மேலும் அறிய

பாம்பு கடித்து சிகிச்சையில் இருந்தவர் உயிரிழப்பு - டாக்டர்கள் அலட்சியம்; உறவினர்கள் குற்றச்சாட்டு..!

நெடுமாறனின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் அரசு மருத்துவமனையில் பாம்பு கடித்து சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சையே இறப்பிற்கு காரணம் என உறவினர் குற்றம்சாட்டி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நாகை மாவட்டம் திருமருகல் வள்ளுவன் தோப்பு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன்  நெடுமாறன். 32 வயதான இவர் ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு விவசாய வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தி வயலுக்கு சென்ற நெடுமாறனை பாம்பு கடித்து உள்ளது. இதனையடுத்து உடனடியாக திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நெடுமாறனை அங்கு உரிய மருந்துகள் இல்லாத காரணத்தினால் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்த அங்கு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 


பாம்பு கடித்து சிகிச்சையில் இருந்தவர் உயிரிழப்பு - டாக்டர்கள் அலட்சியம்;  உறவினர்கள் குற்றச்சாட்டு..!

திருவாரூர் அரசு மருத்துவமனையில் நெடுமாறனுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து நெடுமாறன் நல்ல உடல்நலத்துடன் இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். அதைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவர்கள் பாம்பு கடித்த இடத்தில் பரிசோதனைக்காக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு எவ்வித மயக்க மருந்து மற்றும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் செய்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து நெடுமாறனுக்கு கடுமையான மூச்சு தினறல் ஏற்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து நெடுமாறனின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்தனர். இந்த நிலையில் நெடுமாறனின் தங்கையான இளையா என்பவர் 108 ஆம்புலன்சில் பணிபுரிந்து வருகிறார். அவர் நெடுமாறனுக்கு துணையாக மருத்துவமனையில் இருந்துள்ளார். அலட்சியமாக சிகிச்சை அளித்தனர் எனவும், தட்டி கேட்ட தன்னை திட்டியதுடன் வெளியில் அனுப்பியதாகவும் கூறி இளையா பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


பாம்பு கடித்து சிகிச்சையில் இருந்தவர் உயிரிழப்பு - டாக்டர்கள் அலட்சியம்;  உறவினர்கள் குற்றச்சாட்டு..!

மேலும், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சை அளிக்க முடியாமல் தாய் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சம்பவம் முடிவடைந்து சில நாட்களே ஆன நிலையில் மீண்டும் தற்பொழுது மருத்துவர்களின் அலட்சியத்தின் காரணமாக மற்றொரு உயிர் பிரிந்து இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இதே போன்று விஷயங்களில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Embed widget