிகளவில் படையெடுக்கிறார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு

இப்பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலருடன் இணைந்து மாவட்டத்தின் முக்கிய உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு மனுக்களைப் பரிசீலித்தனர். இதில்:

துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் மலைமகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா மற்றும் அனைத்து அரசுத் துறைகளின் முதன்மை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தின் இந்தத் தீவிரமான செயல்பாடும், மக்களின் குறைகளைக் கேட்கும் இந்த அணுகுமுறையும் மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு இயந்திரம் மக்களின் கோரிக்கைகளுக்கு வழங்கும் தீர்வைப் பொறுத்தே இந்த மனுக்களின் எண்ணிக்கையின் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மை விளங்கும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
"காசியை விட புனிதம்" - ஆனால் சொட்டு நீர் இல்லை... மயிலாடுதுறை துலா கட்டத்தில் சோகமான ஆடி அமாவாசை!
உங்க ஏரியாவுல EB பிரச்சனை இருக்கா? மயிலாடுதுறையில் இன்று சிறப்பு குறைகேட்பு கூட்டம்! 
உங்க ஏரியாவுல EB பிரச்சனை இருக்கா? மயிலாடுதுறையில் இன்று சிறப்பு குறைகேட்பு கூட்டம்! 
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Embed widget