மேலும் அறிய

மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு: பிரெயில் பெட்டகம் முதல் ஏஐ கருவிகள் வரை... அரசு வழங்கும் புதிய சலுகைகள்!

மாற்றுத்திறனாளிகளுக்கு 30 புதிய அதிநவீன தொழில்நுட்ப உதவி உபகரணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களை எதிர்பார்த்து வாழாமல், தற்சார்புடன் தங்களது அன்றாடப் பணிகளை இயல்பு நிலைக்கு நிகராகச் சுதந்திரமாகச் செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டமைப்பு உதவிகளைச் செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வழக்கமான 27 வகையான உதவி உபகரணங்களுடன், தற்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதலாக 30 அதிநவீன உதவி உபகரணங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. 

இந்த நவீன சாதனங்கள் மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்வை எளிதாக்குவதுடன், அவர்களது கல்வி, பணி மற்றும் விளையாட்டுத் துறையிலான சாதனைகளுக்கும் பெரும் உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கத்திறன் குறைபாடுடையோருக்கான நவீன சாதனங்கள்

கை மற்றும் கால் இயக்கத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்குப் பயன் தரும் வகையில், மாடிப்படிகளில் சிரமமின்றி ஏறி இறங்குவதற்கான கைகளால் இயங்கும் நாற்காலிகள், மின்கலனால் இயங்கும் நவீன நாற்காலிகள் மற்றும் கைகளாலும் மின்கலனாலும் இணைத்து இயக்கும் பல்நோக்குச் சக்கர நாற்காலிகள் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன.

மேலும், இலகுரகச் சக்கர நாற்காலிகள், முழங்கால் மூட்டு விடுவிப்புடன் கூடிய சிறப்பு எலும்பியல் சாதனங்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மர நாற்காலிகள், தானியங்கி முறையில் செயல்படும் மூட்டு கட்டுப்பாட்டுச் செயற்கை உறுப்புகள் மற்றும் எளிதாக மடக்கி எடுத்துச் செல்லக்கூடிய நடைபயிற்சி சாதனங்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.

விளையாட்டு மற்றும் அன்றாட பயன்பாட்டு உபகரணங்கள்

இதுமட்டுமன்றி, மூன்று மற்றும் நான்கு கால்கள் பொருத்தப்பட்ட உறுதியான ஊன்றுகோல்கள், இயக்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிநவீன நடைபயிற்சி உபகரணம், சாய்வு வசதியுள்ள பயணச் சக்கர நாற்காலிகள், குழந்தைகளுக்கான சிறிய ரகச் சக்கர நாற்காலிகள், நேராக நிற்கும் வசதி கொண்ட சக்கர நாற்காலிகள், பலவகை செயல்பாடுகளைத் துல்லியமாக மேற்கொள்ளும் தானியங்கிச் செயற்கை கைகள் மற்றும் தலையில் அணிந்துகொண்டு கணினியை இயக்கும் சிறப்புச் சுட்டி ஆகிய நவீனக் கருவிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க விரும்பும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட சிறப்புச் சக்கர நாற்காலிகள், நவீனச் செயற்கை உறுப்புகள், கெயிட் நடைபயிற்சிக் கருவிகள், தேவைக்கேற்ப உயரத்தை மாற்றி அமைக்கும் ஊன்றுகோல்கள் மற்றும் கைகளில் பயன்படுத்தக்கூடிய நவீன உதவி சாதனங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பார்வை, செவித்திறன் மற்றும் அறிவுசார் குறைபாடுகளுக்கான கருவிகள்

பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை வெளிச்சமாக்கும் வகையில், அவர்கள் சுதந்திரமாக நடமாட உதவும் வழிகாட்டி ஊன்றுகோல்கள், பேசும் திறன் கொண்ட அறிவியல் கணிப்பான்கள், சாதாரணப் புத்தகங்களில் உள்ள எழுத்துக்களை உடனடியாக ஒலியாக மாற்றிக் காட்டும் அதிநவீன கருவிகள், புதுப்பிக்கத்தக்க பிரெய்லி காட்சி சாதனங்கள் மற்றும் பிரெய்லி பெட்டகங்கள் ஆகியவை வழங்கப்படவுள்ளன. அதேபோல், கடுமையான செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்குத் தெளிவான ஒலியை வழங்கும் ‘ஹை - ரெஸ் சூப்பர் பவர்’ எண்ணியல் காதொலிக் கருவிகளும், அறிவுசார் குறைபாடுடையவர்களுக்குப் பயன்படும் சிறப்புத் தகவமைப்பு ஆடைகள் மற்றும் பல்வேறு உணர்வுக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் சிறப்பு உபகரணங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பயனடைய மாவட்ட ஆட்சியர் அழைப்பு

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, மேற்கண்ட அதிநவீன உதவி உபகரணங்கள் தேவைப்படும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உடனடியாக விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வேண்டுகோள் விடுத்துள்ளார். விருப்பமும் தகுதியும் உள்ள பயனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அல்லது தனித்துவ அடையாள அட்டை (UDID) மற்றும் அதிகாரப்பூர்வ அடையாளச் சான்றுகள் உள்ளிட்ட உரிய ஆவணங்களின் நகல்களுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரில் அணுகி மனுக்களைச் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு: பிரெயில் பெட்டகம் முதல் ஏஐ கருவிகள் வரை... அரசு வழங்கும் புதிய சலுகைகள்!
மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு: பிரெயில் பெட்டகம் முதல் ஏஐ கருவிகள் வரை... அரசு வழங்கும் புதிய சலுகைகள்!
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
உங்கள் குடும்ப தகவல் பதிவாகிவிட்டதா? மயிலாடுதுறை மக்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு..!
உங்கள் குடும்ப தகவல் பதிவாகிவிட்டதா? மயிலாடுதுறை மக்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு..!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget