மேலும் அறிய

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ. 300 கோடி மதிப்பில் மாஸ்டர் பிளான் திட்டம் - தமிழக அரசு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விரதம் வழக்கம் போல் வெளிப்புற பிரகாரத்தில் பக்தர்களை அனுமதிக்க கோரிய வழக்கு.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சித்ரங்கநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 2022 அக்டோபர் 25 முதல் 2022 அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும். அக்டோபர் 30ஆம் தேதி சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறும்.
 
கந்த சஷ்டி திருவிழா நடைபெறும் பொழுது பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலின் பிரகாரத்தில் தங்கி விரதம் இருப்பது வழக்கம் இதற்காக அடையாள அட்டை வழங்கப்படும். ஆனால், இந்த வருடம் திருச்செந்தூர் முருகன் கோயிலின் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கவில்லை.
 
இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியது இதில் விரதம் இருப்பவர்களுக்காக கோயிலில் வெளியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காலம் காலமாக நடைபெறும் வழிமுறைகளை மாற்றுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே, திருச்செந்தூர் முருகன் கோயிலின பிரகாரத்தில் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,
 
* தமிழகத்தில் உள்ள கோவில்கள் தனித்துவமானதாகவும் கலை நயத்துடன் மிக்கதாகவும் பழமையான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகவும் திகழ்கின்றன.
 
* மேலும் கோவில்கள் வழிபாடு செய்வதற்கான இடங்களாக மட்டுமல்லாமல் சிற்பங்கள், சிலை ஓவியங்கள், சுவர் ஓவியங்கள் மற்றும் இசை வடிவங்கள் என அசாதாரணங்களில் வெளிப்படுத்தக்கூடிய இடங்களாகவும் இருந்திருக்கின்றன அவை புராதாரங்கள் எனப்படும் வரலாற்று நிகழ்வுகளை பிரதிபலிக்கின்றன அதுமட்டுமல்லாமல்
 
* இந்த நிலத்தின் மொழியை வாழ வைக்கும் கருவியாகவும் உள்ளது ஒவ்வொரு பழங்கால கோவிலிலும் தெய்வத்தை போற்றி பாடல்கள் ஓதுதல், திருமுறை ஓதுதல், தேவ பாடல்கள், நடனம், நாடகம், நாட்டுப்புறக் கதைகள் விவாதங்கள் ஆகியவற்றிற்காக தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன சமூக மட்டும் நாகரிகத்தின் வளர்ச்சியின் கோவில்களில் முக்கிய பங்கு வைக்கின்றன 
 
* ஆனால் தற்பொழுது உள்ள சூழ்நிலைகளில் இங்கு தேவையற்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன தெரிவித்த நீதிபதிகள்
 
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விரதத்தை ஒட்டி விரதமிருக்கும் பக்தர்களுக்காக 18 தற்காலிக இடங்களில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் கோவில் உள்பிரகாரத்திற்குள் தேவையில்லாத நடவடிக்கைகளை தவிர்க்கும் வகையிலும் பக்தர்கள் விரதம் இருக்கவும் அனுமதிக்கப்படவில்லை மேலும் இங்கு யாகம் நடத்தவும் அனுமதிக்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவித்ததை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள். 
 
* எந்தப் பாகுபாடும் இல்லாமல் அமைதியான முறையில் தெய்வ வழிபாடு இருப்பது அவசியம் அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரகாரத்தில் பக்தர்கள் தங்குவது யாகம் நடத்துவதற்கு தடை விதித்துள்ளது கோவில் நிர்வாகம் இதை தொடர்ச்சியாக நீடிக்க வேண்டும் 
 
* மேலும் 300 கோடி மதிப்பில் மாஸ்டர் பிளாண்ட் திட்டம் தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த தகவல் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது எனவே இந்த தொகையை நியாயமாக பயன்படுத்தி பணிகளை விரைவாக முடித்து இந்த பணிகள் பக்தர்களுக்கு பயன்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
 
 
 
 
 
 
 
 

தலைப்பு செய்திகள்

காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !
பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!
பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!
தென் மாவட்ட மருத்துவ கழிவு முறைகேடு: மக்கள் உயிருக்கு ஆபத்து - மருத்துவர்கள் நூதன மனு !
தென் மாவட்ட மருத்துவ கழிவு முறைகேடு: மக்கள் உயிருக்கு ஆபத்து - மருத்துவர்கள் நூதன மனு !

வீடியோ

SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்
வங்கி மேனேஜர் கன்னத்தில் பளார் மு.க.அழகிரி மகள் ஆவேசம்! வெளியான வீடியோ காட்சி!
BAN NEET vs FAIR NEET..மாணவர்களிடையே பிளவு?கைவிடுவதா? தொடர்வதா? குழப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
Embed widget