மேலும் அறிய

வைகை அணையிலிருந்து 58ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல 58 ம் கிராம பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது வைகை அணை. இந்த அணையின் நீரை கொண்டு மதுரை ,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்காகவும் விவசாய தேவைகளுக்கும் பயன்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வைகை அணையையும் வந்து சேரும், இந்த நிலையில் சென்ற மாதத்தில் இருந்து தற்போது வரை முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனையடுத்து வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.


வைகை அணையிலிருந்து 58ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

மேலும் தேனி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்த நிலையில் வைகை அணையின் நீர்வரத்து கூடுதலாக இருந்து வந்த நிலையில் வைகை அணையின் 71 அடி உள்ள நிலையில் 69 அடியை எட்டிய நிலையில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அணையின்  முழு கொள்ளளவை எட்டியதால் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் வைகை அணை நீர்மட்டம் 67 அடி உயரம் போது 58ம் கால்வாய் மதகு வழியாக தண்ணீர் வெளியேறும் படி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அணை நீர்மட்டம் 69.9 அடியாக உள்ளது.


வைகை அணையிலிருந்து 58ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

இந்த நிலையில் இன்று விநாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இக்கால்வாய் வழியாக நீர் திறக்கப்பட்டதால் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 110 கிராம விவசாயிகள் பலன் பெறும் எனவும் கால்வாய் மூலம் நேரடி பாசனம் இல்லாத நிலையில் 33 கண்மாய்கள் நிரம்பும். இதன் மூலம் நிலத்தடி நீரை கொண்டு விவசாயத்தை தொடர முடியாததால் இன்று முதல் ஒரு மாதத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.


வைகை அணையிலிருந்து 58ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட விவசாய பாசன நிலங்கள் பயன்பெறும் வகையிலும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள விவசாய பாசன நிலங்கள் பயன்பெறும் வகையிலும்  வைகை அணையிலிருந்து 58 கால்வாய் பாசனத்திற்காக 300 கன அடி தண்ணீர் இன்று முதல் நாள் ஒன்றுக்கு 150 கன அடி வீதம் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப இன்றைய தினம் முதல் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட 1912 ஏக்கர் விவசாய நிலங்களும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 373 ஏக்கர் விவசாய நிலங்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 785 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.


வைகை அணையிலிருந்து 58ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

எனவே விவசாய பெருமக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget