மேலும் அறிய

சீர்காழி அருகே சூறையாடப்பட்ட தனியார் மருத்துவமனை; 50 பேர் மீது வழக்கு பதிவு

மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களில் தாக்குதல் நடத்தினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - மயிலாடுதுறை எஸ்பி எச்சரிக்கை

சீர்காழி அருகே கொள்ளிடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் ஒருவர் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அனைவரது மீதும் ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தன் 

சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அலட்சியத்தால் தவறான சிகிச்சை அளித்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீழவல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி என்பவரது மகன் 48 வயதான ஆனந்தன். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.  அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள்  கொள்ளிடம் பகுதியில் உள்ள தனியார் (விஷ்ணு) மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு  மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். 


சீர்காழி அருகே சூறையாடப்பட்ட தனியார் மருத்துவமனை; 50  பேர் மீது வழக்கு பதிவு

தவறான சிகிச்சை என குற்றச்சாட்டு 

தொடர்ந்து சிகிச்சை பெற்ற நிலையில் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஆனந்தன் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து மருத்துவர்கள் ஆனந்தனின் உறவினர்களிடம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் அலட்சியமாக செயல்பட்டு, ஆனந்தனுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் தான் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை மூடக்கோரியும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனை முன்பு  ஏராளமான கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் திரண்டனர்.


சீர்காழி அருகே சூறையாடப்பட்ட தனியார் மருத்துவமனை; 50  பேர் மீது வழக்கு பதிவு

மருத்துவமனை வளாகம் சூறை

மேலும் மருத்துவமனை வாசலில் இருந்த கண்ணாடி கதவு அடித்து நெருக்கினர். பின்னர் ஆனந்தன் உடலை வாங்க மறுத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் ஈடுபட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இந்த சாலை மறியல் போராட்டத்தால் கொள்ளிடம்- சீர்காழி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உடல் கூறு ஆய்வுக்காக ஆனந்தனின் உடலை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறையினர் அனுப்பி வைத்து  ஆணைக்காரன் சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


சீர்காழி அருகே சூறையாடப்பட்ட தனியார் மருத்துவமனை; 50  பேர் மீது வழக்கு பதிவு

போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதிவு

இந்த சூழலில் மேற்படி விஷ்ணு மருத்துவமனையின் வெளிப்புற பகுதியை அடித்து சேதப்படுத்திய முன்று நபர்கள் மீது "தமிழ்நாடு மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் (வன்முறையையும், சொத்துக்கு சேதத்தினை அல்லது இழப்பினை ஏற்படுத்துவதையும் தடுத்தல்) சட்டம் 2008-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்கின் எதிரிகளில் ஒருவரான கடலூர் மாவட்டம் கீழவல்லம் கிராமத்தை சேர்ந்த ஐய்யப்பன் என்பவரது மகன் ஹரிஹரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற எதிரிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். அதுமட்டுமின்றி அன்றைய தினம் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து நபர்களின் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.


சீர்காழி அருகே சூறையாடப்பட்ட தனியார் மருத்துவமனை; 50  பேர் மீது வழக்கு பதிவு

காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை 

அதுமட்டுமின்றி மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களில் தாக்குதல் செய்தல் அல்லது பிற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Embed widget