மேலும் அறிய

சீர்காழி அருகே பாழாகும் நெற்பயிர்கள்; விளைந்த நெற்பயிர்களை மிதித்து செல்லும் அவலம்..கண்டு கொள்ளாத அரசு..!

முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இறந்தவர்களின் சடலத்தை மயானத்திற்குக் கொண்டு செல்ல பாதை இல்லாததால் விளைந்த வயல்வெளியில் பயிர்களை சேதப்படுத்தி செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, கொள்ளிடம் ஒன்றியம், வடரங்கம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் கிராம மக்கள், தங்கள் இறந்தவர்களின் சடலத்தை மயானத்திற்குக் கொண்டு செல்ல, சுமார் 300 மீட்டர் தூரத்திற்குத் தனியார் நபர்களின் வயல்வெளிகளையே நம்பியிருக்க வேண்டிய அவலநிலை நீடித்துவருகிறது. பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்தக் கொடுமைக்குத் தீர்வு கிடைக்காத நிலையில், உடனடியாக நிரந்தர வழி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலம்காலமாய் தொடரும் மரண போராட்டம் 

சீர்காழி தாலுக்கா, கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள வடரங்கம் ஊராட்சியில் அமைந்திருக்கும் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்தப் பிரதான கிராமத்தில், பி.சி. (பிற்படுத்தப்பட்டோர்), எம்.பி.சி. (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்), ஓ.பி.சி. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இக்கிராம மக்களின் துயரம் என்னவென்றால், இங்கு இறந்தவர்களின் சடலத்தை மயானத்திற்குக் கொண்டு செல்வதற்கு ஒரு நிரந்தரமான பொதுவழி இல்லை. கிராமத்திலிருந்து மயானம் அமைந்துள்ள பகுதிக்குச் செல்ல சுமார் 300 மீட்டர் தூரத்திற்குத் தனியார் நபர்களுக்குச் சொந்தமான வயல்வெளிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் நீடிக்கிறது.

காலம்காலமாக, வயல்களில் நெல் நடவு செய்யப்பட்டிருந்தாலும், பருத்தி போன்ற வேறு பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தாலும், ஏன் கனமழை காரணமாக வயல்களில் வெள்ளம் சூழ்ந்திருந்தாலும்கூட, இக்கிராம மக்கள் தங்கள் உறவினர்களின் சடலத்தைச் சுமந்துகொண்டு இந்த வயல்கள் வழியாகத்தான் செல்ல வேண்டிய கொடிய சூழ்நிலை நிலவி வருகிறது.

அலட்சியம் காட்டும் உள்ளாட்சி அமைப்புகள்

இக்கிராம மக்கள் தங்கள் இந்த அடிப்படைத் தேவைக்காக, பல ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த ஒரு ஊராட்சி மன்றத் தலைவரும் இந்தக் கோரிக்கைக்கு நிரந்தரத் தீர்வு காண முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

"ஊராட்சி மன்றத் தேர்தல் வரும்போது மட்டும், 'எனக்கு வாக்களியுங்கள், நான் வெற்றி பெற்றால் உடனடியாக மயானத்திற்கு வழி அமைத்துத் தருகிறேன்' என்று அனைத்து வேட்பாளர்களும் உறுதி அளிக்கின்றனர். ஆனால், வெற்றி பெற்ற பின்னர் எந்த ஒரு ஊராட்சி மன்றத் தலைவரும் இந்தக் கிராமத்தின் துயரத்தைக் கவனத்தில் கொள்வதில்லை. கடந்த பல தேர்தல்களில் இதே நிலைதான் தொடர்கிறது," என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் சமயத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே இக்கிராம மக்கள் பயன்படுத்தப்படுவதாகவும், மக்களின் அடிப்படை வசதிகளைப் பற்றி எந்த ஒரு ஊராட்சி மன்றத் தலைவரும் கவலைப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் குமுறுகின்றனர்.

செவிமடுக்க மறுக்கும் அரசு

உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமல்லாமல், இந்த அவலநிலைக்குத் தீர்வு காணக்கோரி கிராம மக்கள் பலமுறை அரசு அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர்.

"அரசு அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து, மயானத்திற்குச் செல்லும் பாதையைப் பார்வையிட்டுச் செல்கிறார்கள் தவிர, இதுவரை எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும், இந்த வழிப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரவில்லை" என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாஜக சார்பில் ஆட்சியரிடம் மனு மற்றும் ஆர்ப்பாட்டம் எச்சரிக்கை

இந்நிலையில் முத்துகிருஷ்ணாபுரம் கிராம மக்களின் இந்த நீண்ட காலப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளதாகவும், பாஜக மாவட்டத் தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில், கிராம மக்களின் பிரதிநிதிகள் இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, மயானத்திற்குக் கிராம மக்கள் சென்று வர நிரந்தரமாக ஒரு பொது வழியை உடனடியாக ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தெரிவிதாதுள்ளனர்.

"முத்துகிருஷ்ணாபுரம் கிராம மக்களின் துயரத்தைப் போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மயானத்திற்குக் செல்ல நிரந்தரமான வழி அமைத்துத் தரப்பட வேண்டும். இல்லையெனில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்," என மாவட்டத் தலைவர் நாஞ்சில் பாலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இனிவரும் காலத்திலாவது அரசு நிர்வாகம், இக்கிராம மக்களின் அடிப்படை மனித உரிமையைக் கருத்தில் கொண்டு, இறந்தவர்களை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய நிரந்தர வழி ஏற்படுத்தித் தரவேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
Embed widget