மேலும் அறிய

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! பெட்டிகள் அதிகரிப்பு, டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

தமிழகத்தில் இருந்தும் சில ரயில்கள் இடம்பெற்றிருப்பது பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாக அமைந்துள்ளது.

அதிவேக ரயில் சேவைகளில் ஒன்றான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய வழித்தடங்கள், கூடுதல் பெட்டிகள், பயணிகளுக்கான நவீன அம்சங்கள், தொழில்நுட்ப அப்கிரேட் என அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய அப்டேட் ஒன்று இந்திய ரயில்வே தரப்பில் இருந்து வெளிவந்துள்ளது. ரயில்வே வாரியம் மொத்தம் 7 வழித்தடங்களில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு காரணம் அந்த வழித்தடங்களில் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது தான்.


வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! பெட்டிகள் அதிகரிப்பு, டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்தும் சில ரயில்கள் இடம்பெற்றிருப்பது பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாக அமைந்துள்ளது. கடந்த 31.07.2025 அன்றைய நிலவரப்படி பயணிகள் வருகை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் – நெல்லை
மதுரை – பெங்களூரு கன்டோன்மென்ட்
மங்களூரு சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல்
செகந்திராபாத் – திருப்பதி
தியோகர் – வாரணாசி
ஹௌரா – ரூர்கேலா
இந்தூர் – நாக்பூர்

இதில் இரண்டு ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படுவது கவனிக்கத்தக்கது. சென்னை எழும்பூர் – நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இது 20 பெட்டிகளாக அதிகரிக்கப்படவுள்ளது. இது 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இரு மார்க்கங்களிலும் 20665 / 20666 ஆகிய எண்களை கொண்டதாக இயக்கப்படுகிறது. மொத்தமுள்ள 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் கடந்து விடுகிறது. வாரத்தில் செவ்வாய் தவிர்த்து எஞ்சிய 6 நாட்களும் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படுகிறது. சேர் காரில் 1,680 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 3,065 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சென்னை –நெல்லை வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. டிக்கெட் முன்பதிவில் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக கூறுகின்றனர். மதுரை – பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் தற்போது 8 பெட்டிகள் மட்டுமே உள்ளன. இதனை 16 பெட்டிகளாக அதிகரிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இது 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 573 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி 45 நிமிடங்களில் கடந்து விடுகிறது.


வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! பெட்டிகள் அதிகரிப்பு, டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. வாரத்தில் செவ்வாய் தவிர்த்து எஞ்சிய 6 நாட்களும் இயக்கப்படுகிறது. காலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் சென்றடைகிறது. சேர் காரில் 1,585 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 2,875 ரூபாயும் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கு ஒப்புதல் அளித்தது தொடர்பாக ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில்  கூறப்படுவதாக, புதிய ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் போது பழைய ரயில் பெட்டிகள் விடுவிக்கப்படும். முழுவதும் புதிய பெட்டிகள் இணைக்கப்படும். இதில் கூடுதலான பெட்டிகள் இருக்கும். விடுவிக்கப்பட்ட 16 மற்றும் 8 பெட்டிகள் புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயன்படுத்தி கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget