மேலும் அறிய

நாக்கு வெளியே தள்ளுகிறதா..? தப்பிக்க ஆட்சியர் சொன்ன எளிய வழிகள்..!

கடும் வெயிலில் இருந்து கால்நடைகளைப் பாதுகாப்பது எப்படி என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் விரிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

மயிலாடுதுறை: தற்போது கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தத் தீவிர வெப்பம் மனிதர்களை மட்டுமல்லாது, கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திறனில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், அவற்றைப் பாதுகாப்பதற்கான அவசர வழிமுறைகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ளார்.

வெப்ப அயற்சியின் அறிகுறிகள்

கோடைகாலங்களில் சுற்றுப்புற வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் ஈரப்பதம் 70 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் போது, கால்நடைகளால் தங்கள் உடலில் உற்பத்தியாகின்ற வெப்பத்தை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் உடல் வெப்பநிலை உயர்ந்து 'வெப்ப அயற்சி' (Heat Stress) ஏற்படுகிறது.

வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளிடம் பின்வரும் அறிகுறிகள் தென்படும்:

* உடல் சோர்வு மற்றும் தீவனம் உண்ணாமை.

* நிழல் தரும் மரங்களைத் தேடி ஒதுங்கி இருத்தல்.

* வெப்பத்தைத் தணிக்க வாய் திறந்து நாக்கை வெளியே தொங்கவிட்டபடி உமிழ்நீர் வடித்தல்.

* வாய் வழியாக வேகமாக மூச்சுவிடுதல்.

பல்வேறு உயிரினங்களில் ஏற்படும் பாதிப்புகள்

வெப்ப அயற்சியானது கறவை மாடுகள் மற்றும் கன்றுகளை விரைவாகப் பாதிக்கும். இதனால் பால் உற்பத்தி கணிசமாகக் குறைவதோடு, மாடுகளின் சினை பிடிக்கும் திறனும் பாதிக்கப்படுகிறது. ஆடுகளைப் பொறுத்தவரை இறைச்சி உற்பத்தி குறைந்து, உடல் வளர்ச்சி குன்றும். பன்றிகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லாததால், வெப்பத்தினால் அவற்றின் உடல் எடை குறையும்.

கோழிகளில் வெப்ப அயற்சி காரணமாக இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதோடு, உடல் எடையும் குறையும். வளர்ப்புப் பிராணிகளான நாய்கள் அமைதியின்றிக் காணப்படுவதோடு, தோல் வியாதிகள் ஏற்படும் நிலையும் உருவாகும். குறிப்பாக, கலப்பின மாடுகள் தற்போது அதிகம் பராமரிக்கப்படுவதால், வெப்ப அயற்சியால் நடுக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகள்

கால்நடைகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்கப் பின்வரும் மேலாண்மை முறைகளை மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்:

1. மேய்ச்சல் நேரம்: கால்நடைகளைக் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணிக்கு மேலும் மட்டுமே மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். நீண்ட தூரம் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

2. குடிநீர் மேலாண்மை: கால்நடைகளுக்கு நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 முறை சுத்தமான தண்ணீர் வழங்க வேண்டும். ஒரு கறவை மாட்டிற்குச் சுமார் 40 முதல் 50 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். பால் கறக்கும் மாடுகளுக்கு ஒரு லிட்டர் பாலுக்குக் கூடுதலாக 5 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். தண்ணீரில் குளுக்கோஸ், எலக்ட்ரால் பவுடர் அல்லது தாது உப்பு கலவைகளை (சுமார் 40 கிராம்) கலந்து கொடுக்கலாம்.

3. தீவன மேலாண்மை: பகல் நேரங்களில் பசுந்தீவனத்தையும், இரவு நேரங்களில் உலர் தீவனத்தையும் வழங்க வேண்டும். பொட்டாசியம் சத்து மிகுந்த கோதுமை தீவனம் மற்றும் வைட்டமின் நியாசின் (6 கிராம்) ஆகியவற்றை அடர் தீவனத்துடன் சேர்த்து அளிக்கலாம். கோழிகளுக்கு உச்சி வெயிலில் தீவனம் அளிப்பதைத் தவிர்த்து, அதிகாலை மற்றும் இரவில் மட்டும் தீவனம் அளிக்க வேண்டும்.

4.கொட்டகை பராமரிப்பு: கொட்டகையின் உட்புறம் தென்னங்கீற்று அல்லது பனை ஓலைகளை அமைத்து வெப்பத்தைக் குறைக்கலாம். மின் விசிறி, நீர் தெளிப்பான்கள் (Sprinklers) மூலம் குளிர்ச்சியை ஏற்படுத்தலாம். கொட்டகையைச் சுற்றி ஈரமான சாக்குகளைத் தொங்கவிடலாம். மேய்ச்சல் முடிந்து வரும் மாடுகளைத் தண்ணீரில் குளிக்க வைப்பது நல்லது.

போக்குவரத்து மற்றும் அவசர சிகிச்சை

அவசியமில்லாமல் கால்நடைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில், அதிகாலை அல்லது மாலை நேரங்களில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். வாகனங்களில் வழக்கமான எண்ணிக்கையை விடக் குறைவான மாடுகளை ஏற்றிச் செல்வதும், பயணத்தின் போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் வழங்குவதும் அவசியமாகும்.

கால்நடைகளுக்கு வெப்ப அயற்சி காரணமாக வலிப்பு அல்லது தீவிர அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுக வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள '1962' என்ற அவசர கால்நடை மருத்துவச் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இது குறித்த விழிப்புணர்வு முகாம்கள் கால்நடை மருத்துவர்களால் நடத்தப்படும் என்றும், அதில் கால்நடை வளர்ப்போர் பங்கேற்றுப் பயனடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!
இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!
"கொலை வழக்காக மாற்ற சட்டத்தில் இடமில்லை?" - சாத்தங்குடி வழக்கில் திருமாவளவன் உடைத்த உண்மை!
TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!
TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!
ரேஷன் கடைக்கு போக வேண்டாம்.. உங்க வீட்டுக்கே வரும் அரிசியும் சர்க்கரையும்! எப்போ தெரியுமா?
ரேஷன் கடைக்கு போக வேண்டாம்.. உங்க வீட்டுக்கே வரும் அரிசியும் சர்க்கரையும்! எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: வைகோவா? திருமாவா? தவெக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் யார்? விஜய் முடிவு என்ன?
TVK Alliance: வைகோவா? திருமாவா? தவெக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் யார்? விஜய் முடிவு என்ன?
கரூர் செல்லும் விஜய்; 41 பேர் குடும்பங்களுக்கு நேரில் அரசு வேலை வழங்கப்போகும் முதலமைச்சர்?
கரூர் செல்லும் விஜய்; 41 பேர் குடும்பங்களுக்கு நேரில் அரசு வேலை வழங்கப்போகும் முதலமைச்சர்?
TVK Vs DMK: சிறந்த வாஷிங் மெஷின் யார்? தவெக Vs திமுக இடையே கடும் போட்டி - அதிர்ச்சி தரும் பட்டியல்
சிறந்த வாஷிங் மெஷின் யார்? தவெக Vs திமுக இடையே கடும் போட்டி - அதிர்ச்சி தரும் பட்டியல்
இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்! நாவல் பழங்களின் அதீத விளைச்சலுக்குப் பின்னுள்ள தாவரவியல் உண்மை!
இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்! நாவல் பழங்களின் அதீத விளைச்சலுக்குப் பின்னுள்ள தாவரவியல் உண்மை!
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
Special train : கோவை செல்லும் பயணிகளுக்கு சூப்பர் சான்ஸ்.! சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? முன்பதிவு எப்போது.?
கோவை செல்லும் பயணிகளுக்கு சூப்பர் சான்ஸ்.! சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? முன்பதிவு எப்போது.?
TN Weather Update: இடி, மின்னலுடன் கனமழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் கனமழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
Embed widget