மேலும் அறிய

அமரன் படத்தால் மயிலாடுதுறையில் பரபரப்பு...அச்சத்தில் ரசிகர்கள்... குவிந்த போலீஸ்

மயிலாடுதுறையில் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கம் முன்பு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் அமரன் திரைப்படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் திரையரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால் அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமரன் திரைப்படம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் பேசுபொருளாக உள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இதில் முற்றிலும் புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி தனது அழகான தோற்றத்தால் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் காட்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 


அமரன் படத்தால் மயிலாடுதுறையில் பரபரப்பு...அச்சத்தில் ரசிகர்கள்... குவிந்த போலீஸ்

அமரன் திரைப்படம் - எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் வெளியானதில் இருந்து பல விவாதங்களுக்கு உள்ளாகியது. இது ஒருபுறம் பலரின் பாராட்டைப் பெற்றாலும், மறுபுறம் சில விமர்சனங்களையும், எதிப்பையும் எதிர்கொண்டு வருகின்றது.

ஆதரவுகள்

படம் ராணுவ வீரர்களின் வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் முதன்முறையாக ஒரு தீவிரமான கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்றதாக ரசிகர்கள் கூறுகின்றனர். சாய் பல்லவி தனது நடிப்புத் திறமையால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார், படத்தின் காட்சிகள் மிகவும் அழகாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தாகவும், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்திற்கு ஒரு பெரிய பலமாக அமைந்துள்ளது என பல்வேறு பாராட்டுகளை பெற்றது.


அமரன் படத்தால் மயிலாடுதுறையில் பரபரப்பு...அச்சத்தில் ரசிகர்கள்... குவிந்த போலீஸ்

எதிர்ப்புகள்

அமரன் திரைப்படம் வெளியான பின்னர், இஸ்லாமிய அமைப்புகளின் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இந்த எதிர்ப்பின் முக்கிய காரணங்கள்,  படத்தில் இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், இது இஸ்லாமிய மதத்தை அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டினர். மேலும் படத்தில் உள்ள சில காட்சிகள் மற்றும் வசனங்கள் இஸ்லாமிய மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், இது மதக் கலவரங்களை தூண்டும் வகையில் உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த எதிர்ப்பின் விளைவுகள்

இதன்காரணமாக தமிழகத்தில் பல திரையரங்குகளில் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அமரன் திரைப்படம் திரையிடல் நிறுத்தப்பட்டது. படம் திரையிடப்பட்ட திரையரங்குகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. படக்குழுவினருக்கு இஸ்லாமிய அமைப்புகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை விஜயா திரையரங்கில் அமரன் திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டுள்ளது. அமரன் திரைப்படம் சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் உள்ளதாகவும், நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் விஜயா திரையரங்கம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


அமரன் படத்தால் மயிலாடுதுறையில் பரபரப்பு...அச்சத்தில் ரசிகர்கள்... குவிந்த போலீஸ்

மாவட்ட தலைவர் ரஃபீக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அக்கட்சியினர் கலந்து கொண்டு அமரன் திரைப்படத்தை கண்டித்தும், அமரன் திரைப்படத்தை பார்த்து பாராட்டிய தமிழக முதலமைச்சரை கண்டித்தும், ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்களைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதன்காரணமாக ஏடிஎஸ்பி சிவசங்கர் தலைமையில் திரையரங்கு சாலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.


அமரன் படத்தால் மயிலாடுதுறையில் பரபரப்பு...அச்சத்தில் ரசிகர்கள்... குவிந்த போலீஸ்

ஆதரவு குரல் 

இது ஒருபுறம் இருக்க மயிலாடுதுறையில் அமரன் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் விஜயா திரையரங்கத்தின் முன்பு எஸ்டிபிஐ கட்சியினரின் எதிர்ப்பு போராட்டம் குறித்த தகவல் அறிந்த இந்து எழுச்சி பேரவையினர் மற்றும் பாஜகவினர் திரையரங்கத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அமரன் திரைப்படத்திற்கு ஆதரவாக தேசியக்கொடியை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சிக்கு எதிராக பேரவையின் நிறுவனத் தலைவர் சந்தோஷ் குமார் தலைமையில் ஏராளமானோர் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கு வந்த டிஎஸ்பி திருப்பதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்ற நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திரைப்படம் திரையிடப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
Embed widget