மேலும் அறிய

புகைப்படக் கலை சமூகத்தின் சக்திவாய்ந்த ஊடகம்: மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி விழாவில் புகழாரம்!

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் காட்சி தகவல் தொடர்பியல் துறை சார்பில் நடைபெற்ற 22-வது உலக புகைப்பட தினக் கண்காட்சியை முன்னாள் நீதிபதி வெங்கடராமன் திறந்து வைத்து மாணவர்களின் படைப்பாற்றலைப் பாராட்டினார்.

மயிலாடுதுறை: உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தலில் இயங்கி வரும் புகழ்பெற்ற அரசு உதவி பெறும் ஏவிசி கல்லூரியில் காட்சி தகவல் தொடர்பியல் துறை ( Visual Communication) சார்பில் 22-வது புகைப்படக் கண்காட்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின் கலைத்திறன், படைப்பாற்றல் மற்றும் சமூகப் பார்வையை வெளிப்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட இக்கண்காட்சி, கல்லூரி வளாகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த முன்னாள் நீதிபதி

விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே. வெங்கடராமன் தலைமை தாங்கி கண்காட்சியை முறைப்படி திறந்து வைத்தார். தொடர்ந்து, மாணவர்களால் படம்பிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான புகைப்படங்களை அவர் நேரில் பார்வையிட்டார். ஒவ்வொரு புகைப்படத்தின் பின்னணியில் உள்ள கலைநயம், ஒளிப்பதிவு நுட்பம் மற்றும் கருத்து வெளிப்பாட்டை நுணுக்கமாகக் கேட்டறிந்து மாணவர்களை வெகுவாகப் பாராட்டினார்.

பின்னர் பேசிய அவர், புகைப்படம் என்பது வெறும் அழகியலைக் காட்டும் கலை மட்டுமல்ல என்றும், அது சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களை, நிகழ்வுகளை மனித மனங்களில் என்றென்றும் ஆவணப்படுத்தி வைக்கும் மிகச் சக்திவாய்ந்த ஊடகம் என்றும் குறிப்பிட்டார்.

பல்வேறு கருப்பொருள்களில் இடம் பெற்ற புகைப்படங்கள்

இக்கண்காட்சியில் இந்திய பாரம்பரிய கலாசாரம், கிராமிய மக்களின் இயல்பு வாழ்க்கை முறை, பசுமை மாறா இயற்கை வளங்கள், அரிய வகை பறவையினங்கள், வனவிலங்குகள், தமிழக வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களின் சிற்பக் கலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மனித உணர்வுகளின் பல்வேறு பரிமாணங்கள் எனப் பலதரப்பட்ட தலைப்புகளில் மாணவர்கள் எடுத்த படங்களின் தொகுப்புகள் இடம்பெற்றிருந்தன.

காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு படமும் ஒரு தனித்துவமான செய்தியையும், சமூகப் பொருள்படும் கண்ணோட்டத்தையும் நேர்த்தியாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஏவிசி கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இக்கண்காட்சியை மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வந்து பார்வையிட்டனர். குறிப்பாக, இயற்கையின் அழகைக் தத்ரூபமாகப் படம்பிடித்த காட்சியமைப்புகள், அரிதான பறவைகளின் அசைவுகள் மற்றும் கிராமத்து பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலித்த புகைப்படங்கள் மாணவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. புகைப்படங்களில் வெளிப்பட்டிருந்த நுணுக்கமான காட்சியமைப்புகள், கோணங்கள் மற்றும் படைப்பாற்றலைக் கண்டு சக மாணவர்களும் பேராசிரியர்களும் தங்களது வியப்பையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

சிறப்பு விருந்தினர்கள் வியந்து  பாராட்டு

நிகழ்ச்சியில் ஏவிசி கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர். நாகராஜன், ஏவிசி பொறியியல் கல்லூரியின் இயக்குநர் செந்தில்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் புகைப்படக் கலைத் திறனை வாழ்த்தி உரையாற்றினர். இக்கண்காட்சிக்கான அனைத்து விரிவான ஏற்பாடுகளையும் காட்சி தகவல் தொடர்பியல் துறைத் தலைவர் சங்கர் தலைமையில் அத்துறைப் பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

கலைத் திறனுக்குக் கிடைத்த அங்கீகாரம்

காட்சி தொடர்பில் துறை மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்குச் சிறந்த களமாக அமைந்த இந்த புகைப்படக் கண்காட்சி, புகைப்படக் கலையின் முக்கியத்துவத்தையும், சமூக மாற்றத்திற்கு அது எந்தளவுக்குப் பங்களிக்கிறது என்பதையும் அனைவருக்கும் உணர்த்தும் சிறந்த நிகழ்வாக நிறைவுற்றது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

புகைப்படக் கலை சமூகத்தின் சக்திவாய்ந்த ஊடகம்: மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி விழாவில் புகழாரம்!
புகைப்படக் கலை சமூகத்தின் சக்திவாய்ந்த ஊடகம்: மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி விழாவில் புகழாரம்!
கொடியேற்றம் முதல் கொடியிறக்கம் வரை: வேளாங்கண்ணி பேராலய விழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! - முழு விவரங்கள்
கொடியேற்றம் முதல் கொடியிறக்கம் வரை: வேளாங்கண்ணி பேராலய விழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! - முழு விவரங்கள்
மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு: பிரெயில் பெட்டகம் முதல் ஏஐ கருவிகள் வரை... அரசு வழங்கும் புதிய சலுகைகள்!
மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு: பிரெயில் பெட்டகம் முதல் ஏஐ கருவிகள் வரை... அரசு வழங்கும் புதிய சலுகைகள்!
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Embed widget