மேலும் அறிய

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! பெட்டிகள் அதிகரிப்பு, டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

தமிழகத்தில் இருந்தும் சில ரயில்கள் இடம்பெற்றிருப்பது பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாக அமைந்துள்ளது.

அதிவேக ரயில் சேவைகளில் ஒன்றான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய வழித்தடங்கள், கூடுதல் பெட்டிகள், பயணிகளுக்கான நவீன அம்சங்கள், தொழில்நுட்ப அப்கிரேட் என அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய அப்டேட் ஒன்று இந்திய ரயில்வே தரப்பில் இருந்து வெளிவந்துள்ளது. ரயில்வே வாரியம் மொத்தம் 7 வழித்தடங்களில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு காரணம் அந்த வழித்தடங்களில் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது தான்.


வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! பெட்டிகள் அதிகரிப்பு, டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்தும் சில ரயில்கள் இடம்பெற்றிருப்பது பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாக அமைந்துள்ளது. கடந்த 31.07.2025 அன்றைய நிலவரப்படி பயணிகள் வருகை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் – நெல்லை
மதுரை – பெங்களூரு கன்டோன்மென்ட்
மங்களூரு சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல்
செகந்திராபாத் – திருப்பதி
தியோகர் – வாரணாசி
ஹௌரா – ரூர்கேலா
இந்தூர் – நாக்பூர்

இதில் இரண்டு ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படுவது கவனிக்கத்தக்கது. சென்னை எழும்பூர் – நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இது 20 பெட்டிகளாக அதிகரிக்கப்படவுள்ளது. இது 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இரு மார்க்கங்களிலும் 20665 / 20666 ஆகிய எண்களை கொண்டதாக இயக்கப்படுகிறது. மொத்தமுள்ள 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் கடந்து விடுகிறது. வாரத்தில் செவ்வாய் தவிர்த்து எஞ்சிய 6 நாட்களும் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படுகிறது. சேர் காரில் 1,680 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 3,065 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சென்னை –நெல்லை வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. டிக்கெட் முன்பதிவில் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக கூறுகின்றனர். மதுரை – பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் தற்போது 8 பெட்டிகள் மட்டுமே உள்ளன. இதனை 16 பெட்டிகளாக அதிகரிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இது 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 573 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி 45 நிமிடங்களில் கடந்து விடுகிறது.


வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! பெட்டிகள் அதிகரிப்பு, டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. வாரத்தில் செவ்வாய் தவிர்த்து எஞ்சிய 6 நாட்களும் இயக்கப்படுகிறது. காலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் சென்றடைகிறது. சேர் காரில் 1,585 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 2,875 ரூபாயும் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கு ஒப்புதல் அளித்தது தொடர்பாக ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில்  கூறப்படுவதாக, புதிய ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் போது பழைய ரயில் பெட்டிகள் விடுவிக்கப்படும். முழுவதும் புதிய பெட்டிகள் இணைக்கப்படும். இதில் கூடுதலான பெட்டிகள் இருக்கும். விடுவிக்கப்பட்ட 16 மற்றும் 8 பெட்டிகள் புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயன்படுத்தி கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

சிவகங்கை: மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆட்சியர் ஆய்வு!
சிவகங்கை: மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆட்சியர் ஆய்வு!
தமிழ்நாட்டில் வெப்ப அலை: தாமத எச்சரிக்கை ஏன்? அரசுக்கு எம்.பி.யின் அவசர கோரிக்கை!
தமிழ்நாட்டில் வெப்ப அலை: தாமத எச்சரிக்கை ஏன்? அரசுக்கு எம்.பி.யின் அவசர கோரிக்கை!
விருதுநகர் NH 744: நில இழப்பீடு பெறாதோருக்கு சிறப்பு முகாம்!
விருதுநகர் NH 744: நில இழப்பீடு பெறாதோருக்கு சிறப்பு முகாம்!
கோயில் குளத்தில் தண்ணீர் எடுத்தால் பாவம்: கல்வெட்டு கூறும் கங்கை, ராமேஸ்வர பசு கொலைக்கு சமம்!
கோயில் குளத்தில் தண்ணீர் எடுத்தால் பாவம்: கல்வெட்டு கூறும் கங்கை, ராமேஸ்வர பசு கொலைக்கு சமம்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget