மேலும் அறிய

"வெயில் தாங்கல... வாழைப்பழம் வேண்டாம்... நுங்கு தான் வேணும்!" - வியாபாரியிடம் அடம் பிடித்த குரங்கு...நெகிழ வைத்த காட்சி...

மயிலாடுதுறை அருகே வெயிலின் கொடுமையால் வாழைப்பழம் வேண்டாம் என மறுத்து, நுங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சிங்கனோடை கிராமத்தில், கோடை வெப்பத்தின் தாக்கத்தால் மனிதர்களைப் போலவே குரங்கு ஒன்று நுங்கு கேட்டு அடம் பிடித்து வாங்கிச் சாப்பிட்ட சுவாரஸ்யமான நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்டி வதைக்கும் கோடை வெயில்

தமிழகம் முழுவதும் நடப்பாண்டு கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சதத்தை தாண்டி பதிவாகி வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் மக்கள் இளநீர், தர்பூசணி மற்றும் நுங்கு போன்ற இயற்கை பானங்களை நாடிச் செல்கின்றனர்.

குறிப்பாக, எந்தவிதமான ரசாயன கலப்பும் இன்றி இயற்கையாகக் கிடைக்கும் பனை நுங்கிற்கு கோடை காலங்களில் எப்போதும் தனி மவுசு உண்டு. இதனால் சாலை ஓரங்களில் ஆங்காங்கே நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாழைப்பழத்தை நிராகரித்த குரங்கு

தரங்கம்பாடி தாலுகா, சிங்கனோடை கிராமத்தின் முக்கியச் சாலை ஓரத்தில் வியாபாரி ஒருவர் பனை நுங்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று, திடீரென வியாபாரியின் தோள் மீது ஏறி அமர்ந்து கொண்டது. அவரது சட்டையைப் பிடித்து இழுத்து, ஏதோ கேட்பது போல விசித்திரமான சத்தங்களை எழுப்பி சமிக்கைகள் செய்தது.

"வெயில் தாங்கல... வாழைப்பழம் வேண்டாம்... நுங்கு தான் வேணும்!" - வியாபாரியிடம் அடம் பிடித்த குரங்கு...நெகிழ வைத்த காட்சி... pic.twitter.com/QPvionaKb6

— JAGANNATHAN (@Jaganathan_JPM) April 29, 2026

">

குரங்கு பசியால் வாடுகிறது என்று எண்ணிய வியாபாரி, தன்னிடம் இருந்த வாழைப்பழத்தை எடுத்து நீட்டினார். ஆனால், வழக்கமாக வாழைப்பழத்தை விரும்பி உண்ணும் குரங்கு, அதனைத் தொடக்கூட மறுத்துவிட்டது. மாறாக, வியாபாரி வெட்டி வைத்திருந்த நுங்குப் பெட்டியையே கூர்ந்து கவனித்து மீண்டும் அடம் பிடிக்கத் தொடங்கியது.

"குரங்குகளுக்கு வாழைப்பழம் தான் பிடிக்கும் என்று நினைத்தேன். ஆனால், இந்த வெயிலில் அதற்கு தாகம் அதிகமாக இருப்பதால் நான் கொடுத்த பழத்தை தட்டிவிட்டு நுங்குக்காக அது செய்த சேட்டைகள் என்னை வியக்க வைத்தன" என்கிறார் அந்த நுங்கு வியாபாரி.

சுவைத்த நுங்கும்.. மீண்டும் வந்த அடம் பிடிப்பும்..

விலங்கின் தாகத்தை உணர்ந்துகொண்ட வியாபாரி, உடனடியாக ஒரு நுங்கினைச் சீவி அதன் கையில் கொடுத்தார். நுங்கைப் பெற்றுக்கொண்ட அந்த குரங்கு, மின்னல் வேகத்தில் அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து, மிகுந்த உற்சாகத்துடன் அதனைச் சுவைக்கத் தொடங்கியது. மனிதர்கள் வெயிலுக்கு இதமாக நுங்கு சாப்பிடுவதைப் போலவே, அந்த குரங்கும் ஒவ்வொரு சொட்டு நீரையும் விடாமல் ருசித்து உண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒருமுறை சாப்பிட்டு முடித்தவுடன் அந்த குரங்கு அங்கிருந்து சென்றுவிடவில்லை. மீண்டும் கீழே இறங்கி வந்த அது, வியாபாரியிடம் வந்து இரண்டாவது முறை நுங்கு கேட்டு அடம் பிடித்தது. காலையிலிருந்து வியாபாரம் மந்தமாக இருந்தபோதிலும், அந்த வியாபாரி சற்றும் சளைக்காமல் மகிழ்ச்சியுடன் மீண்டும் நுங்குகளை வெட்டி அந்த குரங்கிற்கு வழங்கினார்.

வியப்பில் ஆழ்ந்த பொதுமக்கள்

சாலையில் சென்று கொண்டிருந்த பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் குரங்கின் இந்த விநோதச் செயலைக்கண்டு ஆச்சரியமடைந்து தங்களது பயணத்தை நிறுத்தி வேடிக்கை பார்த்தனர். இயற்கை உணவான நுங்கின் மருத்துவக் குணத்தை விலங்குகளும் உணர்ந்துள்ளனவா? வெப்பத்தின் தாக்கம் விலங்குகளையும் எந்த அளவுக்குப் பாதித்துள்ளது?

என்ற விவாதங்கள் அங்கிருந்தவர்களிடையே எழுந்தன. பொதுவாக குரங்குகள் காடுகளில் உள்ள பழங்களையும், மனிதர்கள் தரும் பிஸ்கட், பழங்கள் போன்றவற்றை மட்டுமே உண்ணும். ஆனால், தாகத்தைத் தணிக்க நுங்குதான் சிறந்தது என்பதை ஒரு மனிதனைப் போலவே உணர்ந்து அடம் பிடித்த இந்த நிகழ்வு, சிங்கனோடை கிராமத்தில் இன்று பேசுபொருளாக மாறியுள்ளது.

இயற்கையின் பாடம்

மனிதர்களைப் போலவே ஐந்தறிவு ஜீவன்களும் கோடை வெப்பத்தின் கொடுமையால் தவித்து வருகின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக அமைந்தது. விற்க வேண்டிய பொருளைப் லாப நோக்கமின்றி ஒரு வாயில்லா ஜீவனுக்கு வழங்கிய அந்த வியாபாரியின் மனதாரப் பாராட்டிய கிராம மக்கள், "மனித நேயம் மனிதர்களிடம் மட்டுமல்ல, மற்ற உயிரினங்களிடமும் அன்பாக இருப்பதில்தான் அடங்கியிருக்கிறது" என நெகிழ்ச்சியுடன் கூறினர். கோடையின் உச்சத்தில் தாகத்தை தணிக்கத் தவித்த குரங்கிற்கும், அதற்கு அன்புடன் நுங்கு வழங்கிய வியாபாரிக்கும் இடையேயான இந்த உறவு, அந்தப் பகுதியில் ஒரு அழகான சித்திரமாகப் பதிவாகியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது நேரிட்ட கொடூரம்: சீர்காழி அருகே உலுக்கிய சோகம்!
துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது நேரிட்ட கொடூரம்: சீர்காழி அருகே உலுக்கிய சோகம்!
சாதி, மத பேதமின்றி திரண்ட பக்தர்கள்: நெடுவாசல் மாதா கோவில் தேர்பவனியில் நெகிழ்ச்சி..
சாதி, மத பேதமின்றி திரண்ட பக்தர்கள்: நெடுவாசல் மாதா கோவில் தேர்பவனியில் நெகிழ்ச்சி..
சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Maruti Victoris Discount: லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
Embed widget