மேலும் அறிய

Thiruparankundram: முருகனின் முதல் படை வீட்டிற்கு செல்வதால் என்ன சிறப்பு தெரியுமா? முழுசா படியுங்கள் !

சுப்பிரமணியருக்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 15 நாட்கள் தேர் திருவிழா நடைபெறும். கொடியேற்றத் துடன் துவங்கும் இந்த திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்
 
Thiruparankundram: 'குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்' - என்பார்கள். முருகனின் முதல்படை வீடே பெரிய குன்றாக தான் இருக்கிறது. முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக இருக்கக்கூடிய திருப்பரங்குன்றம், மதுரை நகர் பகுதியில் இருந்து சற்று ஏறக்குறைய ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாண்டிய மன்னர்கள் காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட குடவரைக் கோயிலாக அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திகழ்கிறது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸ்தலமாக பார்க்கப்படக்கூடிய நிலையிலே மலையை குடைந்து கர்ப்ப கிரகம் வரை மலைப் பகுதிக்குள்ளேயே இருக்கக்கூடிய ஒரு கோயிலாக இந்த கோவில் இருந்து வருகிறது. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலை பொருத்தவரை சஷ்டியின் போது ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சூரசம்கார நிகழ்வுகளில் கலந்து கொள்வது வழக்கம். அதே போன்று மலையை சுற்றி இருக்கக்கூடிய கிரிவலப் பாதையில் நடைபெறும் தேரோட்டமும், முருகன் கோயிலுக்குள் நடைபெறும் வேல் வாங்கும் நிகழ்வும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திருவிழாக்களில் லட்சக்கணக்கான மக்கள் தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து முருகனின் அருளை பெற்று செல்வது வழக்கம். இவ்வாறாக ஆன்மீக ஸ்தலமாக பார்க்கப்பட்டு வரக்கூடிய திருப்பரங்குன்றத்தில் பல்வேறு தொல்லியல் எட்சங்கள்  நிறைந்திருப்பது இன்றைய இளைய  சமுதாயத்தினருக்கு தெரியாத ஒரு நிலை இருந்து வருகிறது.
 
காசி விசுவநாதர் ஆலயம்
 
முருகன் கோயிலில் இருந்து செல்லக்கூடிய கிரிவல பாதையில் சரவண பொய்கைக்கு அருகிலே அமைந்துள்ளது தான் காசி விஸ்வநாதர் ஆலயம். மலை மேல் இருக்கக்கூடிய இந்த கோயிலுக்கு செல்வதற்காக தனி படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. வற்றாத ஒரு சுனை இங்கே உள்ள நிலையில் விசேஷ நாட்களில் பக்தர்கள் இங்கே சென்று சுவாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் முருகப்பெருமானுடைய வேலுக்கு இங்கே அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் வரும் பக்தர்கள் தவறாது இந்த கோயிலுக்கும் படிக்கட்டுகளிலேயே ஏறி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்துவிட்டு வருகின்றனர். இந்த கோயில் பகுதிகளிலும் வரலாற்று சுவடுகளை தாங்கி நிற்கக்கூடிய சிற்பங்கள் அமையப்பெற்றுள்ளன.
 
குகை கோயில்
 
திருப்பரங்குன்றத்தில் தென்பகுதி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வடக்கு நோக்கி இருந்தாலும் அதனுடைய மறுப்பகுதியான தென்பகுதியிலும் குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. சுற்றிலும் மரங்கள் நிறைந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக அமர்ந்து இளைப்பாறக்கூடிய ஒரு பகுதியாக இருந்தாலும் கிரிவலம் செல்லக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது தான் இந்த குகை கோயில். மலையை குடைந்து குடைவரைக் கோயிலாக காட்சியளிக்கும் இந்த கோயிலில், முருகன் வள்ளி தெய்வானையோடு இருக்கும் சிலைகள் சிதைந்த நிலையில் காணப்படும். நடராஜர் சிலை மற்றும் நவ விநாயகர் சிற்பங்கள், பைரவர் போன்ற அமைப்புடைய சிலைகள் சிதைந்த நிலையில் இருக்கும். விநாயகர் சிலை உள்ளிட்ட  ஏராளமான சிற்பங்கள் இங்கே அமையப்பெற்றுள்ளன.
 
திருப்பரங்குன்றம் தேர் திருவிழா
 
சுப்பிரமணியருக்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 15 நாட்கள் தேர் திருவிழா நடைபெறும். கொடியேற்றத் துடன் துவங்கும் இந்த திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கைபாரம் நிகழ்ச்சி, பவுர்ணமி பங்குனி உத்திரம் நடைபெறும். முக்கிய நிகழ்வாக பட்டாபிஷேகம், அதனை தொடர்ந்து திருக்கல்யாணம் மற்றும் தேர் திருவிழா நடைபெற்று தீர்த்தம் பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும் என்பது குறிப்பிடதக்கது.
 
இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள முருகனின் முதல் படை வீட்டான திருப்பரங்குன்றம் கோயிலுக்கு கண்டிப்பா தரிசனம் செய்யுங்கள்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேடசந்தூரில் ரவுடியின் அட்டகாசம்: மாமூல் தர மறுத்ததால் பட்டாக்கத்தியால் மளிகை கடை மீது தாக்குதல்! CCTV காட்சி வெளியீடு
வேடசந்தூரில் ரவுடியின் அட்டகாசம்: மாமூல் தர மறுத்ததால் பட்டாக்கத்தியால் மளிகை கடை மீது தாக்குதல்! CCTV காட்சி வெளியீடு
திண்டுக்கல்லில் திமுக ஆர்ப்பாட்டம்: மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆவேசம்!
திண்டுக்கல்லில் திமுக ஆர்ப்பாட்டம்: மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆவேசம்!
தமிழக தேர்தல்: திண்டுக்கல், தேனியில் பறக்கும் படை அதிரடி! வாக்காளர்களுக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு!
தமிழக தேர்தல்: திண்டுக்கல், தேனியில் பறக்கும் படை அதிரடி! வாக்காளர்களுக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு!
மானாமதுரை இளைஞர் உயிரிழப்பு: நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்.... குடும்பத்திற்கு ஆறுதல், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
மானாமதுரை இளைஞர் உயிரிழப்பு: நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்.... குடும்பத்திற்கு ஆறுதல், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
FASTag Annual Pass Fee Hike: போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Embed widget