மேலும் அறிய
வெள்ளைக்காளி தாயார் பரபரப்பு புகார்: இன்ஸ்டாகிராம் அவதூறால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறி!
குடும்பத்தாருடன் வாழ வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் இருந்து வரும் நிலையில் மீண்டும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்கள் மூலமாக அவதூறு செய்திகளை பரப்பி வரும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

வெள்ளைக்காளி குறித்து அவதூறு
Source : whatsapp
பிரபல ரௌடி வெள்ளைக்காளி குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடும் நபர்களுக்கும் வெள்ளைக்காளிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. தனது மகன் குடும்பத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார். வெள்ளைக்காளியின் தாயார் புகார் மனு.
பிரபல ரௌடியான வெள்ளைக்காளி
மதுரையை சேர்ந்த பிரபல ரௌடியான வெள்ளைக்காளியின் தாயாரான ஜெயக்கொடி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார். தனது மகன் காளிமுத்து (என்ற) வெள்ளைக்காளி தற்போது தண்டனை கைதியாக சிறையில் இருந்துவரும் நிலையில் தனது குடும்பத்தாருடன் நல்லமுறையில் வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் உள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தனது மகன் காளிமுத்து (எ ) வெள்ளைக்காளியின் பெயருக்கு சமூகத்தின் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்திலும் சில நபர்கள் செயல்பட்டு அவதூறு செய்திகள் வீடியோக்களை திட்டமிட்டு பரப்பிவருகின்றனர்.
வீடியோக்களை பரப்பும் நபர்களுக்கும், தனது மகனுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
இந்த நபர்களின் செயல்களினால் தனது மகனின் எதிர்கால வாழ்க்கையும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. மேற்படி அவதூறு வீடியோக்களை பரப்பும் நபர்களுக்கும், தனது மகனுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. தனது மகனின் எதிர்கால வாழ்க்கையை சிதைக்க வேண்டுமென்ற கெட்ட உள்நோக்கத்திலேயே ஒரு சில நபர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். தனது மகன் காளிமுத்து (என்ற) வெள்ளைக்காளி, இனிமேற்கொண்டு தனது குடும்பத்தாருடன் வாழ வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் இருந்து வரும் நிலையில் மீண்டும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்கள் மூலமாக அவதூறு செய்திகளை பரப்பி வரும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
Before You Go
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















