மேலும் அறிய

சீர்காழி அருகே பாழாகும் நெற்பயிர்கள்; விளைந்த நெற்பயிர்களை மிதித்து செல்லும் அவலம்..கண்டு கொள்ளாத அரசு..!

முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இறந்தவர்களின் சடலத்தை மயானத்திற்குக் கொண்டு செல்ல பாதை இல்லாததால் விளைந்த வயல்வெளியில் பயிர்களை சேதப்படுத்தி செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, கொள்ளிடம் ஒன்றியம், வடரங்கம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் கிராம மக்கள், தங்கள் இறந்தவர்களின் சடலத்தை மயானத்திற்குக் கொண்டு செல்ல, சுமார் 300 மீட்டர் தூரத்திற்குத் தனியார் நபர்களின் வயல்வெளிகளையே நம்பியிருக்க வேண்டிய அவலநிலை நீடித்துவருகிறது. பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்தக் கொடுமைக்குத் தீர்வு கிடைக்காத நிலையில், உடனடியாக நிரந்தர வழி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலம்காலமாய் தொடரும் மரண போராட்டம் 

சீர்காழி தாலுக்கா, கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள வடரங்கம் ஊராட்சியில் அமைந்திருக்கும் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்தப் பிரதான கிராமத்தில், பி.சி. (பிற்படுத்தப்பட்டோர்), எம்.பி.சி. (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்), ஓ.பி.சி. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இக்கிராம மக்களின் துயரம் என்னவென்றால், இங்கு இறந்தவர்களின் சடலத்தை மயானத்திற்குக் கொண்டு செல்வதற்கு ஒரு நிரந்தரமான பொதுவழி இல்லை. கிராமத்திலிருந்து மயானம் அமைந்துள்ள பகுதிக்குச் செல்ல சுமார் 300 மீட்டர் தூரத்திற்குத் தனியார் நபர்களுக்குச் சொந்தமான வயல்வெளிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் நீடிக்கிறது.

காலம்காலமாக, வயல்களில் நெல் நடவு செய்யப்பட்டிருந்தாலும், பருத்தி போன்ற வேறு பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தாலும், ஏன் கனமழை காரணமாக வயல்களில் வெள்ளம் சூழ்ந்திருந்தாலும்கூட, இக்கிராம மக்கள் தங்கள் உறவினர்களின் சடலத்தைச் சுமந்துகொண்டு இந்த வயல்கள் வழியாகத்தான் செல்ல வேண்டிய கொடிய சூழ்நிலை நிலவி வருகிறது.

அலட்சியம் காட்டும் உள்ளாட்சி அமைப்புகள்

இக்கிராம மக்கள் தங்கள் இந்த அடிப்படைத் தேவைக்காக, பல ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த ஒரு ஊராட்சி மன்றத் தலைவரும் இந்தக் கோரிக்கைக்கு நிரந்தரத் தீர்வு காண முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

"ஊராட்சி மன்றத் தேர்தல் வரும்போது மட்டும், 'எனக்கு வாக்களியுங்கள், நான் வெற்றி பெற்றால் உடனடியாக மயானத்திற்கு வழி அமைத்துத் தருகிறேன்' என்று அனைத்து வேட்பாளர்களும் உறுதி அளிக்கின்றனர். ஆனால், வெற்றி பெற்ற பின்னர் எந்த ஒரு ஊராட்சி மன்றத் தலைவரும் இந்தக் கிராமத்தின் துயரத்தைக் கவனத்தில் கொள்வதில்லை. கடந்த பல தேர்தல்களில் இதே நிலைதான் தொடர்கிறது," என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் சமயத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே இக்கிராம மக்கள் பயன்படுத்தப்படுவதாகவும், மக்களின் அடிப்படை வசதிகளைப் பற்றி எந்த ஒரு ஊராட்சி மன்றத் தலைவரும் கவலைப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் குமுறுகின்றனர்.

செவிமடுக்க மறுக்கும் அரசு

உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமல்லாமல், இந்த அவலநிலைக்குத் தீர்வு காணக்கோரி கிராம மக்கள் பலமுறை அரசு அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர்.

"அரசு அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து, மயானத்திற்குச் செல்லும் பாதையைப் பார்வையிட்டுச் செல்கிறார்கள் தவிர, இதுவரை எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும், இந்த வழிப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரவில்லை" என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாஜக சார்பில் ஆட்சியரிடம் மனு மற்றும் ஆர்ப்பாட்டம் எச்சரிக்கை

இந்நிலையில் முத்துகிருஷ்ணாபுரம் கிராம மக்களின் இந்த நீண்ட காலப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளதாகவும், பாஜக மாவட்டத் தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில், கிராம மக்களின் பிரதிநிதிகள் இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, மயானத்திற்குக் கிராம மக்கள் சென்று வர நிரந்தரமாக ஒரு பொது வழியை உடனடியாக ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தெரிவிதாதுள்ளனர்.

"முத்துகிருஷ்ணாபுரம் கிராம மக்களின் துயரத்தைப் போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மயானத்திற்குக் செல்ல நிரந்தரமான வழி அமைத்துத் தரப்பட வேண்டும். இல்லையெனில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்," என மாவட்டத் தலைவர் நாஞ்சில் பாலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இனிவரும் காலத்திலாவது அரசு நிர்வாகம், இக்கிராம மக்களின் அடிப்படை மனித உரிமையைக் கருத்தில் கொண்டு, இறந்தவர்களை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய நிரந்தர வழி ஏற்படுத்தித் தரவேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறப்போவது என்ன? எம்.எல்.ஏ ராஜகுமார் விளக்கம்.
மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறப்போவது என்ன? எம்.எல்.ஏ ராஜகுமார் விளக்கம்.
துபாய் தொழிலாளியிடம் ரூ.13 லட்சத்தை அபேஸ் செய்த புதுக்கோட்டை இளைஞர்: 24 மணிநேரத்தில் தட்டி தூங்கிய மயிலாடுதுறை போலீஸ்...
துபாய் தொழிலாளியிடம் ரூ.13 லட்சத்தை அபேஸ் செய்த புதுக்கோட்டை இளைஞர்: 24 மணிநேரத்தில் தட்டி தூங்கிய மயிலாடுதுறை போலீஸ்...
மயிலாடுதுறையில் பயங்கரம்: மதுபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் - சடலத்தின் அருகிலேயே மயங்கிக் கிடந்த அதிர்ச்சி..
மயிலாடுதுறையில் பயங்கரம்: மதுபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் - சடலத்தின் அருகிலேயே மயங்கிக் கிடந்த அதிர்ச்சி..
காசிக்கு நிகரான புண்ணிய தீர்த்தம்! ஒரு நாள் மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பு...! 
காசிக்கு நிகரான புண்ணிய தீர்த்தம்! ஒரு நாள் மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பு...! 
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sathankulam Case Judgement: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு
PM Modi: கொரோனா காலம் திரும்புகிறதா? எல்லாத்துக்கும் தயாரா இருங்க- பிரதமர் மோடி எச்சரிக்கை!
PM Modi: கொரோனா காலம் திரும்புகிறதா? எல்லாத்துக்கும் தயாரா இருங்க- பிரதமர் மோடி எச்சரிக்கை!
US Iran War Trump: திடீரென பல்டி அடித்த ட்ரம்ப்; ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம் என அறிவிப்பு; காரணம் என்ன.? ஏற்குமா ஈரான்.?
திடீரென பல்டி அடித்த ட்ரம்ப்; ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம் என அறிவிப்பு; காரணம் என்ன.? ஏற்குமா ஈரான்.?
ADMK Alliance Seat Sharing: வெளியான அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு பட்டியல்; பாஜக, பாமக, அமுமுக-விற்கு எத்தனை.?
வெளியான அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு பட்டியல்; பாஜக, பாமக, அமுமுக-விற்கு எத்தனை.?
திண்டுக்கல் குவாரி மரணம்: திமுக MLA மீது சந்தேகம்! முழு விசாரணை தேவை - தினகரன், அண்ணாமலை வலியுறுத்தல்
திண்டுக்கல் குவாரி மரணம்: திமுக MLA மீது சந்தேகம்! முழு விசாரணை தேவை - தினகரன், அண்ணாமலை வலியுறுத்தல்
RRB NTPC தேர்வு முடிவுகள் எப்போது? 18 மாதங்களாக காத்திருக்கும் தேர்வர்கள்! ட்ரெண்டாகும் கோரிக்கை!
RRB NTPC தேர்வு முடிவுகள் எப்போது? 18 மாதங்களாக காத்திருக்கும் தேர்வர்கள்! ட்ரெண்டாகும் கோரிக்கை!
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? திமுக, தவெக-வுக்கு செக் வைக்க அதிமுகவின் அஸ்திரம்.! யார் இந்த சேவியர்.?
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? திமுக, தவெக-வுக்கு செக் வைக்க அதிமுகவின் அஸ்திரம்.! யார் இந்த சேவியர்.?
US Iran War: ”இன்னைக்கு பொளக்குறோம்” ட்ரம்ப் ஹிண்ட் ? “அடிச்சா, திருப்பி அடிப்போம்.. ஸ்யூர்” ஈரான் திட்டவட்டம்
US Iran War: ”இன்னைக்கு பொளக்குறோம்” ட்ரம்ப் ஹிண்ட் ? “அடிச்சா, திருப்பி அடிப்போம்.. ஸ்யூர்” ஈரான் திட்டவட்டம்
Embed widget