மேலும் அறிய

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! பெட்டிகள் அதிகரிப்பு, டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

தமிழகத்தில் இருந்தும் சில ரயில்கள் இடம்பெற்றிருப்பது பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாக அமைந்துள்ளது.

அதிவேக ரயில் சேவைகளில் ஒன்றான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய வழித்தடங்கள், கூடுதல் பெட்டிகள், பயணிகளுக்கான நவீன அம்சங்கள், தொழில்நுட்ப அப்கிரேட் என அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய அப்டேட் ஒன்று இந்திய ரயில்வே தரப்பில் இருந்து வெளிவந்துள்ளது. ரயில்வே வாரியம் மொத்தம் 7 வழித்தடங்களில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு காரணம் அந்த வழித்தடங்களில் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது தான்.


வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! பெட்டிகள் அதிகரிப்பு, டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்தும் சில ரயில்கள் இடம்பெற்றிருப்பது பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாக அமைந்துள்ளது. கடந்த 31.07.2025 அன்றைய நிலவரப்படி பயணிகள் வருகை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் – நெல்லை
மதுரை – பெங்களூரு கன்டோன்மென்ட்
மங்களூரு சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல்
செகந்திராபாத் – திருப்பதி
தியோகர் – வாரணாசி
ஹௌரா – ரூர்கேலா
இந்தூர் – நாக்பூர்

இதில் இரண்டு ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படுவது கவனிக்கத்தக்கது. சென்னை எழும்பூர் – நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இது 20 பெட்டிகளாக அதிகரிக்கப்படவுள்ளது. இது 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இரு மார்க்கங்களிலும் 20665 / 20666 ஆகிய எண்களை கொண்டதாக இயக்கப்படுகிறது. மொத்தமுள்ள 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் கடந்து விடுகிறது. வாரத்தில் செவ்வாய் தவிர்த்து எஞ்சிய 6 நாட்களும் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படுகிறது. சேர் காரில் 1,680 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 3,065 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சென்னை –நெல்லை வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. டிக்கெட் முன்பதிவில் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக கூறுகின்றனர். மதுரை – பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் தற்போது 8 பெட்டிகள் மட்டுமே உள்ளன. இதனை 16 பெட்டிகளாக அதிகரிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இது 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 573 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி 45 நிமிடங்களில் கடந்து விடுகிறது.


வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! பெட்டிகள் அதிகரிப்பு, டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. வாரத்தில் செவ்வாய் தவிர்த்து எஞ்சிய 6 நாட்களும் இயக்கப்படுகிறது. காலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் சென்றடைகிறது. சேர் காரில் 1,585 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 2,875 ரூபாயும் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கு ஒப்புதல் அளித்தது தொடர்பாக ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில்  கூறப்படுவதாக, புதிய ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் போது பழைய ரயில் பெட்டிகள் விடுவிக்கப்படும். முழுவதும் புதிய பெட்டிகள் இணைக்கப்படும். இதில் கூடுதலான பெட்டிகள் இருக்கும். விடுவிக்கப்பட்ட 16 மற்றும் 8 பெட்டிகள் புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயன்படுத்தி கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK
தவெகவில் செங்கோட்டையன்?விஜய் வழங்கும் முக்கிய பதவி!OPERATION கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
Sengottaiyan joins DMK | தவெகவா? திமுகவா? செங்கோட்டையன் U TURN!மூத்த அமைச்சர் திடீர் சந்திப்பு ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Heavy Rain: இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.?
இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.? வானிலை மையம் எச்சரிக்கை
Sengottaiyan: அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
Dharmapuri Power Cut (27-11-2025): ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
Embed widget