மேலும் அறிய
திருப்பரங்குன்றம் மலை: ப்ரைவி கவுன்சில் உத்தரவுக்குப் பிந்தைய விரிவாக்கப் பணிகள் குறித்து அறிக்கை கோரிய உயர் நீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொணர்வது தொடர்பான மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கு.

மதுரைக் கிளை
அரசு தரப்பில் 4 வார கால அவகாசம் கோரப்பட்ட நிலையில், மலை அளவீடு அறிக்கையில் ப்ரைவி கவுன்சிலின் உத்தரவுக்கு பிறகு குறிப்பாக மலை மீது ஏதேனும் விரிவாக்க பணிகள் நடைபெற்றிருந்தால், அது தொடர்பான விபரங்களையும் அறிக்கையில் குறிப்பிட மதுரை அமர்வு உத்தரவு.
திருப்பரங்குன்றம் தொடர்பான மனு
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொணரவும், தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் கோரி வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி புதிதாக மனு அளிக்கவும், அதனை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். ஆனால் எனது மனுவை பரிசீலித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில்," மலையை அளவீடு செய்ததில், சில இடங்களில் முரண்பாடுகள் இருப்பது போல் தோன்றுகின்றது. எனவே அவற்றை மீண்டும் சர்வே செய்ய வேண்டும். ஆகவே அதற்கு 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும்" என கோரப்பட்டது.
விபரங்களையும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும்
அதையடுத்து நீதிபதிகள், மலை அளவீடு அறிக்கையில் ப்ரைவி கவுன்சிலின் உத்தரவுக்கு பிறகு குறிப்பாக மலை மீது ஏதேனும் விரிவாக்க பணிகள் நடைபெற்றிருந்தால், அது தொடர்பான விபரங்களையும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Before You Go
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















